✍🏻✴️✴️இயற்கை வாழ்வியல் முறை✴️✴️நஞ்சறுப்பான் நன்மைகள்.
✴️✴️✴️✴️✴️
நஞ்சறுப்பான் இலை விஷ நச்சுகளை முறிக்கும் வாந்தி உண்டாக்கும் உலர்ந்த வேர்கள் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த பயன்படுகின்றன. வேரின் சாறு ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகின்றது.
✴️✴️✴️✴️✴️
இது நீண்ட சதை நிறைந்த வேர்களுடைய, சுற்றிப்படரும் கொடி வகைத் தாவரமாகும். இலைகள் முட்டை வடிவமானவை. எதிர் எதிராக தண்டில் அமைந்திருக்கும் 5 –10 செமீ நீளத்தில் பெரும்பாலும் நுனியை நோக்கியிருக்கும்.
✴️✴️✴️✴️✴️
பூக்கள் வெளிறிய மஞ்சள் நிறத்துடன் உட்பக்கம் இளஞ்சிவப்பாக சிறிய கொத்துகளில் காணப்படும். பழங்கள், பல நுண்ணிய விளிம்பு கோடுகளுடன் காணப்படும். தென்னிந்தியாவில் பொதுவாக சமவெளிகள் மலைப் பகுதிகளில் 1000 மீ உயரம் வரை பரவிக் காணப்படுகின்றது.
✴️✴️✴️✴️✴️
கரிப்பாலை, நஞ்சு முறிச்சான் கொடி, கொடிப்பாலை, அந்தமூல், காகித்தம் ஆகிய மாற்றுப் பெயர்களும் இந்த தாவரத்திற்கு உண்டு. இலை, வேர், ஆகியவை சிறப்பான மருத்துவப் பயன் கொண்டவை.
✴️✴️✴️✴️✴️
நஞ்சறுப்பான் இலை, வேர், கைப்புச் சுவையும், வெப்பத் தன்மையும் கொண்டவை. வியர்வையைப் பெருக்கும் கோழையகற்றும் விஷ நச்சுகளை முறிக்கும் வாந்தி உண்டாக்கும்.உலர்ந்த வேர்கள் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்த பயன்படுகின்றன. வேரை காய்ச்சி வடித்த சாறு மூச்சுக்குழல் அழற்சிக்கு உபயோகமாகின்றது மேலும் இதன் வாந்தியை உண்டாக்கும் குணத்தால் ஆஸ்துமாவை கட்டுப்படுத்துகின்றது
ஆஸ்த்மாட்டிகா என்கிற தாவரவியல் சிற்றினப் பெயர் இது காசநோய்க்கு சிறப்பாக உபயோகப்படும் என்பதை குறிக்கின்றது.
✴️✴️✴️✴️✴️
ஆஸ்துமா கட்டுபட நஞ்சறுப்பான் இலைகளை நிழலில் உலர்த்தி, தூள் செய்து வைத்துக் கொண்டு ¼ முதல் ½ கிராம் அளவு தினமும் 3 வேளைகள் தேனில் குழைத்து சாப்பிட்டு வரவேண்டும்.
✴️✴️✴️✴️✴️
நஞ்சை வெளியாக்க இலைகளை நன்கு அரைத்து, எலுமிச்சம் பழ அளவு உள்ளுக்கு கொடுக்க வேண்டும். அல்லது இலை, வேர் ஆகியவற்றை உலர்த்தி தூள் செய்து வைத்துக் கொண்டு, 2 தேக்கரண்டி அளவுடன் சிறிதளவு மிளகுத் தூள் கலந்து தேனில் குழைத்து உள்ளுக்கு கொடுக்க வேண்டும்.
✴️✴️✴️✴️✴️
குழந்தைகளுக்கான கக்குவான் குணமாக இலைச் சூரணம் ¼ தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து உள்ளுக்கு கொடுக்க வேண்டும்
✴️✴️✴️✴️✴️
நஞ்சறுப்பான் இலை, நொச்சி, தைல இலை வகைக்கு கைப்பிடியளவு எடுத்து 2 லிட்டர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஆவி பிடித்தால் தலைக்கனம், தலைவலி, உடல்கனம், இருமல், சளி, இளைப்பு குணமாகும்.
✴️✴️✴️✴️✴️
நஞ்சறுப்பான் சமூலத்தை நிழலில் காயவைத்து இடித்துப் பொடியாக்கி அதே அளவு மிளகுப்பொடி கலந்து 5 கிராமாக 2 வேளை ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்துவர பாதரசம், ரசக்கற்பூரம், சவ்வீரம் போன்ற பாசாணங்களின் வீறு தணியும். உப்பில்லாத மோர் உணவு சாப்பிட வேண்டும். இதே பொடியை அரை கிராம் அளவிற்கு 3 வேளையாகத் தொடர்ந்து சாப்பிட்டுவர மேக வாய்வுப் பிடிப்புகள் குணமாகும்.
✴️✴️✴️✴️✴️
நஞ்சறுப்பான் பூண்டை கைப்பிடியளவு எடுத்து சிதைத்து அரைலிட்டர் நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சி வடிகட்டி தலைமுழுகிவர மண்டைக்குத்தல் குணமாகும்
✴️✴️✴️✴️✴️
நஞ்சறுப்பான் இலைகளை நீரிலிட்டு காய்ச்சி,வடிகட்டி ஒரு அவுன்ஸ் வீதம் ஒரு நாள்,இருவேளை குடித்து வந்தால் சளி,ஆஸ்துமா குறையும்.
✴️✴️✴️✴️✴️
கட்டுரை வைத்தியர் முத்துப்பாண்டியன்
✴️✴️✴️✴️✴️
ஆயுர்வேத சித்த மருத்துவத்தில் முக்கிய மூலிகை. நீங்கள் குறைபாடு நீங்க மருந்தாகவே இதை எடுத்துகொள்வதாக இருந்தால் மருத்துவரின் அறிவுரை அவசியம்.
🌷🌷🌷🌷🌷
மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.
🌷🌷🌷🌷🌷
உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்
🦚🦚🦚🦚
உடல் நல குறைபாடுகளையும் சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த ஆலோசனைகள் வழங்கபடும்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟
🦚🦚🦚🦚🦚
நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு மாவட்டம், பவானி.
செல் நம்பர் 7598258480, 6383487768.
((வாட்ஸ் அப்)) 7598258480
குரு வாழ்க குருவே துணை
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
N.P. RAMESH: 9489666102.
இது போன்ற தகவல் பெற
No comments:
Post a Comment