Thursday, July 23, 2026

துறையூர் ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் சர்வதேச நிலவு தினம் வான் நோக்கல் நிகழ்ச்சி.

துறையூர்  ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் சர்வதேச நிலவு தினம் வான் நோக்கல் நிகழ்ச்சி.


நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்த ஜூலை 20ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச நிலவு தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு துறையூர் ஆஸ்ட்ரோ கிளப் சார்பாக பொருட்காட்சி திடல் அருகில் வான்நோக்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அழகிய நிலவு மற்றும் வெள்ளிக்கோள் கண்டு மகிழ்ந்தார்கள்.இதற்கான ஏற்பாட்டினை துறையூர் அஸ்ட்ரோ தலைவர் செ.சசிகுமார்  ஆசிரியர் பயிற்றுநர் தலைமையிலும், மகேஸ்வரன் துறையூர் அஸ்ட்ரோ கிளப் செயலாளர் அவர்கள் முன்னிலையும், பொருளாளர் வாசுதேவன், துணை செயலாளர் கலைச்செல்வன், துணைத் தலைவர் சசிகுமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி சிறப்பான ஏற்பாட்டினை செய்து கொடுக்கப்பட்டது. மேலும் புத்தனாம்பட்டி கல்லூரி பேராசிரியர் TASS செயலாளர் முனைவர்  ரமேஷ் அவர்கள் வானோக்கு செயல்பாடுகள் பற்றி பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு செயல்பாடுகளுடன் எடுத்துரைத்தார்.

பொதுமக்களிடையே வானியல் மற்றும் விண்வெளி அறிவியலின் மீதான ஆர்வத்தை வளர்ப்பது, அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிப்பது மற்றும் விண்வெளி ஆய்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்ற நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.









Friday, July 17, 2026

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி 


ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் முதல் தலைப்பு. 


இன்றைய பொழுதில் வாழ வேண்டும். 


1.நேற்றைய கவலைகளையும் நாளைய பயங்களையும் துறந்து இந்த நொடியில் வாழ்வதே உண்மையான மகிழ்ச்சி ஆகும்.


2.கடந்த காலம் கடந்துவிட்டது, எதிர்காலம் இன்னும் வரவில்லை எனவே நிகழ்காலம் மட்டுமே நம் கையில் உள்ள உண்மை.


3.இன்றைய பொழுதை முழுமையாக ரசித்து வாழும்போது நம் மனதில் அமைதியும் நிம்மதியும் இயல்பாகவே குடியேறும்.


4.ஒவ்வொரு நாளும் நமக்குக் கிடைக்கும் புதிய வாய்ப்பு அதை மகிழ்ச்சியோடு வரவேற்பது நம் கடமையாகும்.


5.தேவையற்ற எதிர்காலத் திட்டமிடல்கள் இந்த நொடியில் நாம் அனுபவிக்க வேண்டிய சின்னச் சின்ன சந்தோஷங்களை பறித்துவிடுகின்றன.


6.இன்று நம்மிடம் இருக்கும் மனிதர்களையும் வாய்ப்புகளையும் மதித்து வாழ பழகிக் கொள்ள வேண்டும்.


7.இன்றைய பொழுதை பயனுள்ளதாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றினால் நம் எதிர்காலம் தானாகவே சிறப்பாக அமையும்.


8.இந்த நொடியில் இருக்கும் நன்மைகளுக்கு நன்றி கூறி வாழ வேண்டும்.


9.வாழ்க்கை என்பது மிகச் சிறியதுஅதை 'நாளைப் பார்த்துக்கொள்ளலாம்' என்று தள்ளிப்போடாமல் இன்றே வாழ வேண்டும்.


10.நிகழ்காலத்தில் விழிப்புணர்வோடு வாழ்வதே நாம் நமக்குக் கொடுத்துக் கொள்ளும் மிகச்சிறந்த பரிசு ஆகும்.

நன்றி.

-Kalaiyarasan- II B.Sc Computer Science, Nehru Memorial College

ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான  வழிகாட்டி என்ற புத்தகத்தின் இரண்டாம் தலைப்பு

தனிப்பட்ட மகத்துவத்தை அடைவதற்கான வழிகள்


1. உங்கள் பலம் பலவீனம் மற்றும் தனித்துவமான திறமைகளை முதலில் முழுமையாகப் புரிந்து கொள்ளுங்கள்.


2. வாழ்க்கையில் தெளிவான உயர்ந்த மற்றும் அடையக்கூடிய இலக்குகளை வகுத்துக் கொள்ளுங்கள்.


3. புதிய அறிவையும் திறன்களையும் நாள்தோறும் கற்றுக்கொண்டு உங்களை எப்போதும் புதுப்பித்துக் கொள்ளுங்கள்.

