Thursday, August 5, 2021

✍🏻🌕🌕இயற்கை வாழ்வியல் முறை🌕🌕 உருளைக்கிழங்கின் நன்மைகள்.

✍🏻🌕🌕இயற்கை வாழ்வியல் முறை🌕🌕 உருளைக்கிழங்கின் நன்மைகள்.

🌕🌕🌕🌕🌕

உருளைக் கிழங்கு ஓர் உன்னதமான ஊட்டச்சத்து மிக்க உணவு ஆகும்.  உருளைக் கிழங்கின் இலை இசிவு நோயை அகற்றக் கூடியது. மலத்தை இளக்கக் கூடியது, சிறந்த சிறுநீர்ப் பெருக்கி, சிறந்த நரம்பு வெப்பு அகற்றி உருளைக் கிழங்கை உணவாகக் கொள்வதால் உடல் நலம் பேணிக்காக்கப்படுகிறது.

🌕🌕🌕🌕🌕

உருளைக் கிழங்கில் உள்ள “ஸ்டார்ச்” எனப்படும் மாவுச் சத்து குடலுக்கு இதம் தந்து மலச்சிக்கலை மறையச் செய்யும் நார்ச்சத்து போன்ற செயலை உடையது. இது மலத்தை உறையச் செய்கிறது. மலத்தை வெளித்தள்ள உதவுவதால் மலக்குடலில் ஏற்படும் புற்று நோய்க்கு தடை போடுகிறது. ரத்தத்தில் சேறும் கொழுப்புச் சத்தை “டிரைகிளிசனாட்ஸ்” என்னும் இதய ரத்த நாளங்களுக்கு ஊறு செய்யும் கொழுப்புச்சத்து சேர்வது தவிர்க்கப்பெறுகிறது.

🌕🌕🌕🌕🌕

பச்சை உருளைக் கிழங்கை அரைத்து மேற்பற்றாகப் போடுவதால் தீக்காயங்கள், தீக் கொப்புளங்கள், பனிவெடிப்பு, பாத குதிக்காலில் தோன்றும் வெடிப்பு, புண்கள், கண் இமைகளின் கீழ்த்தோன்றும் வீக்கங்கள் ஆகியன குணமாகும்.

🌕🌕🌕🌕🌕

பச்சை உருளைக் கிழங்கை தோலுடன் சிறுசிறு துண்டுகளாக்கி உடன் சிறிது நீர்விட்டு அரைத்து சாறு எடுத்து அதைக் கொண்டு தினமும் முகத்தைக் கழுவி வருவதால் முகம் பளபளப்படையும் முகச் சுருக்கங்களும் கரும்புள்ளிகளும் மறைந்து போகும். இளமையான தோற்றத்தையும் அது தரும்.

🌕🌕🌕🌕🌕

பச்சை உருளைக் இரு துண்டுகளாக குறுக்கே வெட்டி அதன் சதைப் பகுதியை நெற்றிப் பொட்டுகளின் இருபுறமும் சற்று மென்மையாக அழுத்தித் தேய்ப்பதால் தலைவலி குணமாகும். குறிப்பாக மன உளைச்சலால் வருகின்ற தலைவலி தணியும்.

🌕🌕🌕🌕🌕

உருளைக் கிழங்கைப் போதிய அளவு வில்லையாகத் துண்டித்து இரண்டு கண்களின் மேலேயும் வைத்துக் கொண்டு சிறிது நேரம் அமைதியாக கண்களை மூடிக் கொண்டு அமர்ந்திருக்க கண் சிவப்பு, கண் எரிச்சல் கண்களில் ஏற்படும் சோர்வு காணமற் போகும்.

🌕🌕🌕🌕🌕

வயிற்றில் சுரக்கும் அமிலம் இரவு நேரத்தில் நம் தூக்கத்தைக் கெடுக்கக் கூடியதாக இருக்கும். வயிற்றில் எரிச்சல், வயிற்று உப்பிசம் உடையவர்கள் நன்கு வேகவைத்து மசித்து ஒரு உருளைக் கிழங்கைச் சூடான பாலுடன் சேர்த்து பருகுவதால் அமிலச்சுரப்பு மட்டுப்பட்டு தூக்கம் அமைதியான உணர்வு உண்டாகும்.

