Monday, March 9, 2026

த. பாதர்பேட்டை நடுநிலைப் பள்ளி ஆசிரியர் திருமதி. தனலட்சுமி கோபிநாத் அவர்களுக்கு வைரமணிச் செம்மல் விருது.

த. பாதர்பேட்டை நடுநிலைப் பள்ளி ஆசிரியர் திருமதி. தனலட்சுமி கோபிநாத் அவர்களுக்கு வைரமணிச் செம்மல் விருது.

பசுமை வாசல் பவுண்டேஷன் சின்னாளப்பட்டி திண்டுக்கல் மாவட்டம் நடத்திய உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் சாதனையாளர்களை போற்றும் வகையில் இது பெண் ஆளுமைக்கான இணையதள விருது வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி த. பாதர்பேட்டையில் பணியாற்றி வரும் அறிவியல்  ஆசிரியர் திருமதி.தனலட்சுமி கோபிநாத்  அவர்களுக்கு ஆசிரியர் பணி சேவையைப் பாராட்டி வைரமணி செம்மல்-2026 என்ற விருது சான்றிதழ் இணையதளம் வழியாக மாண்புமிகு எம்பலம் ஆர்.செல்வம் சபாநாயகர் புதுச்சேரி அரசு, கோகுல்நாத் நிறுவனர், முனைவர் தகடூர் சண்முக வடிவேலு ஒருங் கிணைப்பாளர் பசுமை வாசல் பவுண்டேஷன் அவர்களால் வழங்கப்பட்டது.

கிளியனுர்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி- விண்வெளி கருத்தரங்கம்.

கிளியனுர்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி- விண்வெளி கருத்தரங்கம்.


துறையூர் ஒன்றியம் கிளியனுர்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டின் மாநில செயலாளர், நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர்  முனைவர் ரமேஷ் கலந்து கொண்டு விண்வெளி குறித்த சிறப்புரை ஆற்றினார். இதில் சூரிய குடும்பம், கோள்கள் நிலாக்கள், விண்கற்கள், பிரபஞ்சம் தோன்றிய விதம், நட்சத்திரங்கள் உருவான விதம், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், நட்சத்திர கூட்டங்கள், செயற்கை கோள்கள் போன்ற பல்வேறு விண்வெளி குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டார். மாணவிகள் நிலவின் மாதிரி, கோளரங்க காட்சி மற்றும் செயற்கை விண்வெளி காட்சியை (Virtual Space Show) பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர். மாணவ மாணவிகள்  மற்றும் ஆசிரியர்கள்  பங்குபெற்று சிறப்பித்தார்கள்.



நிகழ்ச்சியின், மாணவர்கள் நிலவின் மாதிரி மற்றும் செயற்கை விண்வெளி காட்சியை (Virtual Space Show) பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர்.  இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.






கொத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி- வான்நோக்கல் நிகழ்ச்சி.

கொத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி- விண்வெளி கருத்தரங்கம்.


துறையூர் ஒன்றியம் கொத்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டின் மாநில செயலாளர், நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர்  முனைவர் ரமேஷ் கலந்து கொண்டு விண்வெளி குறித்த சிறப்புரை ஆற்றினார். இதில் சூரிய குடும்பம், கோள்கள் நிலாக்கள், விண்கற்கள், பிரபஞ்சம் தோன்றிய விதம், நட்சத்திரங்கள் உருவான விதம், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், நட்சத்திர கூட்டங்கள், செயற்கை கோள்கள் போன்ற பல்வேறு விண்வெளி குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டார். மாணவிகள் நிலவின் மாதிரி, கோளரங்க காட்சி மற்றும் செயற்கை விண்வெளி காட்சியை (Virtual Space Show) பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர். துறையூர் அஸ்ட்ரோ கிளப்  வாசுதேவன்,  மற்றும் ஆசிரியர்கள்  பங்குபெற்று சிறப்பித்தார்கள்.



நிகழ்ச்சியின், மாணவர்கள் நிலவின் மாதிரி மற்றும் செயற்கை விண்வெளி காட்சியை (Virtual Space Show) பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர்.  இந்நிகழ்ச்சியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

Sunday, March 1, 2026

துறையூர் நகராட்சி பூங்காவில் வான்நோக்கல் நிகழ்ச்சி.

துறையூர் நகராட்சி பூங்காவில் வான்நோக்கல் நிகழ்ச்சி.


இன்று 01.03.2026 அன்று துறையூர் அஸ்ட்ரோ சார்பாக இரவு வான் நிகழ்வில் ஆறு கிரகங்களான புதன், வெள்ளி, வியாழன், சனி , நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கிரகங்களை மேம்படுத்தப்பட்ட தொலைநோக்கியின் மூலமாக  துறையூர் நகராட்சி பூங்காவில் (ஓங்கார குடில்) அருகில் துறையூர் சுற்றுவட்டாரத்தில் 300 மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கண்டுகளித்து ஆர்வத்துடன் ஆறு கிரகங்களின் நேர்கோட்டு நிலைகளை கண்டறிந்தனர். இதற்கான ஏற்பாட்டினை துறையூர் அஸ்ட்ரோ தலைவர் செ.சசிகுமார்  ஆசிரியர் பயிற்றுநர் தலைமையிலும், மகேஸ்வரன் துறையூர் அஸ்ட்ரோ கிளப் செயலாளர் அவர்கள் முன்னிலையும், பொருளாளர் வாசுதேவன், துணை செயலாளர் கலைச்செல்வன், துணைத் தலைவர் சசிகுமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி சிறப்பான ஏற்பாட்டினை செய்து கொடுக்கப்பட்டது. மேலும் புத்தனாம்பட்டி கல்லூரி பேராசிரியர் திரு பி ரமேஷ் அவர்கள் வானோக்கு செயல்பாடுகள் பற்றி பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு செயல்பாடுகளுடன் எடுத்துரைத்தார், இதனை துறையூர் பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ செல்வங்கள் ஆறு கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் செல்வதை பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். குறிப்பாக மாணவ மாணவிகள் வானோக்கு செயல்களை ஆர்வத்துடன் பார்த்து கண்டுகளித்தனர்.









த. பாதர்பேட்டை நடுநிலைப் பள்ளி ஆசிரியர் திருமதி. தனலட்சுமி கோபிநாத் அவர்களுக்கு வைரமணிச் செம்மல் விருது.

த. பாதர்பேட்டை நடுநிலைப் பள்ளி ஆசிரியர் திருமதி. தனலட்சுமி கோபிநாத் அவர்களுக்கு வைரமணிச் செம்மல் விருது. பசுமை வாசல் பவுண்டேஷன் சின்னாளப்பட்...