Friday, December 30, 2022

UGC-NET தேர்வு 83 பாடங்களுக்கான கணினி வழி தேர்வு தேதி அறிவிப்பு.

UGC-NET தேர்வு 83 பாடங்களுக்கான கணினி வழி தேர்வு தேதி அறிவிப்பு.


இந்தியப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணிக்காகவும் மற்றும் இளையர் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறுவதற்கான தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் தேசிய தகுதித் தேர்வு (NET) தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும்.

2022 டிசம்பர் மாதத்திற்கான தேர்வை 83 பாடங்களுக்குக் கணினி வழி தேர்வாக நடத்தவுள்ளனர். தேர்வுக்கு 2022 டிசம்பர் 29 இல் இருந்து 2023 ஜனவரி 17 ஆம் நாள் வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக்கான கட்டணம் செலுத்த ஜனவரி 18 வரை அவகாசம் உண்டு. பிப்ரவரியில் முதல் வாரத்தில் தேர்வு நிலையங்கள் அறிவிக்கப்படும். அதனைத் தொடர்ந்து, பிப்ரவரி 2 ஆம் வாரத்தில் அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

2023 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 இல் இருந்து மார்ச் 10 வரை தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு https://ugcnet.nta.nic.in/ மற்றும் https://nta.ac.in/ என்ற இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

தேர்வு கட்டணமாக பொது பிரிவினர் ரூம.1,100, General-EWS/OBC-NCL  பிரிவினருக்கு ரூ.550 மற்றும் SC/ST/PwD பிரிவினருக்கு ரூ.275 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

Thursday, December 29, 2022

ஜனவரி மத்தியில் கொரோனா அதிகரிக்கும்? "அடுத்த 40 நாட்கள் மிக முக்கியம்"... மத்திய அரசு எச்சரிக்கை.

ஜனவரி மத்தியில் கொரோனா அதிகரிக்கும்? "அடுத்த 40 நாட்கள் மிக முக்கியம்"... மத்திய அரசு எச்சரிக்கை.





இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Monday, December 26, 2022

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் விளையாட்டு விழா.

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் விளையாட்டு விழா.






புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் 26-12-2022 திங்கள் கிழமை காலை 10 மணி அளவில் விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் அ.ரா பொன் பெரியசாமி அவர்கள், கல்லூரி தலைவர் பொன். பாலசுப்பிரமணியன், கல்லூரிச் செயலர் பொன்.இரவிச்சந்திரன் சிறப்பு விருந்தினர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் (அரசு மருத்துவக் கல்லூரி . இயக்குனர்) தேனி. கலந்துகொண்டு தேசியக் கொடியையும் கல்லூரி கொடியையும் ஒலிம்பிக் கொடியையும் ஏற்றி வைத்து நிகழ்ச்சியைத் தொடங்கினர். நிகழ்வில் கல்லூரி முகமைக் குழு உறுப்பினர்கள் திருமதி மாலா பாலசுப்ரமணியன், திருமதி ஷியாமளா ரவிச்சந்திரன், தேன்மொழி தங்க ராஜா, திறன் மேம்பாட்டு பயிற்சி மைய இயக்குனர் பா. சூர்யா ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு. மீனாட்சி சுந்தரம்அவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியினைச் சிறப்பித்தனர்.


அதனைத் தொடர்ந்து மாணவிகள் ஏழு வண்ணங்களில் சீருடை அணிந்து அணி வகுப்பு நடாத்திக் காட்டினர். பின்னர் வினோத் குமார், கருணாகரன், பூவரசன், மோனிஷா, குரு பிரியா போன்ற மாணவர்கள் ஒலிம்பிக் விளக்குகளை ஏற்றி வைத்து விளையாட்டுத் திடலில் உலா வந்தனர். பின்னர். ஐஸ்வர்யா 1MBA விளையாட்டு உறுதி மொழியைக் கூறினார். நிகழ்வினைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா மூக்கப் பிள்ளைக் கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் அ.ரா. பொன் பெரியசாமி அவர்கள் வரவேற்புரை நல்கினார். உடற்கல்வி இயக்குனர் முனைவர் S. சகாய லதா ராணி அவர்கள் ஓராண்டு கால விளையாட்டு வீரர்களின் சாதனைகளைப் பட்டியலிட்டுக் காட்டினார்.


கல்லூரி தலைவர் பொன் .பாலசுப்பிரமணியன் அவர்கள் தொடக்க விழாப் பேருரை ஆற்றினார். உரையில் மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும். மாணவர்கள் தொடர்ந்து படிப்பதோடு இருந்துவிடாமல் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்று அறிவுரை கூறினார். கல்லூரிச் செயலர் பொன் .ரவிச்சந்திரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். வாழ்த்துரையில் மாணவர்களின் செயல் திறனை கண்டு வியந்து போகிறேன். வரும் காலங்களில் இன்னும் அதிகமான மாணவர்கள் பங்கெடுத்துக் கொண்டு தங்கள் திறமையை வெளிக்காட்ட புத்தனாம்பட்டிக்
கல்லூரி என்றும் தடமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை என்று கூறினார்.




