Friday, February 6, 2026

6 கோள்கள் அணிவகுப்பு பிப்ரவரி 2026-வானில் ஒரு அபூர்வ நிகழ்வு.

 6 கோள்கள் அணிவகுப்பு பிப்ரவரி 2026-வானில் ஒரு அபூர்வ நிகழ்வு.



1. கோள்களின் மகா அணிவகுப்பு (பிப்ரவரி 28)

பிப்ரவரி 28 அன்று இரவு வானில் ஒரு அபூர்வ நிகழ்வு நிகழவுள்ளது. சூரிய குடும்பத்தைச் சேர்ந்த வியாழன், சனி, வெள்ளி, புதன், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து நிற்கப் போகின்றன.
2026-ஆம் ஆண்டு வானியல் ஆர்வலர்களுக்கு ஒரு பொற்காலமாக அமையப்போகிறது. பிரபஞ்சத்தின் ரகசியங்களை ரசிக்கக் காத்திருப்பவர்களுக்காக, இந்த ஆண்டு வானில் அரங்கேறவிருக்கும் ஏழு மிகமுக்கியமான அதிசயங்களை இங்கே விரிவாகப் பார்ப்போம்.
சூரிய குடும்பத்தைச் சேர்ந்த வியாழன், சனி, வெள்ளி, புதன், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் அணிவகுத்து நிற்கப்போகின்றன.
பிப்ரவரி 28 அன்று நிகழும் இந்த அரிய நிகழ்வில், வியாழன், சனி, வெள்ளி மற்றும் புதன் ஆகியவற்றை நாம் வெறும் கண்களாலேயே காண முடியும். ஆனால், யுரேனஸ் மற்றும் நெப்டியூனை 
பார்க்க பைனாகுலர் அல்லது சிறிய தொலைநோக்கி (Telescope) அவசியம். அன்றைய தினம் நிலவு வியாழனுக்கு மிக அருகில் தோன்றி இந்த அணிவகுப்பை இன்னும் அழகாக்கும்.


