ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி
ராபின் ஷர்மா அவரின் புத்தகமான உச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி என்ற புத்தகத்தின் முதல் தலைப்பு.
இன்றைய பொழுதில் வாழ வேண்டும்.
1.நேற்றைய கவலைகளையும் நாளைய பயங்களையும் துறந்து இந்த நொடியில் வாழ்வதே உண்மையான மகிழ்ச்சி ஆகும்.
2.கடந்த காலம் கடந்துவிட்டது, எதிர்காலம் இன்னும் வரவில்லை எனவே நிகழ்காலம் மட்டுமே நம் கையில் உள்ள உண்மை.
3.இன்றைய பொழுதை முழுமையாக ரசித்து வாழும்போது நம் மனதில் அமைதியும் நிம்மதியும் இயல்பாகவே குடியேறும்.
4.ஒவ்வொரு நாளும் நமக்குக் கிடைக்கும் புதிய வாய்ப்பு அதை மகிழ்ச்சியோடு வரவேற்பது நம் கடமையாகும்.
5.தேவையற்ற எதிர்காலத் திட்டமிடல்கள் இந்த நொடியில் நாம் அனுபவிக்க வேண்டிய சின்னச் சின்ன சந்தோஷங்களை பறித்துவிடுகின்றன.
6.இன்று நம்மிடம் இருக்கும் மனிதர்களையும் வாய்ப்புகளையும் மதித்து வாழ பழகிக் கொள்ள வேண்டும்.
7.இன்றைய பொழுதை பயனுள்ளதாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றினால் நம் எதிர்காலம் தானாகவே சிறப்பாக அமையும்.
8.இந்த நொடியில் இருக்கும் நன்மைகளுக்கு நன்றி கூறி வாழ வேண்டும்.
9.வாழ்க்கை என்பது மிகச் சிறியதுஅதை 'நாளைப் பார்த்துக்கொள்ளலாம்' என்று தள்ளிப்போடாமல் இன்றே வாழ வேண்டும்.
10.நிகழ்காலத்தில் விழிப்புணர்வோடு வாழ்வதே நாம் நமக்குக் கொடுத்துக் கொள்ளும் மிகச்சிறந்த பரிசு ஆகும்.
நன்றி.
- இது போன்ற தகவல் பெற
நன்றி.
முனைவர். P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