4. காலத்தின் மதிப்பை உணர்ந்து தேவையற்ற விஷயங்களில் நேரத்தை வீணாக்குவதை தவிருங்கள்.


     5.   எதிர்மறை  எண்ணங்களை         நீக்கி எப்போதும் நம்பிக்கையான மற்றும்

நேர்மறையான மனநிலையை வளர்த்துக் கொள்ளுங்கள்.


6. தற்காலிக இன்பங்களைத் தள்ளிவைத்து உங்கள் இலக்கை நோக்கிய தினசரி கடமைகளில் கட்டுப்பாட்டுடன் இருங்கள்.


       7.  சிறந்த    மனதிற்கும் உழைப்பிற்கும் ஆரோக்கியமான உடலே அடிப்படை என்பதால் உடல்நலனைப் பேணுங்கள்.


8. வாழ்க்கையில் உங்களுக்குக் கிடைத்த நல்ல விஷயங்களுக்கு எப்போதும் நன்றியுடையவர்களாக இருங்கள்.


       9.  உங்கள்             வளர்ச்சியோடு நின்றுவிடாமல் பிறர் முன்னேற்றத்திற்கும் சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக வாழுங்கள்.


நன்றி

-Kalaiyarasan- II B.Sc Computer Science, Nehru Memorial College

Monday, June 29, 2026

சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம் மற்றும் இரவு வான்நோக்கல் நிகழ்ச்சி.

சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம் மற்றும் இரவு வான்நோக்கல் நிகழ்ச்சி. 

திருச்சிராப்பள்ளி சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி (தன்னாட்சி) இயற்பியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறையின் வைரவிழா (Diamond Jubilee) கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இயற்பியல் சங்கம், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அறிவியல் கழகம் மற்றும் காக்னிசன்ஸ் (Cognizance) கிளப் சார்பில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கம் மற்றும் இரவு வான் பார்வை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டியின் மாநில செயலாளரும், நேரு நினைவுக் கல்லூரி (தன்னாட்சி) இயற்பியல் துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் P. ரமேஷ் அவர்கள் கலந்து கொண்டு "Journey Through Space" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

தனது உரையில் சூரியக் குடும்பம், கோள்கள் மற்றும் அவற்றின் நிலாக்கள், விண்கற்கள், பிரபஞ்சம் தோன்றிய விதம், நட்சத்திரங்கள் உருவான விதம், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், நட்சத்திரக் கூட்டங்கள், செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட பல்வேறு விண்வெளி அறிவியல் கருத்துகளை எளிமையாகவும் அறிவியல் ஆதாரங்களுடனும் விளக்கினார்.


கருத்தரங்கத்தைத் தொடர்ந்து மாணவிகள் நிலவின் மாதிரி (Moon Model), கோளரங்க (Planetarium) காட்சி மற்றும் மெய்நிகர் விண்வெளி (Virtual Space Show) ஆகியவற்றைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தனர். இந்த அனுபவங்கள் மாணவிகளுக்கு விண்வெளியை நேரில் ஆராய்வது போன்ற உணர்வை ஏற்படுத்தின.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரவு வான் பார்வை நிகழ்ச்சியில், மேம்படுத்தப்பட்ட தொலைநோக்கியின் மூலம் அழகிய நிலா, வெள்ளி (Venus) மற்றும் வியாழன் (Jupiter) ஆகிய வான்பொருட்கள் மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டன. இதில்  400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தொலைநோக்கியின் வழியாக வானியல் பொருட்களைக் கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.




மாணவிகளிடையே வானியல் மற்றும் விண்வெளி அறிவியலின் மீதான ஆர்வத்தை வளர்ப்பது, அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிப்பது மற்றும் விண்வெளி ஆய்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்ற நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவிகள்  கலந்து கொண்டு பயனடைந்தனர். சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியின் வைரவிழா கொண்டாட்டத்தில் நடைபெற்ற இந்த விண்வெளி அறிவியல் நிகழ்ச்சி, மாணவிகளுக்கு மறக்க முடியாத அறிவியல் அனுபவமாக அமைந்தது.


Vision_News || சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் உலக சிறுகோள் தின வானியல் பார்வை நிகழ்ச்சி! - https://trichyvision.com/astronomy-viewing-event-for-world-asteroid-day-at-seethalakshmi-ramaswami-college/


துறையூர் ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் சர்வதேச நிலவு தினம் வான் நோக்கல் நிகழ்ச்சி.

துறையூர்  ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் சர்வதேச நிலவு தினம் வான் நோக்கல் நிகழ்ச்சி. நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்த ஜூலை 20ஆம் தேதி ஒவ்வொரு ஆண்...