Thursday, July 23, 2026

துறையூர் ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் சர்வதேச நிலவு தினம் வான் நோக்கல் நிகழ்ச்சி.

துறையூர்  ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் சர்வதேச நிலவு தினம் வான் நோக்கல் நிகழ்ச்சி.


நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்த ஜூலை 20ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச நிலவு தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு துறையூர் ஆஸ்ட்ரோ கிளப் சார்பாக பொருட்காட்சி திடல் அருகில் வான்நோக்கல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு அழகிய நிலவு மற்றும் வெள்ளிக்கோள் கண்டு மகிழ்ந்தார்கள்.இதற்கான ஏற்பாட்டினை துறையூர் அஸ்ட்ரோ தலைவர் செ.சசிகுமார்  ஆசிரியர் பயிற்றுநர் தலைமையிலும், மகேஸ்வரன் துறையூர் அஸ்ட்ரோ கிளப் செயலாளர் அவர்கள் முன்னிலையும், பொருளாளர் வாசுதேவன், துணை செயலாளர் கலைச்செல்வன், துணைத் தலைவர் சசிகுமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி சிறப்பான ஏற்பாட்டினை செய்து கொடுக்கப்பட்டது. மேலும் புத்தனாம்பட்டி கல்லூரி பேராசிரியர் TASS செயலாளர் முனைவர்  ரமேஷ் அவர்கள் வானோக்கு செயல்பாடுகள் பற்றி பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு செயல்பாடுகளுடன் எடுத்துரைத்தார்.

பொதுமக்களிடையே வானியல் மற்றும் விண்வெளி அறிவியலின் மீதான ஆர்வத்தை வளர்ப்பது, அறிவியல் மனப்பான்மையை ஊக்குவிப்பது மற்றும் விண்வெளி ஆய்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்ற நோக்கத்துடன் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.









No comments:

Post a Comment

துறையூர் ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் சர்வதேச நிலவு தினம் வான் நோக்கல் நிகழ்ச்சி.

துறையூர்  ஆஸ்ட்ரோ கிளப் சார்பில் சர்வதேச நிலவு தினம் வான் நோக்கல் நிகழ்ச்சி. நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் கால் வைத்த ஜூலை 20ஆம் தேதி ஒவ்வொரு ஆண்...