2. 90% சூரியனை மறைக்கும் அபூர்வ சூரிய கிரகணம் (ஆகஸ்ட் 12)
2026-ன் உச்சகட்ட நிகழ்வு இதுதான். ஆகஸ்ட் 12 அன்று ஐரோப்பாவின் சில பகுதிகளில் முழு சூரிய கிரகணம் தென்படும். இங்கிலாந்து போன்ற நாடுகளில் சூரியனின் 90% பகுதியை நிலவு மறைக்கும். இந்த அரிய வாய்ப்பைத் தவறவிட்டால், மீண்டும் இத்தகைய ஒரு நிகழ்வைப் பார்க்க 2090 செப்டம்பர் வரை காத்திருக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு: சூரிய கிரகணத்தை ஒருபோதும் வெறும் கண்களால் பார்க்காதீர்கள். தரமான 'சோலார் ஃபில்டர்' கண்ணாடிகளைப் பயன்படுத்துங்கள்.
3. மூன்று சூப்பர் மூன்கள் மற்றும் ஒரு 'ப்ளூ மூன்'
நிலவு பூமிக்கு மிக அருகில் வரும்போது வழக்கத்தை விட 15% பிரகாசமாகவும், 30% பெரியதாகவும் தெரியும். 2026-ல் மூன்று சூப்பர் மூன்கள் வருகின்றன:
ஜனவரி: உல்ஃப் மூன் (Wolf Moon) - இது ஏற்கனவே முடிந்துவிட்டது.
நவம்பர் 24: பீவர் மூன் (Beaver Moon).
டிசம்பர் 23: கோல்ட் மூன் (Cold Moon).
அதேபோல், மே 31 அன்று 'ப்ளூ மூன்' (Blue Moon) தோன்றும். ஒரு ஆங்கில மாதத்தில் வரும் இரண்டாவது முழு நிலவையே நாம் ப்ளூ மூன் என்கிறோம். இது இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே நிகழும் அபூர்வம்.
4. வானில் மின்னும் விண்கல் மழைகள் (Meteor Showers)
நட்சத்திரங்கள் வானில் இருந்து உதிர்வது போன்ற காட்சியைப் பார்க்க நான்கு முக்கிய வாய்ப்புகள் உள்ளன:
ஏப்ரல் 22-23: லிரிட்ஸ் விண்கல் மழை.
மே 6-7: எட்டா அக்வாரிட்ஸ்.
ஆகஸ்ட் மத்திய பகுதி: புகழ்பெற்ற 'பெர்சீட்ஸ்'.
டிசம்பர் மத்திய பகுதி: 'ஜெமினிட்ஸ்'. இவற்றைக் காண சிறப்பு உபகரணங்கள் தேவையில்லை; நகர வெளிச்சம் இல்லாத இருட்டான இடமும், பொறுமையும் இருந்தால் போதும்.
5. பகுதி நிலவு கிரகணம் (ஆகஸ்ட் 28)
சூரிய கிரகணம் நடந்த அதே மாதத்தில், ஆகஸ்ட் 28 அன்று நிலவு கிரகணமும் நிகழவுள்ளது. பூமியின் நிழல் நிலவின் மீது விழுவதால், நிலவின் சுமார் 90% பரப்பு இருளால் சூழப்படும். நிலவு கிரகணத்தைப் பார்க்க எந்தப் பாதுகாப்புக் கண்ணாடியும் தேவையில்லை, வெறும் கண்களே போதும்.
6. நடனமாடும் துருவ ஒளிகள் (Northern Lights)
சூரியனின் மேற்பரப்பில் செயல்பாடுகள் (Solar Cycle) உச்சத்தில் இருப்பதால், 2026-ன் முற்பகுதியிலும் அரோரா எனப்படும் துருவ ஒளிகளைப் பார்க்கும் வாய்ப்பு அதிகம். பச்சை, ஊதா மற்றும் சிவப்பு நிறங்களில் வானம் ஜொலிக்கும் இந்தக் காட்சி துருவப் பகுதிகளில் மட்டுமின்றி, இம்முறை பல ஐரோப்பிய நாடுகளிலும் தென்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
7. மொபைலில் படம் பிடிப்பது எப்படி?
இந்த விண்வெளி அதிசயங்களை உங்கள் மொபைலில் படம் பிடிக்கச் சில எளிய டிப்ஸ்:
வானத்தைப் படம் பிடிக்கும்போது ஃபிளாஷ் ஆப்ஷனை ஆஃப் செய்யவும்.
கேமராவில் உள்ள நைட் மோட் வசதியைப் பயன்படுத்தவும்.
மொபைல் சிறிதும் அசையாமல் இருக்க ட்ரைபாட் பயன்படுத்துவது மிகச்சிறந்த புகைப்படங்களைத் தரும்.


Thursday, February 5, 2026

கலை திருவிழாவில் மாநில அளவில் மூன்றாம் இடம்-த.பாதர்பேட்டை மாணவனுக்கு பாராட்டு விழா.

கலை திருவிழாவில் மாநில அளவில் மூன்றாம் இடம்-த.பாதர்பேட்டை நடுநிலைப் பள்ளி மாணவனுக்கு பாராட்டு விழா.


இன்று உப்பிலியபுரம் ஒன்றியம் வட்டார வள மையத்தில் தலைமை ஆசிரியர்களுக்கான  கூட்டம் நடைபெற்றது. 
இக்கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்-I எட்வர்டு தேவகுமாரன் ஐயா அவர்கள் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர்-II முபாரக் ஐயா மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சரவணன் அவர்களும்  முன்னிலை  வகித்தார்கள். 


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாநில அளவிலான கலைத் திருவிழா அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நடைபெற்றது. களிமண் சுதை வேலைப்பாடு என்ற போட்டியில் உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு பயிலும் வே.தரணீஷ் என்ற மாணவன் மாநில அளவில் மூன்றாம் இடத்தைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


இன்று நடைபெற்ற தலைமையாசிரியர் கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தமிழக அரசால் வழங்கப்பட்ட  சான்றிதழும், ட்ராபியும் வழங்கி மாணவனுக்கும் பள்ளிக்கும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்கள். உடன் உப்பிலியபுரம் ஒன்றியத்தை சேர்ந்த அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள் உடன் இருந்தார்கள்.


பள்ளி தலைமை ஆசிரியர் அசோக்குமார் ஒத்துழைப்பு நல்கினார். இப்போட்டிக்கு அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தனலட்சுமி  அவர்கள் வழிகாட்டினார்.சுப்ரமணியன், ஆனந்தம், சாந்தி, சுதாகர் ஆகியோர் ஒத்துழைப்பு தந்தனர்.


