Friday, July 17, 2026

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி 


ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் முதல் தலைப்பு. 


இன்றைய பொழுதில் வாழ வேண்டும். 


1.நேற்றைய கவலைகளையும் நாளைய பயங்களையும் துறந்து இந்த நொடியில் வாழ்வதே உண்மையான மகிழ்ச்சி ஆகும்.


2.கடந்த காலம் கடந்துவிட்டது, எதிர்காலம் இன்னும் வரவில்லை எனவே நிகழ்காலம் மட்டுமே நம் கையில் உள்ள உண்மை.


3.இன்றைய பொழுதை முழுமையாக ரசித்து வாழும்போது நம் மனதில் அமைதியும் நிம்மதியும் இயல்பாகவே குடியேறும்.


4.ஒவ்வொரு நாளும் நமக்குக் கிடைக்கும் புதிய வாய்ப்பு அதை மகிழ்ச்சியோடு வரவேற்பது நம் கடமையாகும்.


5.தேவையற்ற எதிர்காலத் திட்டமிடல்கள் இந்த நொடியில் நாம் அனுபவிக்க வேண்டிய சின்னச் சின்ன சந்தோஷங்களை பறித்துவிடுகின்றன.


6.இன்று நம்மிடம் இருக்கும் மனிதர்களையும் வாய்ப்புகளையும் மதித்து வாழ பழகிக் கொள்ள வேண்டும்.


7.இன்றைய பொழுதை பயனுள்ளதாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றினால் நம் எதிர்காலம் தானாகவே சிறப்பாக அமையும்.


8.இந்த நொடியில் இருக்கும் நன்மைகளுக்கு நன்றி கூறி வாழ வேண்டும்.


9.வாழ்க்கை என்பது மிகச் சிறியதுஅதை 'நாளைப் பார்த்துக்கொள்ளலாம்' என்று தள்ளிப்போடாமல் இன்றே வாழ வேண்டும்.


10.நிகழ்காலத்தில் விழிப்புணர்வோடு வாழ்வதே நாம் நமக்குக் கொடுத்துக் கொள்ளும் மிகச்சிறந்த பரிசு ஆகும்.

நன்றி.

-Kalaiyarasan- II B.Sc Computer Science, Nehru Memorial College

Monday, June 29, 2026

சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம் மற்றும் இரவு வான்நோக்கல் நிகழ்ச்சி.

சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம் மற்றும் இரவு வான்நோக்கல் நிகழ்ச்சி. 

திருச்சிராப்பள்ளி சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி (தன்னாட்சி) இயற்பியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறையின் வைரவிழா (Diamond Jubilee) கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இயற்பியல் சங்கம், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அறிவியல் கழகம் மற்றும் காக்னிசன்ஸ் (Cognizance) கிளப் சார்பில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கம் மற்றும் இரவு வான் பார்வை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டியின் மாநில செயலாளரும், நேரு நினைவுக் கல்லூரி (தன்னாட்சி) இயற்பியல் துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் P. ரமேஷ் அவர்கள் கலந்து கொண்டு "Journey Through Space" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

தனது உரையில் சூரியக் குடும்பம், கோள்கள் மற்றும் அவற்றின் நிலாக்கள், விண்கற்கள், பிரபஞ்சம் தோன்றிய விதம், நட்சத்திரங்கள் உருவான விதம், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், நட்சத்திரக் கூட்டங்கள், செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட பல்வேறு விண்வெளி அறிவியல் கருத்துகளை எளிமையாகவும் அறிவியல் ஆதாரங்களுடனும் விளக்கினார்.


கருத்தரங்கத்தைத் தொடர்ந்து மாணவிகள் நிலவின் மாதிரி (Moon Model), கோளரங்க (Planetarium) காட்சி மற்றும் மெய்நிகர் விண்வெளி (Virtual Space Show) ஆகியவற்றைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தனர். இந்த அனுபவங்கள் மாணவிகளுக்கு விண்வெளியை நேரில் ஆராய்வது போன்ற உணர்வை ஏற்படுத்தின.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரவு வான் பார்வை நிகழ்ச்சியில், மேம்படுத்தப்பட்ட தொலைநோக்கியின் மூலம் அழகிய நிலா, வெள்ளி (Venus) மற்றும் வியாழன் (Jupiter) ஆகிய வான்பொருட்கள் மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டன. இதில்  400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தொலைநோக்கியின் வழியாக வானியல் பொருட்களைக் கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.