🌕🌕🌕🌕🌕

சமீபகால ஆய்வுகள் மூலம் பச்சை உருளைக் கிழங்கின் சாற்றை பருகுவதன் மூலமும் உருளைக் கிழங்கினை வேகவைத்த நீரைப் பருகுவதன் மூலமும் மூட்டு வலிகள், வாத வீக்கம் ஆகியன குணமாகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது. உருளைக் கிழங்கு சாறு, உருளைக் கிழங்கு வேக வைத்த நீர் பருகுவதால் அதில் பொதிந்திருக்கும் பொட்டாசியம், சல்பர் பாஸ்பரஸ் குளோரைட் ஆகியனவும் விட்டமின் சி” சத்தும் என்ஸைம்கள்” என்னும் வேதிப் பொருள்களும் தோலுக்கு ஆரோக்கியம் தருவதோடு மிக்க பொலிவையும் பளபளப்பையும் உண்டாக்குகிறது. மேல்பூச்சாக பூசுவதால் தோலின் இறந்த திசுக்களை அகற்றி விட்டு புதிய திசுக்களை வளரச் செய்யும் உரமாகிறது. பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவையும் காணாமல் போகின்றன.

🌕🌕🌕🌕🌕

உருளைக்கிழக்கு சாறு பருகுவதனாலும் மேல் பற்றாகப் போடுவதனாலும் கண்களின் கீழே நீர் கோர்த்துக் கொண்டு நீர்ப்பை போல தோன்றுகின்ற வீக்கம் வற்றிப் போகும். கண்களுக்கு குளிர்ச்சியும் புத்துணர்வும் ஏற்படும்.

🌕🌕🌕🌕🌕

உருளைக்கிழங்கு சாறு தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் நீண்ட நாட்பட்ட மலச்சிக்கல் குடலில் நச்சுக்கள் பெருகி அதனால் ஏற்படும் ரத்த அழுத்தம் டினல் டோக்ஸிமியா தவிர்க்கப்படுகிறது. பொதுவாக கருவுற்ற தாய்மார்களுக்கு இதுபோன்ற ரத்த அழுத்தம் ஏற்படுவது இயற்கையாகும். மேலும் மூட்டுக்களில் வாத நீர் தேங்கி வீக்கமும், வலியும் உண்டாக்குகின்ற “கவுட்” என்னும் நோய், சிறுநீரகக்கற்கள், மற்றும் நீரேற்றம் ஆகியனவும் பல மாதங்கள் தொடர்ந்து உருளைக்கிழங்கு சாறு குடிப்பதால் குணமாகிறது என்பது ஆய்வுகள் மூலம் நிரூபணமாகியுள்ளது

🌕🌕🌕🌕🌕

உருளைக்கிழங்கு ஸ்கர்வி என்னும் ரத்தப் போக்கை உண்டாக்கும் நோய்க்கு மிகச்சிறந்த தீர்வு ஆகும். “ஸ்கர்வி” என்னும் நோய் விட்டமின் சி சத்து குறைபாட்டால் ஏற்படும் ஓர் நோய் ஆகும். இதனால் ஈறுகளினின்று எளிதில் ரத்தம் வெளியேறுதல் அல்லது எங்கேனும் அடிபட்ட போது அதிக ரத்தப்போக்கு ஆகியன உண்டாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் “ஸ்கர்வி” நோய்க்கு உருளைக்கிழங்கு சாறு அல்லது உருளைக்கிழங்கு அரைத்து பசையாக உள்ளுக்குப் கொடுப்பது ஓர் நல்ல தீர்வாகும். புளிக்காய் உண்பது ஸ்கர்வி நோய்க்கு மிகவும் சிறந்தது என்று ஏற்கனவே நாம் பார்த்ததை இங்கே நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.

🌕🌕🌕🌕🌕

அரை கப் உருளைக்கிழங்கு சாறு இரண்டு அல்லது மூன்று வேளை ஒரு நாளைக்கு என உணவுக்கு முன் எடுப்பதால் வயிறு மற்றும் இரையறைக் கோளாறுகள் விலகிப் போகின்றது. வாயு, அமிலம், வயிற்றுப்புண்கள் குணமாகிறது.

