Wednesday, February 18, 2026

த. பாதர்பேட்டை, ஊ. ஒ. ந. நி. பள்ளியில் 13 மாணவிகளுக்கு திருக்குறள் முகை விருது.

த. பாதர்பேட்டை, ஊ. ஒ. ந. நி. பள்ளியில் 13 மாணவிகளுக்கு திருக்குறள் முகை விருது.


உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி த.பாதர்பேட்டையில் 13 மாணவிகளுக்கு ஸ்ரீ ராஜ திவ்யபாரதி சமூக அறக்கட்டளை சார்பாக திருக்குறள் முறை விருது வழங்கப்பட்டது. 

உலகப் பொதுமறை நூலான திருக்குறளில், எம் பள்ளி 13 மாணவிகள் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் ஒரு கதை  எழுதினார்கள். இதன் மூலம்  மாணவர்களின் படைப்பாற்றல், கற்பனை திறன் மேம்படுத்தம் விதமாக இந்நிகழ்வு இருந்தது. மாணவர்கள் எழுதிய திருக்குறள் கதை அறமே வரம் என்ற தொகுப்பு நூலில் வெளிவந்துள்ளது. இவர்களின் திறமையைப் பாராட்டி திருக்குறள் முகை விருதிற்கான சான்றிதழ், கேடயம் மற்றும் மெடல் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இக்கால மாணவர்களுக்கு அய்யன் திருவள்ளுவர் எழுதிய நூலில் உள்ள சிறப்பு அதில் உள்ள வாழ்வியல் கருத்துக்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தன் காரணமாக இந்நிகழ்வு அமைந்தது. அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தனலட்சுமி அவர்கள் வழிகாட்டியாகவும், கதை எழுத பயிற்சி அளித்துள்ளார். பள்ளி தலைமை ஆசிரியர் அசோக்குமார் அவர்கள் இந்நிகழ்விற்கு ஒத்துழைப்பு நல்கியுள்ளார். உடன்  சுப்ரமணியன், ஆனந்தம் ஆசிரியர்கள் மாணவிகளை பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.

Sunday, February 15, 2026

வானில் தோன்றும் நெருப்பு வளையம்! எப்போது? பிப்ரவரி 17.

வானில் தோன்றும் நெருப்பு வளையம்! எப்போது? பிப்ரவரி 17.


வானியல் நிகழ்வுகளில்  ஆண்டுதோறும், கிரகங்கள் மாற்றம், சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழ்வது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில், 2026-ம் ஆண்டுக்கான முதல் வானியல் நிகழ்வாக, வரும் பிப்ரவரி 17-ந் தேதி, பிரம்மாண்டமான ‘நெருப்பு வளைய’ (Annular Solar Eclipse) சூரிய கிரகணம் தோன்ற உள்ளது.

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணமான, இந்த அரிய நிகழ்வு முதன்மையாக அண்டார்டிகா கண்டத்திலுள்ள 2 அறிவியல் ஆராய்ச்சி நிலையங்களில் இருந்து தெளிவாகத் தெரியும். இந்திய நேரப்படி, இந்த கிரகணம் செவ்வாய்க்கிழமை மதியம் 12:31 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

அண்டார்டிகாவைத் தவிர்த்து, அர்ஜென்டினா மற்றும் தென்னாப்பிரிக்காவின் சில பகுதிகளில் சூரிய உதயத்திற்குப் பிறகு இதன் பகுதி நேரக் கிரகணத்தைக் காண முடியும். இருப்பினும், இந்தியா உள்ளிட்ட உலகின் பிற பகுதிகளில் இந்த கிரகணத்தைக் காண முடியாது.

வளைய சூரிய கிரகணம் என்றால் என்ன?


சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஆனால், சந்திரன் பூமியை விட்டு தொலைவில் இருக்கும்போது (Apogee), அதன் அளவு சூரியனை விடச் சிறியதாகத் தோன்றும். அந்த நேரத்தில் சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல், அதன் மையப்பகுதியை மட்டும் (96%) மறைக்கும்.

