Friday, September 30, 2022

பள்ளி /கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி.

பள்ளி /கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி.


மாணவச்செல்வங்களே! இதோ வந்து விட்டது, நீங்கள் ஆண்டுதோறும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஸ்ரீராம் திருக்குறள் விழா 2022. பள்ளி /கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி மற்றும் ஓவியப் போட்டி. நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இது மட்டுமே. பின்வரும் இணைய முகவரியை சொடுக்குங்கள்: 

Details Application Link

பேச்சுப் போட்டி நடத்தப்படும் முறை:

இடைநிலை / மேல்நிலை / கல்லூரி மாணவ, மாணவியருக்கு இடையே போட்டிகள் நடத்தப்படும்.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அனுப்பவேண்டிய கடைசி நாள்:

அக்டோபர் 10 - 2022

ஏதேனும் ஐயம் இருப்பின் 044-2822 0008 என்ற தொலைப்பேசி எண்ணில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/FaFcmdwPG6yK8uSDjgUvXQ
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

Wednesday, September 28, 2022

நேரு நினைவு கல்லூரியில் முதலுதவி மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி.

நேரு நினைவு கல்லூரியில் முதலுதவி மற்றும் பேரிடர் மேலாண்மை பயிற்சி.

புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரியில் ரோட்டரி சங்கம் சார்பாக ஒரு நாள் பயிற்சி பட்டறை நடைபெற்றது. இப்பயிற்சி பட்டறையில் “முதலுதவி மற்றும் பேரிடர் மேலாண்மை” தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சி 28.09.2022 அன்று நடைபெற்றது. நிகழ்ச்சி காலை 10 மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது. நிகழ்ச்சியில் இளங்கலை வேதியியல் மற்றும் இளங்கலை விலங்கியல் துறை சார்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கல்லூரியின் ரோட்டரி சங்க ஒருங்கிணைப்பாளர் வேதியியல் பேராசிரியர் முனைவர் திரு. எம். ரமேஷ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். பின் கல்லூரியின் தலைவர், செயலர் மற்றும் முதல்வர் அவர்கள் இணைந்து சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினர். கல்லூரியின் முதல்வர் முனைவர். ஏ.ஆர்.பொன் பெரியசாமி அவர்கள் முன்பொரு காலத்தில் புத்தனாம்பட்டியில் வெள்ளம் வந்த வரலாற்றினையும், அதுபோன்ற வெள்ளம் வரும் காலங்களிலும் தீ போன்ற பேராபத்து ஏற்படும் காலங்களிலும் தங்களை பாதுகாத்துக் கொள்வதன் முக்கியத்துவத்தை பற்றியும் தலைமை உரையாற்றினார்.

கல்லூரியின் செயலர் திரு பொன் ரவிச்சந்திரன் அவர்கள் முதலுதவியின் முக்கியத்துவத்தையும் அதன் பயன்களை பற்றியும் கூறினார். மாணவர்கள் இந்த ஒரு நாள் பயிற்சி பட்டறையை பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுரை கூறினார். பெருமாள் மலை ரோட்டரி சங்கம்  தலைவர் திரு. ஞானசேகரன் அவர்கள் வருகை தந்திருக்கும் சிறப்பு விருந்தினர்களையும் கல்லூரியின் தலைவர், செயலர், முதல்வர் மற்றும்   ஒருங்கிணைப்பாளர் அனைவரையும் பெருமாள் மலை ரோட்டரி சங்கம் சார்பாக வரவேற்றார்.

சிறப்பு விருந்தினர் திரு. சிவராமலிங்கம் அவர்கள் முதலுதவியின் தேவைகளையும் முக்கியத்துவத்தையும் பற்றி கூறினார். முதலுதவி செய்யும் போது D R A B C (D -DANGER, R- RESPONSE, A -AIR WAY, B- BREATHING, C- CIRCULATION OF BLOOD)  யை நினைவில் கொள்ளவும் வேண்டினார். மாரடைப்பு ஏற்படும் மனிதருக்கு முதலில் CPR (Cardio Pulmonary Resuscitation) கொடுக்க வேண்டும் என்றும் அந்த மயக்கமுற்ற மனிதரை எவ்வாறு படுக்க வைக்க வேண்டும்  என்பதையும் பற்றி காணொளி மூலமாகவும், மாரடைப்பிற்கான காரணங்களையும் அதற்கான அறிகுறிகள் பற்றியும் மாணவர்களுக்கு தெரிய வைத்தார். வருமுன் காப்பதன்  நடவடிக்கைகளை பற்றியும் அதற்கான மூல காரணங்களை பற்றியும் அதற்காக செய்யவேண்டிய உடற்பயிற்சிகளை பற்றியும் விளக்கினார் .

