Friday, March 31, 2023

சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய கருந்துளை: என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய கருந்துளை: என்னென்ன விளைவுகள் ஏற்படும்?

சூரியனில் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான துளை போன்ற பகுதி தென்படுவதை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு கொரோனல் துளை (Coronal Hole) என பெயரிட்டுள்ளனர். 

இது பார்ப்பதற்கு சூரியனின் ஒரு பகுதி காணாமற்போனது போன்று தெரிகிறது. இந்த கொரோனல் ஓட்டையை சூரியனின் தென் துருவ பகுதி அருகே கடந்த 23 ஆம் திகதி நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் கண்டறிந்துள்ளது. 

கொரோனல் துளை தோன்றியதால், புவி காந்த புயல்கள் அல்லது சூரியக் காற்று ஏற்படக்கூடும் என அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பான NOAA எச்சரிக்கை விடுத்துள்ளது. 

கொரோனல் துளையில் இருந்து புறப்படக்கூடிய, மணிக்கு 2.9 இலட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய சூரிய காற்றானது பூமியை நோக்கி வரும் என்றும், அது வெள்ளிக்கிழமை (31)  நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் பூமியின் காந்தப்புலம், செயற்கைக்கோள்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் பாதிப்பு ஏற்படுமா என்பதை விஞ்ஞானிகள் உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். 

சூரியனில் ஒரே வாரத்தில் தோன்றிய இரண்டாவது துளை இதுவாகும். சூரியனை ஆய்வு செய்யும் நாசாவின் Solar Dynamics ஆய்வகத்தால் 2 துளைகளும் கண்டறியப்பட்டுள்ளன. கடந்த 23 ஆம் திகதி சூரியனின் தென்துருவ பகுதியில் ஒரு துளை கண்டறியப்பட்டது. 

கொரோனல் துளைகள் என்பது அதிவேக சூரிய காற்றின் ஒரு ஆதாரமான காந்த பகுதிகளாகும். தீவிர புற ஊதா ஒளியின் பல அலை நீளங்களில் பார்க்கும்போது அவை இருட்டாகத் தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 





இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒரே பாடத்திட்டம் - உயர் கல்வித்துறை.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒரே பாடத்திட்டம் - உயர் கல்வித்துறை.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை அமல்படுத்தத் தமிழ்நாடு உயர் கல்வித்துறை முடிவு செய்துள்ளது என்று பாடத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் பேராசிரியர் ராமசாமி பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கல்லூரி பாடத்திட்டம் குறித்துப் பாடத்திட்ட வடிவமைப்பு குழு தலைவர் பேராசிரியர் ராமசாமி அளித்த பேட்டியில், அனைத்து கலை மற்றும் கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை உயர்கல்வி துறை அமல்படுத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வரும் கல்வி ஆண்டான ஜூன் முதல் இந்த புதிய பாடத்திட்டம் அமலுக்கு வரும் என்று கூறியுள்ளார்.

இந்த புதிய பாடத்திட்டத்தின் படி, 75 சதவிகிதம் பாடப்பகுதிகள் பாடத்திட்ட வடிவமைப்பு குழுவின் பாடத்திட்டத்தினையும், 25 சதவிகிதம் கல்லூரிகள் தாங்களே சொந்தமாகப் பாடத்திட்டத்தையும் வடிவமைத்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

தற்போது நடைமுறையில் உள்ள பாடத்திட்டத்தை மாற்றியமைக்கத் தமிழக அரசால் தமிழ்நாடு உயர்கல்வி மன்ற தலைவர் பேராசிரியர் ராமசாமி தலைமையில் மாநில பாடத்திட்ட வடிவமைப்பு குழு நியமிக்கப்பட்டது. கடந்த ஓராண்டாகப் பாடத்திட்ட வடிவமைப்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பணிகள் நிறைவடைந்துள்ளது. இளங்கலையில் 69 பட்டப்படிப்புகளும், முதுகலையில் 86 பட்டப்படிப்புகள் என மொத்தம் 155 பட்டப்படிப்புகளுக்கு புதிய பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Wednesday, March 29, 2023

மகேந்திரகிரி இஸ்ரோ வேலை வாய்ப்பு.

மகேந்திரகிரி இஸ்ரோ வேலை வாய்ப்பு.


நெல்லை மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு; 63 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவின் கீழ் நெல்லை மகேந்திரகிரியில் செயல்பட்டு வரும் இஸ்ரோ உந்தும வளாகத்தில் தொழில்நுட்ப உதவியாளர், தொழில்நுட்ப வல்லுனர், ஓட்டுனர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 63 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 24.04.2023.

