Thursday, February 5, 2026

கலை திருவிழாவில் மாநில அளவில் மூன்றாம் இடம்-த.பாதர்பேட்டை மாணவனுக்கு பாராட்டு விழா.

கலை திருவிழாவில் மாநில அளவில் மூன்றாம் இடம்-த.பாதர்பேட்டை நடுநிலைப் பள்ளி மாணவனுக்கு பாராட்டு விழா.


இன்று உப்பிலியபுரம் ஒன்றியம் வட்டார வள மையத்தில் தலைமை ஆசிரியர்களுக்கான  கூட்டம் நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்-I எட்வர்டு தேவகுமாரன் ஐயா அவர்கள் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர்-II முபாரக் ஐயா மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சரவணன் அவர்களும்  முன்னிலை  வகித்தார்கள். 


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்றது. களிமண் சுதை வேலைப்பாடு என்ற போட்டியில் உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு பயிலும் வே.தரணீஷ் என்ற மாணவன் மாநில அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


இன்று நடைபெற்ற தலைமையாசிரியர் கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தமிழக அரசால் வழங்கப்பட்ட  சான்றிதழும், ட்ராபியும் வழங்கி மாணவனுக்கும் பள்ளிக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள். உடன் உப்பிலியபுரம் ஒன்றியத்தை சேர்ந்த அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் உடன் இருந்தார்கள்.


பள்ளி தலைமை ஆசிரியர் அசோக்குமார் ஒத்துழைப்பு நல்கினார். இப்போட்டிக்கு அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தனலட்சுமி  அவர்கள் வழிகாட்டினார்.சுப்ரமணியன், ஆனந்தம், சாந்தி, சுதாகர் ஆகியோர் ஒத்துழைப்பு தந்தனர்.


Wednesday, February 4, 2026

ரஷியாவில் அதிசயம்..!ஒரே நேரத்தில் தோன்றிய 4 நிலவுகள்!

ரஷியாவில் அதிசயம்..!ஒரே நேரத்தில் தோன்றிய 4 நிலவுகள்!



ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே நேரத்தில் 4 நிலவுகள் வானில் தென்பட்டன.

இதுதொடர்பான புகைப்படங்களும், விடியோக்களும் இணையத்தை ஆக்கிரமித்து ஆச்சரித்தை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தமுள்ள 8 கோள்களில் புதன் (மெர்குரி) மற்றும் வெள்ளி (வீனஸ்) கோள்களைத் தவிர மற்ற அனைத்திலும் நிலவுகள் உள்ளன. அதிகபட்சமாக வியாழன் (ஜூப்பிடர்)- 97 மற்றும் சனி (சாட்டர்ன்)-274  கோள்களில் அதிகமான நிலவுகள் உள்ளன.

பூமிக்கு ஒரு நிலவு மட்டுமே உள்ள நிலையில், ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் மட்டும் 4 நிலவுகள் ஒரே நேரத்தில் வானில் தென்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனை மாயத்தோற்றம் (Optical Illusion) என்று வானிலை ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நிகழ்வு பாரசெலீன் (Paraselene) அல்லது மூன் டாக் (Moon Dog) என்று அழைக்கப்படுகிறது.

இந்த பாரசெலீன் நிகழ்வு ஒரு அரிய வானிலை நிகழ்வாகும். பூமியில் இருந்து 20,000 அடி உயரத்துக்கு மேல் பனிக்கட்டிகளால் உருவாகும் சிரஸ் மேகக் கூட்டங்கள் வழியாக நிலவின் ஒளி ஊடுருவிச் செல்லும்போது ஏற்படும் ஒளிவிலகலால் இதுபோன்ற போலி நிலவுகள் உருவாவதாக வானிலை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


Monday, February 2, 2026

சேந்தமங்கலம் வேதா லோக வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம்.

சேந்தமங்கலம்  வேதா லோக வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம்.

சேந்தமங்கலம் வேதா லோக வித்யாலயா சிபிஎஸ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டின் மாநில செயலாளர், நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர்  முனைவர் ரமேஷ் கலந்து கொண்டு விண்வெளி குறித்த சிறப்புரை ஆற்றினார்இதில் சூரிய குடும்பம், கோள்கள் நிலாக்கள், விண்கற்கள், பிரபஞ்சம் தோன்றிய விதம், நட்சத்திரங்கள் உருவான விதம், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், நட்சத்திர கூட்டங்கள், செயற்கை கோள்கள் போன்ற பல்வேறு விண்வெளி குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியின், மாணவர்கள் நிலவின் மாதிரி மற்றும் செயற்கை விண்வெளி காட்சியை (Virtual Space Show) பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர்.




தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி நடத்தும் நிறமாலை திருவிழா பற்றியும், ஊசித் துளை கேமரா, பெரிஸ்கோப், கலைடாஸ்கோப், ஸ்பெக்ட்ராஸ்கோப், நிலவின் மாதிரிகள், ஹைராஸ்கோப், குறித்தும் மாணவர்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டது 





நாமக்கல் அஸ்ட்ரோ இணை செயலாளர் துர்கா தொலைநோக்கி தொலைதூர தொலைதூரக் கோபுரம் மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டதுஅனைவரும் தொலைநோக்கியின் வழியாக சூரியனை பார்த்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வானது மாணவ மாணவிகளிடையே வானவியல் பற்றிய அறிவியலை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.



















கலை திருவிழாவில் மாநில அளவில் மூன்றாம் இடம்-த.பாதர்பேட்டை மாணவனுக்கு பாராட்டு விழா.

கலை திருவிழாவில் மாநில அளவில் மூன்றாம் இடம்- த.பாதர்பேட்டை  நடுநிலைப் பள்ளி  மாணவனுக்கு பாராட்டு விழா. இன்று உப்பிலியபுரம் ஒன்றியம் வட்டார வ...