🌕🌕🌕🌕🌕

உருளைக் கிழங்கு தோலைக் கொண்டு தேநீர் செய்து சாப்பிடுவதால் பித்தப்பை சம்பந்தமான தொல்லைகள் போக்கி ஈரலை பலப்படுத்தி உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

🌕🌕🌕🌕🌕

உருளைக்கிழங்கு சாப்பிட்டால் பருமனாகிவிடுவோம் என்பது தவறு குறைவான அளவு எண்ணெய் சேர்த்தால் ஒன்றும் குற்றம் வராது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

🌕🌕🌕🌕🌔

உருளைக்கிழங்குகள் அதிக அளவு கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் பெற்றிருக்கின்றன. அதே நேரம் மிகக் குறைந்த அளவிலேயே கொழுப்பு சத்துக்களை கொண்டதாக இருக்கின்றன. இத்தகைய உருளைக்கிழங்குகள் பாலாடைக்கட்டி, வெண்ணை சேர்த்து சமைக்கப்பட்டு உண்ணப்படும் போது மனிதர்கள் குறுகிய காலத்திலேயே உடல் எடை அதிகரித்து ஆரோக்கியமான நிலையை அடைவார்கள். உருளைக்கிழங்கில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் மற்றும் விட்டமின் சி சத்துக்கள் ஆகியவை இருக்கின்றன. உடலில் கார்போஹைட்ரேட் சத்துக்களை அதிகம் தந்து விரைவில் உடல் மற்றும் மன சோர்வு ஏற்படாமல் தடுக்கிறது. எனவே தான் விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் உருளைக்கிழங்குகளை சாப்பிட அறிவுறுத்தப்படுகின்றனர்

🌕🌕🌕🌕🌕

மனித இதயம் சீராக செயல்படுவதற்கு பொட்டாசியம் சத்து ஒரு அவசியத் தேவையாக இருக்கிறது. உருளைக்கிழங்கில் பொட்டாசியம் சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இந்த பொட்டாசியம் உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்படாமல் தடுக்கிறது. இதய நலத்திற்கும் பொட்டாசியம் சத்து மிகவும் அவசியமாகிறது. ரத்த அழுத்தத்தை சீரான நிலையில் வைத்து இதயத்திற்கு சரியான அளவில் ரத்தம் சென்று வர உருளைக்கிழங்கில் நிறைந்திருக்கும் பொட்டாசியம் அதிகம் உதவுகிறது. இதயம் ஆரோக்கியமாக இயங்கவும், இதய நோய்கள் வராமல் தடுக்கவும் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இருமுறை உருளைக்கிழங்குகள் உணவுகளை சாப்பிடுவது நன்மையை ஏற்படுத்தும்

🌕🌕🌕🌕🌕

அன்றாடம் உண்ணும் உணவான உருளை கிழங்கிலும், சில தீமைகள் உள்ளது. ஆனால் இது குறித்து யாரும் தெரிந்துக்கொள்வதில்லை. சாதாரணமாக உருளை கிழங்கு ஒரே நிறத்தில் இருந்தால் அதில் எந்த ஆபத்தும் இல்லை. அதற்கு மாறாக, உருளை கிழங்கு பச்சை நிறத்தில் மாறி இருந்தால் அதை சாப்பிடக்கூடாது. இதில் தான் ஒளிந்திருக்கிறது ஆபத்து. சூரிய ஒளிப்படும் இடங்களில் அதிக நேரம் இருப்பதால் உருளைக்கிழங்கு மீது பச்சை நிறத் திட்டுகள் உண்டாகிறது. இதில் கிளைகோல்கலாய்ட் இருப்பதால், இது தீங்கான ஒன்றாக மாறுகிறது. இதை சாப்பிடும் போது நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது

🌕🌕🌕🌕🌕

நச்சுப்பொருட்கள் உள்ள முளை வந்த உருளைக்கிழங்குகளை சமைத்து சாப்பிடும்போது தலைவலி, வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம், வயிற்றுவலி, டயேரியா போன்றவை ஏற்படும். முதலில் பலவீனமாக இருக்கும், பின் கோமா நிலையை அடைந்து அரிதாக சிலருக்கு மரணம் கூட ஏற்படும் அபாயம் உண்டு. மேலும் கருவுற்ற தாய்மார்கள் கண்டிப்பாக இவற்றைச் சேர்த்து கொள்ளக்கூடாது என வலியுறுத்துயுள்ளனர் மருத்துவர்கள்

🌕🌕🌕🌕🌕

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...