Technical Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை – 24

காலியிடங்களின் விவரம் : Mechanical – 15, Electronics & Communication – 4, Electrical – 1, Computer Science – 1, Civil – 3

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 44,900

Technician ‘B’

காலியிடங்களின் எண்ணிக்கை – 30

காலியிடங்களின் விவரம்: Fitter – 20, Electronic Mechanic – 3, Welder – 3, Refrigeration & AC – 1, Electrician – 2, Plumber – 1

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 21,700

Draughtsman ‘B’

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : சம்பந்தப்பட்ட பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 21,700

Heavy Vehicle Driver ‘A’

காலியிடங்களின் எண்ணிக்கை – 5

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,900

Light Vehicle Driver ‘A’

காலியிடங்களின் எண்ணிக்கை – 2

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகுரக வாகன ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,900

Fireman ‘A’

காலியிடங்களின் எண்ணிக்கை – 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 19,900

வயதுத் தகுதி: 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறனறித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://career.iprc.gov.in/recruit/advt.jsp என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.04.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.iprc.gov.in/iprc/files/careers/Detailed%20Notification%20English.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Monday, March 27, 2023

இன்று ஒரே வரிசையில் 5 கிரகங்கள்...வானில் நிகழும் அதிசயம்..!

இன்று ஒரே வரிசையில் 5 கிரகங்கள்...வானில் நிகழும் அதிசயம்..!

அந்தி மாலையில் சூரிய அஸ்தமனத்திற்குப்பிறகு தொடுவானத்தின் மேற்கு பக்கத்தில் 5 கிரகங்கங்களின் அணிவகுப்பை நாம் வெறும் கண்ணால் பார்க்கலாம். அதில் நமது கண்களுக்கு வரிசையாக குரு, சுக்கிரன். செவ்வாய், புதன், யுரேனஸ், கூடவே சந்திரனையும் பார்க்கலாம்.

சில தினங்களுக்கு முன்பாக வானத்தில் சந்திரனும், சுக்கிரனும் அருகருகே வானத்தில் பிரகாசமாக ஜொலித்ததை பலரும் பார்த்து ரசித்தனர். இந்த வாரத்தில் நாளைய தினம் 5 கிரகங்கள் ஒரே வரிசையில் இருப்பதை காண முடியும்.

சூரியன் அஸ்தமனத்துக்கு பிறகு மேற்கு தொடுவானை உற்றுக் கவனிக்க வேண்டும் என்று நாசா விண்வெளி ஆய்வாளர் பில் குக் குறிப்பிட்டுள்ளார்.

ராசி மண்டலத்தில் இன்றைய தினத்தில் கும்ப ராசியில் சனி, மீன ராசியில் சூரியன், புதன், குரு, மேஷ ராசியில் ராகு, சுக்கிரன், ரிஷப ராசியில் சந்திரன், மிதுனராசியில் செவ்வாய் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. துலாம் ராசியில் கேது பயணம் செய்கிறார். இந்த கிரகங்களின் வரிசையை நாளை வானத்திலும் தெளிவாக வெறும் கண்களில் காணலாம். சூரியன் மறைந்த அரைமணி நேரத்திற்குள் இந்த கிரகங்களின் வரிசை பார்த்து ரசிக்கலாம். அப்போது செய்யும் வேண்டுதலுக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

மேற்குப்பகுதியில் வானம் தௌிவாக இருக்கும்போது உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் இந்த 5 கிரக வரிசையை பார்த்து ரசிக்கலாம். வியாழன், வெள்ளி, செவ்வாய் கிரகங்கள் பிரகாசமானவை என்பதால் அவற்றை தெளிவாக பார்த்து ரசிக்கலாம். சந்திரனும் அருகில் இருக்க நாம் பிரகாசமாக ஒளிரும் கிரகங்களைப் பார்க்கலாம்

செவ்வாய் அருகில் நிலவு அதிலும் செவ்வாய் கிரகம் செந்நிறத்தில் நிலவுக்கு அருகில் இருப்பதை பார்க்கலாம். யுரேனஸ், புதன் கிரகங்களையும் சுக்கிரனுக்கு மேலே பச்சையாக ஒளிர்வதை பார்க்கலாமாம். கடந்த ஆண்டு கோடைகாலத்தில் 6 கிரகங்கள் அதிகாலையில் கிழக்குப் பகுதியில் வரிசையாக தோன்றின. இப்போது மேற்கில் 5 கிரகங்கள் வரிசையாக தோன்றப்போகின்றன.



.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

முனைவர் படிப்பு - UGC புதிய அறிவிப்பு.

முனைவர் படிப்பு - UGC புதிய அறிவிப்பு. இது போன்ற தகவல் பெற https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc இந்த Telegram  குழுவில் இணையவும். https://...