வானில் அற்புதம்: ஒரே இரவில் அணிவகுப்பு வகுக்கும்7 கோள்கள் - எப்போது, எப்படி பார்ப்பது?
ஒரே நாளில் 7 கோள்களும் காட்சி தரும் அதிசய நிகழ்வு அரங்கேற உள்ளது. வருகின்ற பிப்ரவரி 28-ஆம் தேதி, முதல் இரவு வானில் ஏற்கனவே காட்சி தரும் 6 கோள்களுடன் புதன் கோளும் இணையும். ஏழு கோள்களின் அபூர்வ காட்சியை வானியல் ஆர்வலர்கள் அன்று கண்டுகளிக்கலாம். பிப்ரவரி 28 ஆம் தேதி, முதல் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய 7 கோள்கள் இரவு வானில் அணிவகுக்கப்படுவதால் ஒரு அரிய வான நிகழ்வு நடைபெறும். இது விஞ்ஞானிகளுக்கு ஏன் முக்கியமானது என்று பார்க்கலாம். இது வானியல் ஆர்வலர்களுக்கு மட்டுமான காட்சி அல்ல. இது சூரிய மண்டலத்தில் நமக்கான இடம் குறித்த புதிய புரிதல்களையும் தரும் சாத்தியக்கூறுகள் உள்ளன.
நமது சூரிய குடும்பத்தின் முக்கிய 8 கோள்களும் சூரியனை வெவ்வேறு வேகத்தில் சுற்றி வருகின்றன. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கோளானது, 88 நாட்களில் ஒரு சுற்றை நிறைவு செய்கிறது. அதாவது புதன் கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது 88 நாட்கள். பூமியின் ஆண்டு 365 நாட்கள். அதிகபட்சமாக நெப்டியூன் சூரியனை சுற்றிவர 60,190 நாட்கள், அதாவது சுமார் 165 ஆண்டுகள் ஆகும். கோள்கள் வெவ்வேறு வேகத்தில் சுற்றிவருவதால், சில நேரங்களில் அவற்றில் பல, சூரியனின் ஒரே பக்கத்தில் வரிசை கட்டி நிற்பது உண்டு. பூமியிலிருந்து காணும் போது இரவு வானில் ஒரே நேரத்தில் பல கிரகங்களை நம்மால் காண முடியும். சில அபூர்வ சந்தர்ப்பங்களில் இரவு வானில், அவை அனைத்தும் ஒரே நேர் கோட்டில் காட்சி தரும்.
வானில் சூரிய குடும்பத்தில் உள்ள 8 கோள்களும் சூரியனை மையமாக வைத்து நீள் வட்ட பாதையில் சுற்றி வருகின்றன. இந்த கோள்கள் சூரியணை சுற்றும்போது, நாம் பார்க்கும்போது, ஒரே திசையில் காட்சியளிக்கும். அந்த வகையில், சூரிய குடும்பத்தில் உள்ள, புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், உள்ளிட்ட 7 கிரகங்களின் அணிவகுப்பு வரும் பிப்ரவரி 28-ந் தேதி முதல் ஒரே நேர்க்கோட்டில் பார்க்க முடியும் என்று நாசா தெரிவித்துள்ளது.
பல
கிரகங்கள் ஒரே நேரத்தில், சூரியனின்,
ஒரே பக்கத்தில் வரும்போது கோள்கள் அணிவகுப்பு என்பது நடக்கிறது. இந்த கோள்களின் அணிவகுப்பு
பிப்ரவரி 28-ந் தேதி தொடங்கினாலும்
மார்ச் 3-ந் தேதி தான்
இந்தியாவில் பார்க்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி உள்ளிட்ட கிரகங்களை
வெறும் கண்ணால் பார்க்க முடியும் என்றும் யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கிரகங்களை பைனாக்குலர்
மற்றும் தொலைநோக்கி உதவியுடன் பார்க்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
சிறந்த பார்வை குறிப்புகள்
இந்த கிரக சீரமைப்பின் சிறந்த காட்சியைப் பெற, உங்கள் கண்கள் இருட்டுடன் சரிசெய்ய 20-30 நிமிடங்கள் அனுமதிக்கவும். சிறந்த நேரம் சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு மற்றும் செயற்கை ஒளியிலிருந்து வெகு தொலைவில் உள்ள இடத்திலிருந்து செவ்வாய், வியாழன், யுரேனஸ், வெள்ளி, நெப்டியூன், புதன், மற்றும் சனி ஆகியவை கிழக்கிலிருந்து மேற்காக ஒரு பரிதியில் தோன்றும். இவற்றில் 5 கோள்களை சாதாரண கண்களால் காண முடியும் என்றாலும், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவற்றிற்கு அதிக ஆற்றல் கொண்ட தொலைநோக்கிகள் அல்லது இருகண் நோக்கி தேவைப்படுகிறது.
கிரகங்கள் அணிவகுப்பு தொடர்பான இந்த அரிய நிகழ்வை பார்ப்பதற்காக, தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி, தமிழ்நாடு வானவியல் மற்றும் அறிவியல் குழுமம், தொலைநோக்கி மூலம் நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மார்ச் மாதம் முதல் இரண்டு வாரங்களில் இருந்து இந்த கோள்கள் அணிவகுப்புநிகழ்வை பார்க்கலாம் என கூறியுள்ள அறிவியலர்கள், 2025-ல் பார்க்கவில்லை என்றால், அடுத்து 2040ல் தான் 7 கோள் அணிவகுப்பு பார்க்க முடியும் என கூறியுள்ளனர்.
கோள்களின்
இணைவு நமது சூரிய மண்டலத்திற்குள்
மட்டும் பயன்படுவதில்லை. பிரபஞ்சத்தின் பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்ய கோள்களின் இணைவை வானியலாளர்கள் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக சூரியனைத் தவிர மற்ற நட்சத்திரங்களை
சுற்றிவரும் புறக்கோள்களை கண்டுபிடிக்கவும், ஆய்வு செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிகழ்வை மறுபடியும் காண 15 ஆண்டுகள் ஆகும் என்பதால், அறிவியல் ஆர்வலர்கள் அறிவியல் ஆர்வம் கொண்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் இந்த நிகழ்வை காண்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்கள். மேலும், பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை மொட்டை மாடிக்கு அழைத்துச் சென்று ஏழு கிரக அணிவகுப்பு நிகழ்ச்சியை பார்க்க வாய்ப்புள்ளதாகவும் அறிவியல் விஞ்ஞானிகள் கூறி வருகின்றனர்.
இது போன்ற தகவல் பெற
நன்றி.
இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மேலும் படிக்க
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
மேலும் படிக்க
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.
நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.
No comments:
Post a Comment