தீக்காயம், எலும்பு முறிவு, விஷத்தாகம், வலிப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட்டிருக்கும் நிலையில் முதலுதவியில் செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை பற்றி விளக்கினார். அதன் பிறகு சிறப்பு விருந்தினர் திரு. குணசேகரன் அவர்கள் மாணவர்களை புத்துணர்வூட்டும் விதமாக  குழுக்களாக பிரித்து ஒரு குழுவிற்கு ஒரு தலைப்பு கொடுக்கப்பட்டு  அதனைப் பற்றி கேள்விகள் கேட்டார். அந்த தலைப்புகள் பேரிடர்கள் தொடர்பாக கொடுக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக சுனாமி நிலச்சிதைவு சூறாவளி போன்றவை. மாணவர்கள் கொடுக்கப்பட்ட தலைப்பில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு உற்சாகத்துடன் பதில் அளித்தனர். பின் நிகழ்ச்சியின் நோக்கமான முதலுதவி செய்யும் விதத்தினை தன்னார்வலர் மாணவரின் உதவியுடன் செய்முறையாக மாணவர்களுக்கு செய்து காட்டினார். மயக்கம் மாரடைப்பு விபத்து போன்ற பேராபத்து இருக்கும் மனிதர்கள் மீட்கும் விதம் மற்றும் முதலுதவி செய்யும் விதங்களை செய்து காட்டினார். மாணவர்கள் தானே முன்வந்து அவர் செய்த செய்முறைகளை செய்து காட்டினார். பின் மாணவர்கள் அவர்களின் சந்தேகங்களை சிறப்பு விருந்தினர்களிடம் கேட்டு தெளிவுபடுத்திக் கொண்டனர். இறுதியாக இளங்களை வேதியல் மூன்றாம் ஆண்டு மாணவி ஆர்.ஜானகி நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சி நண்பர்கள் 1.30 மணி அளவில் நாட்டுப்பண்ணுடன் நிறைவடைந்தது.



இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/FaFcmdwPG6yK8uSDjgUvXQ
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

Tuesday, September 27, 2022

காரைக்குடி, மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

காரைக்குடி, மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.


திங்கள் கிழமை (26.09.22) காரைக்குடி, மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பார்வையாளர் தினம் கொண்டப்பட்டது. இதில் இதுவரை செய்யப்பட்ட நவீன ஆராய்ச்சிகள் குறித்த கண்காட்சி இடம் பெற்றது.  நேரு நினைவு கல்லூரி இயற்பியல் மற்றும் வேதியியல் துறை சார்ந்த  சுமார் 30 மாணவ, மாணவிகள் ஆராய்ச்சி நிறுவனத்தை பார்வையிட்டனர். அதில் லெட் ஆசிட் பேட்டரி, லித்தியம் அயன் பேட்டரி, சோடியம் அயன் பேட்டரி, மெட்டல் அயன் பேட்டரி, மெட்டல் சல்பர் பேட்டரி,  metal-Air  பேட்டரி, Flow பேட்டரி போன்ற அனைத்து வகையான பேட்டரி குறித்தும், அதன் பயன்கள் மற்றும் தேவைகள் குறித்தும் தெளிவாக ஆராச்சியாளர்கள் எடுத்து கூறினர்.  சூப்பர் மின்தேக்கி மூலம் மின்சார வாகனம் தயாரித்தல் குறித்தும், இதன் மூலம் எதிர்கால எரிபொருள் பயன்பாட்டை சமாளிக்க,   சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க போன்ற பல்வேறு தேவைகள் குறித்தும் தெளிவாக விளக்கினர். பொருட்களின் அரிமான (இரும்புக் மேற்பரப்புகளில் பிடிக்கும் துருவை) விளைவுகளை வேதியியல் முறையில் நீக்க முடியும் எனவும், பல்வேறு கட்டிடங்கள், ராணுவ உபகரணங்கள், பாலங்கள், கப்பல்கள் எவ்வாறு அரிமான இழப்புக்களை தடுக்கிறார்கள் எனவும், புதிய தொழில்நுட்பங்கள் பற்றியும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டது. 

கண்ணாடி பொருட்களை எவ்வாறு அறிய அழகு பொருட்களாக பற்றி செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.  பலவகையான ஆராய்ச்சி பொருட்களை சோதனை செய்யும் உயர் தெளிவுத்திறன் பரிமாற்ற எலக்ட்ரான் நுண்ணோக்கி (HR -TEM),  புல உமிழ்வு ஸ்கேனிங் எலக்ட்ரான் நுண்ணோக்கிகள் (FE-SEM),  X-Ray Powder Diffraction (XRD), Raman Spectrometer, ஃபோரியர்-மாற்றும் அகச்சிவப்பு நிறமாலை (FT-IR), Ultraviolet Visible Spectroscopy (UV-Vis-NIR), Mass spectrometry போன்ற உயர் நிறமாலை கருவிகள் செயல்படும் விதம் தெளிவாக விளக்கப்பட்டது.






இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

Saturday, September 24, 2022

8 கோடி தமிழர்களில் விருது பெற்ற 12 பேர் : புதிய தலைமுறை தமிழன் விருதுகள் 2022.

 புதிய தலைமுறையின் தமிழன் விருதுகள்.



கொரோனாவை விரட்டிய கோவாக்சினின் கோமகள் சுசித்ரா எல்லாவுக்கு புதிய தலைமுறை தமிழன் விருது (தொழில்)!



மாற்று ஆற்றலுக்கான வேள்வியில் சடராய் ஒளிரும் கலைசெல்விக்கு புதிய தலைமுறை தமிழன் விருது!



உதவிக்கரங்களை இணைக்கும் பாலமாக திகழும் Milaap அனோஜ் விஸ்வநாதனுக்கு புதிய தலைமுறை தமிழன் விருது!



நவீனத்துடன் தற்சார்பு நோக்கி தளிர்நடை போடும் விஞ்ஞானி நவீன் கணேசனுக்கு புதிய தலைமுறை தமிழன் விருது



ஒலிம்பிக் ஆடுகளத்தில் தமிழ்த் தடத்தை பதித்த ரேவதி வீரமணிக்கு புதிய தலைமுறையின் தமிழன் விருது!


இந்திய ஹாக்கி அணிக்கு தலைகொடுத்து தங்கம் வென்று வந்த தமிழன் பாஸ்கரனுக்கு புதிய தலைமுறை தமிழன் விருது







இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

வரும் 26ம் தேதி பூமிக்கு அருகே வியாழன் கோள்.

வரும் 26ம் தேதி பூமிக்கு அருகே வியாழன் கோள்.


வரும் 26ம் தேதி பூமிக்கு அருகே வியாழன் கோள் வரவுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தகவல்!

இதற்குமுன் 1963 ஆம் ஆண்டு இது நிகழ்ந்துள்ளதாகவும் இதன்போது வியாழனை சுற்றிவரும் 4 துணைக்கோள்களையும் தொலைநோக்கியின் மூலம் காண இயலும் என்றும் தெரிவித்துள்ளனர்.



இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

Wednesday, September 21, 2022

கர்ணம் மல்லேஸ்வரி விருது பெற்ற மாணவிகள்.

கர்ணம்  மல்லேஸ்வரி விருது பெற்ற மாணவிகள். 


சேலம் நெய்க்காரபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் P. ஜாஸ்மின் மற்றும் A.ரிஸ்வானா பர்வீன் ஆகிய இரு மாணவிகள் ஆசிய அளவிலான வலு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு 47kg, 43Kg பிரிவில் வெள்ளி பதக்கம் வென்று நம் தேசத்திற்கு பெருமை சேர்த்திருந்தனர். 



அரசு பள்ளி மாணவர்களை விளையாட்டு துறைகளில் ஊக்குவிக்கும் விதமாக பள்ளி நிர்வாகம், சேலம் தோழா FM 90.0 MHZ  மற்றும் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சங்கம் சார்பாக  பாராட்டு விழா நடத்தப்பட்டது. விழாவில் சிறப்பு அழைப்பாளராக செல்வி.T. ஆனந்தி, காவல் துணை ஆணையர், திரு.S.சிவரஞ்சன்,DSO , திரு. J.ட்ரவீன் சார்லஸ்டன்,DYO,  R.V.முத்துசாமி, தோழா FM நிர்வாகி ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் மாணவிகளின் பயிற்றுநர் G.பொன்சடையன் அவர்களுக்கு "துரோணாச்சாரியார் விருது" மற்றும் மாணவிகளுக்கு "கர்ணம்  மல்லேஸ்வரி விருதும்"   தோழா FM 90.0 MHZ  சார்பாக வழங்கி கௌரவிக்கப்பட்டது. விழாவை சுவாமி விவேகானந்தர் சங்கம் ஏற்பாடு செய்திருந்தார்கள்.


இதனைத் தொடர்ந்து இதே பள்ளியில் தமிழ் மன்றம், அறிவியல் கண்காட்சி, சுதந்திர தின போட்டிகள் ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும் பரிசு வழங்கி பாராட்டப்பட்டது.



நன்றி: குமரேசன், சுவாமி விவேகானந்தர் இளைஞர் சங்கம்.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

முனைவர் படிப்பு - UGC புதிய அறிவிப்பு.

முனைவர் படிப்பு - UGC புதிய அறிவிப்பு. இது போன்ற தகவல் பெற https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc இந்த Telegram  குழுவில் இணையவும். https://...