Wednesday, February 4, 2026

ரஷியாவில் அதிசயம்..!ஒரே நேரத்தில் தோன்றிய 4 நிலவுகள்!

ரஷியாவில் அதிசயம்..!ஒரே நேரத்தில் தோன்றிய 4 நிலவுகள்!



ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஒரே நேரத்தில் 4 நிலவுகள் வானில் தென்பட்டன.

இதுதொடர்பான புகைப்படங்களும், விடியோக்களும் இணையத்தை ஆக்கிரமித்து ஆச்சரித்தை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தமுள்ள 8 கோள்களில் புதன் (மெர்குரி) மற்றும் வெள்ளி (வீனஸ்) கோள்களைத் தவிர மற்ற அனைத்திலும் நிலவுகள் உள்ளன. அதிகபட்சமாக வியாழன் (ஜூப்பிடர்)- 97 மற்றும் சனி (சாட்டர்ன்)-274  கோள்களில் அதிகமான நிலவுகள் உள்ளன.

பூமிக்கு ஒரு நிலவு மட்டுமே உள்ள நிலையில், ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் மட்டும் 4 நிலவுகள் ஒரே நேரத்தில் வானில் தென்பட்டது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனை மாயத்தோற்றம் (Optical Illusion) என்று வானிலை ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த நிகழ்வு பாரசெலீன் (Paraselene) அல்லது மூன் டாக் (Moon Dog) என்று அழைக்கப்படுகிறது.

இந்த பாரசெலீன் நிகழ்வு ஒரு அரிய வானிலை நிகழ்வாகும். பூமியில் இருந்து 20,000 அடி உயரத்துக்கு மேல் பனிக்கட்டிகளால் உருவாகும் சிரஸ் மேகக் கூட்டங்கள் வழியாக நிலவின் ஒளி ஊடுருவிச் செல்லும்போது ஏற்படும் ஒளிவிலகலால் இதுபோன்ற போலி நிலவுகள் உருவாவதாக வானிலை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


Monday, February 2, 2026

சேந்தமங்கலம் வேதா லோக வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம்.

சேந்தமங்கலம்  வேதா லோக வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம்.

சேந்தமங்கலம் வேதா லோக வித்யாலயா சிபிஎஸ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விண்வெளி கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டின் மாநில செயலாளர், நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர்  முனைவர் ரமேஷ் கலந்து கொண்டு விண்வெளி குறித்த சிறப்புரை ஆற்றினார்இதில் சூரிய குடும்பம், கோள்கள் நிலாக்கள், விண்கற்கள், பிரபஞ்சம் தோன்றிய விதம், நட்சத்திரங்கள் உருவான விதம், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், நட்சத்திர கூட்டங்கள், செயற்கை கோள்கள் போன்ற பல்வேறு விண்வெளி குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியின், மாணவர்கள் நிலவின் மாதிரி மற்றும் செயற்கை விண்வெளி காட்சியை (Virtual Space Show) பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர்.




தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி நடத்தும் நிறமாலை திருவிழா பற்றியும், ஊசித் துளை கேமரா, பெரிஸ்கோப், கலைடாஸ்கோப், ஸ்பெக்ட்ராஸ்கோப், நிலவின் மாதிரிகள், ஹைராஸ்கோப், குறித்தும் மாணவர்களுக்கு தெளிவாக விளக்கப்பட்டது 





நாமக்கல் அஸ்ட்ரோ இணை செயலாளர் துர்கா தொலைநோக்கி தொலைதூர தொலைதூரக் கோபுரம் மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டதுஅனைவரும் தொலைநோக்கியின் வழியாக சூரியனை பார்த்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வானது மாணவ மாணவிகளிடையே வானவியல் பற்றிய அறிவியலை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் 700க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.



















6 கோள்கள் அணிவகுப்பு பிப்ரவரி 2026-வானில் ஒரு அபூர்வ நிகழ்வு.

 6 கோள்கள் அணிவகுப்பு பிப்ரவரி 2026-வானில் ஒரு அபூர்வ நிகழ்வு. 1. கோள்களின் மகா அணிவகுப்பு (பிப்ரவரி 28) பிப்ரவரி 28 அன்று இரவு வானில் ஒரு அ...