இதனால் சூரியனின் விளிம்புப் பகுதி மட்டும் ஒரு பிரகாசமான மோதிரம் அல்லது 'நெருப்பு வளையம்' போலக் காட்சியளிக்கும். இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது பாதுகாப்பானது அல்ல. பிரத்யேக சூரிய கிரகண கண்ணாடிகளை பயன்படுத்தி மட்டுமே இதைப்பார்க்க வேண்டும். இந்த 'நெருப்பு வளைய' காட்சி அதிகபட்சமாக 2 நிமிடங்கள் 20 வினாடிகள் வரை நீடிக்கும் என்று ஃபோர்ப்ஸ் (Forbes) அறிக்கை கூறுகிறது.

அடுத்தடுத்த கிரகணங்கள் எப்போது?

விஞ்ஞானிகளின் கருத்துப்படி, கிரகணங்கள் எப்போதும் ஜோடியாகவே நிகழும். இந்த சூரிய கிரகணம் நிகழ்ந்த 2 வாரங்களுக்குப் பிறகு, ஒரு முழு சந்திர கிரகணம் நிகழவுள்ளது. இது அமெரிக்கா உள்ளிட்ட வட அமெரிக்கப் பகுதிகளில் தெளிவாகத் தெரியும்.

பிப்ரவரி 2027: சிலி, அர்ஜென்டினா, உருகுவே, பிரேசில், கானா மற்றும் நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் 'நெருப்பு வளைய' கிரகணம் தெரியும்.

2028: ஈக்வடார், பெரு, பிரேசில், மொராக்கோ மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இதைக் காணலாம். ஜனவரி 2030: அல்ஜீரியா, கிரீஸ், துருக்கி, ரஷ்யா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் இந்த நிகழ்வு அரங்கேறும்.

பொதுவாக இந்த கிரகண நிகழ்வுகள் நடைபெறும்போது ஒரு சில நாடுகளில் தெரியும், ஒரு சில நாடுகளில் தெரியாத வகையில் இருக்கும். அந்த வரிசையில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணத்தை இந்தியாவில் காண வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 



Thursday, February 12, 2026

பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம்.

பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம்.



நாமக்கல் பாவை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் ரேவதி  அவர்கள் தலைமை தாங்கி,  சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டின் மாநில செயலாளர், நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர்  முனைவர் ரமேஷ் கலந்து கொண்டு விண்வெளி குறித்த சிறப்புரை ஆற்றினார். இதில் சூரிய குடும்பம், கோள்கள் நிலாக்கள், விண்கற்கள், பிரபஞ்சம் தோன்றிய விதம், நட்சத்திரங்கள் உருவான விதம், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், நட்சத்திர கூட்டங்கள், செயற்கை கோள்கள் போன்ற பல்வேறு விண்வெளி குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டார். மாணவிகள் நிலவின் மாதிரி, கோளரங்க காட்சி மற்றும் செயற்கை விண்வெளி காட்சியை (Virtual Space Show) பார்த்து பெரிதும் மகிழ்ந்தனர்.







தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி நடத்தும் நிறமாலை திருவிழா பற்றியும், ஊசித் துளை கேமரா, பெரிஸ்கோப், கலைடாஸ்கோப், ஸ்பெக்ட்ராஸ்கோப், நிலவின் மாதிரிகள் , ஹைராஸ்கோப், குறித்தும் மாணவிகளுக்கு தெளிவாக விளக்கப்பட்டது. 









நாமக்கல் அஸ்ட்ரோ கிளப் இணை செயலாளர் துர்கா, பொருளாளர் ரம்யா ஆகியோர் தொலைநோக்கி மூலம் தொலைதூரக் கோபுரம் மாணவிகளுக்கு காண்பித்தனர். அனைவரும் தொலைநோக்கியின் வழியாக சூரியனை பார்த்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வானது  மாணவிகளிடையே வானவியல் பற்றிய அறிவியலை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.













த. பாதர்பேட்டை, ஊ. ஒ. ந. நி. பள்ளியில் 13 மாணவிகளுக்கு திருக்குறள் முகை விருது.

த. பாதர்பேட்டை, ஊ. ஒ. ந. நி. பள்ளியில் 13 மாணவிகளுக்கு திருக்குறள் முகை விருது. உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி த.பாதர்...