தொடர்ந்து சிறப்பு விருந்தினர் மருத்துவர் A. மீனாட்சி சுந்தரம் பேசுகையில் நாம் யாரோடும் ஒப்பிடக்கூடாது. அவரவர் திறனை அவரே வளர்த்துக் கொள்ள வேண்டும். திட்டமிட்டு செயல்பட வேண்டும். சாலை விதிகளை கடைபிடிக்க தவறக் கூடாது. குறிப்பாக ஹெல்மெட் அணிவதின் அவசியத்தையும் எடுத்துரைத்தார். பின்னர் தொடர்ந்து விளையாட்டில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரூபாய் 25,000 பரிசுத்தொகைகளும் சுழர் கோப்பைகளும் சான்றிதழும் வழங்கப்பட்டன. ஆண்களுக்கான Over all championship பட்டம் மு. வினோத் குமார் இயற்பியல் துறை மாணவனுக்கு வழங்கப்பட்டது. பெண்களுக்கான Over all championship பட்டம் சந்தியா வணிகவியல் துறை மாணவிக்கு வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் முதலிடம் வணிகவியல் துறையும், இரண்டாமிடம் இயற்பியல் துறையும் பெற்றன.


நிகழ்வில் கல்லூரி துணை முதல்வர் முனைவர் குமாரராமன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் திரு செந்தில் குமார் ஆங்கிலத் துறை பேராசிரியர் திரு சந்திரன் அவர்கள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்கள். தமிழாய்வுத்துறை பேராசிரியர் முனைவர் சி பிரபாகரன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
















இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Sunday, December 25, 2022

இன்று விழிப்புடன்‌ இரு--ச. மனோஜினி, NMC.

இன்று விழிப்புடன்‌ இரு-ச. மனோஜினி, NMC.


விழிப்புடன்‌ இரு:.    

இலட்சியம், இளமை, இளைஞன, இன்று இவைகளை பற்றி தெளிவாக காண்போம். இலட்சியம் இல்லாமல் வாழ்க்கை வாழ்வது எண்ணெய் இல்லாத விளக்குப்போன்து. இலட்சியம் என்ற விளக்கை உன் வாழ்வில் ஏற்றிவையுங்கள். உடனடி இலட்சியம், இடைக்கால இலட்சியம், எதிர்கால இலட்சியம் என இலட்சியத்தை மூன்றாக பிரிக்கலாம். 

விடியும் ஒவ்வொறு நாளும் ஒரு இலட்சியம் வைத்துக்கொள்ள வேண்டும். எதிர்கால இலட்சியத்தை நோக்கியே உங்கள் நிகழ்கால இலட்சியம் இருந்தால் நிறைவாகவும் விரைவாகவும் அடையமுடியும்.

இன்று:                                        

 "இன்றைய‌ முயற்சி நாளைய வெற்றி"  என்பதை புரிந்துக்கொண்டு ஒவ்வொறு நாளையும் நல்ல செயலைக் கொண்டு அழகாக்க வேண்டும்.   "இன்று,நாளை, நேற்று"  நேற்று அவன் அப்படி பேசியிருக்க கூடாது என்று வருத்தப்பட்டு ஒரு பலனுமில்லை.  நாளையும் அதே போல வேறு யாரேனும்  அப்படி பேசிவிடக் கூடாது என்று பயம் கொண்டு வாழ்வதில் அர்த்மில்லை. இன்றைய நாளில் என் செயல் நன்றாக இருந்தால்  நாளை என்னைப் பற்றிய விமர்சனம் இருக்க வாயிப்பில்லை. நன்றாக சிந்தித்துப் பாருங்கள் இன்று இக்கணம் நம் கைகளில் உள்ளது அதை சரியாக பயன்படுத்தி நாளைய நாளை நன்றாக மாற்றுங்கள் . "இன்றை விதையுங்கள் நாளை நன்றாக முளைக்கும். ".

இளைஞன்: ‌.   


                     
இன்றைய இளைஞர்கள் நாளைய இந்தியாவின் ஆணி வேர்கள்.      

இளைஞர்களிடம் வீரமில்லையா, பொருமையில்லையா, விவேகம் இல்லையா, திறமை தான் இல்லையா?   எல்லாம் இருந்தும் ஏதே ஒன்று இல்லை. இளையத்தலை முறையை நல்ல வழியில் தூண்டிவிட தான் யாருமில்லை.   


ஒரு விளக்கை ஏற்றினால் போதுமா எந்த இடத்தில் ஏற்றினால் அனையாமல் இருக்குமோ அந்த இடத்தில் தான் விளக்கை ஏற்ற வேண்டும். ஒரு இளைஞனும் அப்படி தான். எறியும் இளைஞனை நல்ல திசையில் தூண்டிவிட வேண்டும். ஆனால் சமூக ஊடகங்கள் இளைய சமூதாயத்தை தவறான பாதையில் திசைத்திருப்பி விடுகிறது. இன்றைய அரசுக்கு இளைஞர்களை எப்படி நல்வழி படுத்துவது, இந்தியாவை இளைஞர்கள் மூலம் எப்படி முன்னேற்றுவது என்று தெரியவில்லை. இன்றைய இளைஞர்கள் படிப்பை முடித்து விட்டு வேலைத்தேடி ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இதனை இளைஞர்கள் உணர்தால் இந்த நிலையை மாற்ற முடியும்.





ச. மனோஜினி, முதலாம் ஆண்டு கணினி பயன்பாட்டியல், நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

  இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

முனைவர் படிப்பு - UGC புதிய அறிவிப்பு.

முனைவர் படிப்பு - UGC புதிய அறிவிப்பு. இது போன்ற தகவல் பெற https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc இந்த Telegram  குழுவில் இணையவும். https://...