மாணவிகளிடையே வானியல் மற்றும் விண்வெளி அறிவியலின் மீதான ஆர்வத்தை வளர்ப்பது, அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிப்பது மற்றும் விண்வெளி ஆய்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்ற நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவிகள்  கலந்து கொண்டு பயனடைந்தனர். சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியின் வைரவிழா கொண்டாட்டத்தில் நடைபெற்ற இந்த விண்வெளி அறிவியல் நிகழ்ச்சி, மாணவிகளுக்கு மறக்க முடியாத அறிவியல் அனுபவமாக அமைந்தது.


Vision_News || சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் உலக சிறுகோள் தின வானியல் பார்வை நிகழ்ச்சி! - https://trichyvision.com/astronomy-viewing-event-for-world-asteroid-day-at-seethalakshmi-ramaswami-college/


Tuesday, June 9, 2026

வெள்ளி – வியாழன் கோள்களின் அரிய ஒருங்கிணைவு-வலையூர் அரசு மேல்நிலை பள்ளியில் தொலைநோக்கியில் பார்த்த மாணவர்கள்

வெள்ளி – வியாழன் கோள்களின் அரிய ஒருங்கிணைவு-வலையூர்  அரசு மேல்நிலை பள்ளியில் தொலைநோக்கியில் பார்த்த மாணவர்கள்.

மண்ணச்சநல்லூர் அருகே வலையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 9 (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற வானியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், மாணவர்கள் தொலைநோக்கி மூலம் வெள்ளி–வியாழன் கோள்களின் அரிய ஒருங்கிணைவு காட்சியை ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர், மாநில செயலாளர் TASS முனைவர் ரமேஷ் ரமேஷ் கலந்து கொண்டு விண்வெளி குறித்த சிறப்புரை ஆற்றினார். இது மாணவர்களிடையே விண்வெளி அறிவியலின் மீதான ஆர்வத்தை மேலும் அதிகரித்தன. இந்த நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் வெள்ளி கோள், வியாழன் கோள், புதன்கோள் மற்றும் சூரிய கரும்புள்ளி ஆகியவற்றை கண்டு மகிழ்ந்தனர்.  நேரு நினைவுக் கல்லூரி மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவிகள் ஹரிப்பிரியா, மித்ரா மற்றும் பவித்ரா ஆகியோர் மாணவிகளுக்கு இந்த நிகழ்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்தார்கள்.





வானியல் ஆர்வலர்களை கவர்ந்த அரிய வானியல் நிகழ்வாக, சூரிய குடும்பத்தின் மிகப் பிரகாசமான இரண்டு கோள்களான வெள்ளி கோள் மற்றும் வியாழன் கோள் ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மாலை வானில் ஒன்றுக்கொன்று மிக அருகில் தோன்றின. இந்த நிகழ்வு "கோள் ஒருங்கிணைவு" (Planetary Conjunction) என அழைக்கப்படுகிறது. இந்த அரிய வானியல் நிகழ்வு உலகம் முழுவதும் உள்ள வானியல் ஆர்வலர்களையும் பொதுமக்களையும் பெரிதும் கவர்ந்துள்ளது. ஜூன் மாதத்தின் முக்கியமான வானியல் காட்சிகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

வலையூர் அரசு மேல்நிலை பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம்.


வலையூர் அரசு மேல்நிலை பள்ளியில் விண்வெளியில் ஓர் பயணம் என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. தொடக்கத்தில் தலைமையாசிரியர் ஜெயப்ரியா அவர்கள்  அனைவரையும் வரவேற்றார். ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டின் மாநில செயலாளர், நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர்  முனைவர் ரமேஷ் கலந்து கொண்டு விண்வெளி குறித்த சிறப்புரை ஆற்றினார். 

#News||வெள்ளி – வியாழன் கோள்களின் அரிய ஒருங்கிணைவு : தொலைநோக்கியில் பார்த்த அரசுப் பள்ளி மாணவர்கள் https://trichymail.com/rare-conjunction-of-venus-and-jupiter-government-school-students-view-it-through-a-telescope/






இதில் சூரிய குடும்பம், கோள்கள் நிலாக்கள், விண்கற்கள், பிரபஞ்சம் தோன்றிய விதம், நட்சத்திரங்கள் உருவான விதம், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், நட்சத்திர கூட்டங்கள், செயற்கை கோள்கள் போன்ற பல்வேறு விண்வெளி குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியின், மாணவர்கள் நிலவின் மாதிரி மற்றும் செயற்கை விண்வெளி காட்சியை (Virtual Space Show) பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர்.  இந்நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். நேரு நினைவுக் கல்லூரி மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவிகள் ஹரிப்பிரியா, மித்ரா மற்றும் பவித்ரா ஆகியோர் மாணவிகளுக்கு இந்த நிகழ்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்தார்கள்.




















ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி  ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின்...