Showing posts with label TASS Astro Club. Show all posts
Showing posts with label TASS Astro Club. Show all posts

Thursday, July 23, 2026

துறையூர் ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் சர்வதேச நிலவு தினம் வான் நோக்கல் நிகழ்ச்சி.

துறையூர்  ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் சர்வதேச நிலவு தினம் வான் நோக்கல் நிகழ்ச்சி.


நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்த ஜூலை 20ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச நிலவு தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு துறையூர் ஆஸ்ட்ரோ கிளப் சார்பாக பொருட்காட்சி திடல் அருகில் வான்நோக்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அழகிய நிலவு மற்றும் வெள்ளிக்கோள் கண்டு மகிழ்ந்தார்கள்.இதற்கான ஏற்பாட்டினை துறையூர் அஸ்ட்ரோ தலைவர் செ.சசிகுமார்  ஆசிரியர் பயிற்றுநர் தலைமையிலும், மகேஸ்வரன் துறையூர் அஸ்ட்ரோ கிளப் செயலாளர் அவர்கள் முன்னிலையும், பொருளாளர் வாசுதேவன், துணை செயலாளர் கலைச்செல்வன், துணைத் தலைவர் சசிகுமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி சிறப்பான ஏற்பாட்டினை செய்து கொடுக்கப்பட்டது. மேலும் புத்தனாம்பட்டி கல்லூரி பேராசிரியர் TASS செயலாளர் முனைவர்  ரமேஷ் அவர்கள் வானோக்கு செயல்பாடுகள் பற்றி பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு செயல்பாடுகளுடன் எடுத்துரைத்தார்.

பொதுமக்களிடையே வானியல் மற்றும் விண்வெளி அறிவியலின் மீதான ஆர்வத்தை வளர்ப்பது, அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிப்பது மற்றும் விண்வெளி ஆய்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்ற நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.









Monday, June 29, 2026

சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம் மற்றும் இரவு வான்நோக்கல் நிகழ்ச்சி.

சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம் மற்றும் இரவு வான்நோக்கல் நிகழ்ச்சி. 

திருச்சிராப்பள்ளி சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரி (தன்னாட்சி) இயற்பியல் முதுநிலை மற்றும் ஆராய்ச்சித் துறையின் வைரவிழா (Diamond Jubilee) கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இயற்பியல் சங்கம், டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அறிவியல் கழகம் மற்றும் காக்னிசன்ஸ் (Cognizance) கிளப் சார்பில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கம் மற்றும் இரவு வான் பார்வை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டியின் மாநில செயலாளரும், நேரு நினைவுக் கல்லூரி (தன்னாட்சி) இயற்பியல் துறை உதவிப் பேராசிரியருமான முனைவர் P. ரமேஷ் அவர்கள் கலந்து கொண்டு "Journey Through Space" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

தனது உரையில் சூரியக் குடும்பம், கோள்கள் மற்றும் அவற்றின் நிலாக்கள், விண்கற்கள், பிரபஞ்சம் தோன்றிய விதம், நட்சத்திரங்கள் உருவான விதம், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், நட்சத்திரக் கூட்டங்கள், செயற்கைக்கோள்கள் உள்ளிட்ட பல்வேறு விண்வெளி அறிவியல் கருத்துகளை எளிமையாகவும் அறிவியல் ஆதாரங்களுடனும் விளக்கினார்.


கருத்தரங்கத்தைத் தொடர்ந்து மாணவிகள் நிலவின் மாதிரி (Moon Model), கோளரங்க (Planetarium) காட்சி மற்றும் மெய்நிகர் விண்வெளி (Virtual Space Show) ஆகியவற்றைக் கண்டு பெரிதும் மகிழ்ந்தனர். இந்த அனுபவங்கள் மாணவிகளுக்கு விண்வெளியை நேரில் ஆராய்வது போன்ற உணர்வை ஏற்படுத்தின.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரவு வான் பார்வை நிகழ்ச்சியில், மேம்படுத்தப்பட்ட தொலைநோக்கியின் மூலம் அழகிய நிலா, வெள்ளி (Venus) மற்றும் வியாழன் (Jupiter) ஆகிய வான்பொருட்கள் மாணவிகளுக்கு காண்பிக்கப்பட்டன. இதில்  400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தொலைநோக்கியின் வழியாக வானியல் பொருட்களைக் கண்டு வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.




மாணவிகளிடையே வானியல் மற்றும் விண்வெளி அறிவியலின் மீதான ஆர்வத்தை வளர்ப்பது, அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிப்பது மற்றும் விண்வெளி ஆய்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்ற நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவிகள்  கலந்து கொண்டு பயனடைந்தனர். சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியின் வைரவிழா கொண்டாட்டத்தில் நடைபெற்ற இந்த விண்வெளி அறிவியல் நிகழ்ச்சி, மாணவிகளுக்கு மறக்க முடியாத அறிவியல் அனுபவமாக அமைந்தது.


Vision_News || சீதாலட்சுமி ராமசுவாமி கல்லூரியில் உலக சிறுகோள் தின வானியல் பார்வை நிகழ்ச்சி! - https://trichyvision.com/astronomy-viewing-event-for-world-asteroid-day-at-seethalakshmi-ramaswami-college/


Tuesday, March 31, 2026

கண்ணூர் பாளையம் கிராமத்தில் வான்நோக்கல் நிகழ்ச்சி.

கண்ணூர் பாளையம் கிராமத்தில் வான்நோக்கல் நிகழ்ச்சி.

இன்று 31.03.2026 துறையூர் அஸ்ட்ரோ சார்பாக இரவு வான் நிகழ்வில் அழகிய நிலா, வெள்ளி மற்றும் வியாழன் ஆகிய கோள் மேம்படுத்தப்பட்ட தொலைநோக்கியின் மூலமாக  கண்ணூர் பாளையம் கிராமத்தில் சுற்றுவட்டாரத்தில் 100 மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கண்டுகளித்தனர். 



தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டின் மாநில செயலாளர், நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர்  முனைவர் ரமேஷ் கலந்து கொண்டு விண்வெளி குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். துறையூர் அஸ்ட்ரோ கிளப் செயலாளர் மகேஸ்வரன்  முன்னிலை வகித்தார். கல்லூரி மாணவிகள் கிருத்திகா மற்றும் கவுசல்யா நிகச்சியை ஒருங்கிணைத்தார்கள். குறிப்பாக மாணவ மாணவிகள் வானோக்கு செயல்களை ஆர்வத்துடன் பார்த்து கண்டுகளித்தனர்.






















திருச்சி: நிலா, வெள்ளி, வியாழன் கோள்களை கண்டுகளித்த பொதுமக்கள்

இந்த தகவலை முழுமையாக படிக்கவும்: 

16 லட்சம் பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம் குறித்த மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கருத்துக்கள் (Feedback).

16  லட்சம் பார்வையாளர்களை கடந்த நமது மாணவர்கள் கல்விக்களஞ்சியம் குறித்த மாணவ , மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கருத்துக்கள் (Feedback). நமத...