Saturday, September 11, 2021

சந்திராயன் 2 வின் அடுத்த அசத்தல் கண்டுபிடிப்புகள்.

சந்திராயன் 2 வின் அடுத்த அசத்தல் கண்டுபிடிப்புகள்.

நிலவை ஆய்வு செய்து வரும் சந்திரயான்-2 விண்கலம் பல புதிய விஷயங்களை கண்டறிந்து தகவல் அளித்து வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் பரப்பில் குரோமியம், மாங்கனீஸ் ஆகிய தாதுக்கள் படிமங்களாக இருப்பதை சந்திரயான் -2 கண்டறிந்திருப்பதோடு, நீரேற்றம் மற்றும் பனிக்கட்டி வடிவில் நீர் இருப்பதற்கான தெளிவான அறிகுறிகளையும் கண்டறிந்து அனுப்பியுள்ளது. நிலவின் மத்திய மற்றும் உயர் அட்சரேகைப் பகுதுயில் புறகாற்று மண்டலத்தில் ஆர்கன்-40 வாயு இருப்பதை சந்திரயான்-2 கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திரயான்-2 விண்கலம் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 22ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டது. திடீர் தொழில்நுட்ப கோளாறால் விண்கலத்தின் லேண்டர் கலன் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கவில்லை. ஆனால், விண்கலத்தின் மற்றொரு பகுதியான ஆர்பிட்டர், நிலவை சுற்றிந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.




இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...