Thursday, February 10, 2022

✍🏻🪄🪄இயற்கை வாழ்வியல் முறை🪄🪄சாம்பிராணியின் நன்மைகள்.

✍🏻🪄🪄இயற்கை வாழ்வியல் முறை🪄🪄சாம்பிராணியின்  நன்மைகள்.

🪄🪄🪄🪄🪄

நம் முன்னோர்கள் எதைச் செய்தாலும் அதில் ஒரு முக்கிய காரணம் இருக்கும் என்பதை நாம் தற்போது உணர்ந்து வருகின்றோம். அதன் அடிப்படையில் சாம்பிராணி போடுவது என்பது வீட்டில் வெறும் வாசனைக்காக மட்டும் இல்லை. அதன் பின்னர் பல நன்மைகள் அடங்கியுள்ளது என்பதை பலரும் அறியாமல் உள்ளனர்

இருப்பினும் குழந்தைகளும் பெண்களும் தலைக்கு குளித்த பின்னர் அவர்களுக்குச் சாம்பிராணி போடுவதும், கோயில், மற்றும் வீட்டில் வழிபாட்டின் போது சாம்பிராணி புகை போடுவதை இன்றும் நாம் கடைப்பிடித்து வருகின்றோம்.

சாம்பிராணி என்பது வெறும் நறுமண புகை கிடையாது. இதனை வீட்டில் போடுவதால் ஒரு ஹோமம் செய்ததற்குரிய பலன் கிடைக்கும்.

🪄🪄🪄🪄🪄

சாம்பிராணி போடுவதால் மிக முக்கியமாக நமக்கும், நம் வீட்டிற்கும் ஏற்பட்டிருக்கும் கண் திருஷ்டி, நம் மீதான பிறரின் பொறாமை, திருஷ்டி உள்ளிட்டவை நீங்கும்.

🪄🪄🪄🪄🪄

சரி சாம்பிராணி போடும் போது அதில் எதை எல்லாம் சேர்த்து தூபமிட்டால் என்னென்ன நன்மை உண்டாகும் என்பதைப் பார்ப்போம்.

சாம்பிராணியுடன் அகில் சேர்த்து தூபமிட்டால் குழந்தைப் பேறு உண்டாகும்.

🪄🪄🪄🪄🪄

தூதுவளை சேர்த்து தூபமிடும் போதும் வீட்டில் இறைவனின் அருள் நிலைத்து நிறைந்திருக்கும்.

சாம்பிராணியில் சந்தனத்தை சேர்த்து தூபமிட்டால் மகாலட்சுமி கடாட்சம் ஏற்படும்.

அறுகம்புல் பொடியை சாம்பிராணியில் சேர்த்து தூபமிடும் போது சகல தோஷங்களும் நீங்கும்.

🪄🪄🪄🪄🪄

சாம்பிராணியுடன் வெட்டிவேரை போட்டு தூபமிட்டால் நாம் நினைத்த காரியம் வெற்றி அடையும்.

🪄🪄🪄🪄🪄

வேப்பிலையை சாம்பிராணியில் போட்டு தூபமிட்டால் பல நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.

🪄🪄🪄🪄🪄

சாம்பிராணியுடன் வெண்கடுகை போட்டு தூபமிடுவதால் எதிரிகளும், பகைமையும் விலகும்.

🪄🪄🪄🪄🪄

வெண்குங்கிலிய பொடியை சாம்பிராணியில் சேர்த்து தூபமிடுவதால் வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் வெளியேறும்🪄🪄🪄🪄🪄

ஜவ்வாதி போட்டு சாம்பிராணி தூபமிட்டால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.

வேப்பம்பட்டையை சாம்பிராணியில் போட்டு தூபமிடுவதால் பில்லி. சூனியம், ஏவல் உள்ளிட்ட துஷ்ட சக்திகள் விலகும்.

🪄🪄🪄🪄🪄

துரோகிகள் நீங்க வேண்டுமெனில் சாம்பிராணியுடன் நாய் கடுகை சேர்த்து தூபமிடுவதால் நன்மை ஏற்படும்.

🪄🪄🪄🪄🪄

செயல்களில் வெற்றி உண்டாகவும், திருமண தடை நீங்க சாம்பிராணியில் காய்ந்த துளசியை போட்டு தூபமிடுவது சிறந்தது.

கரிசலாங்கண்ணி பொடியை சாம்பிராணியில் தூவி தூபமிட்டால் மகான்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

🪄🪄🪄🪄🪄

நன்னாரி வேர் பொடியை சாம்பிராணியுடன் சேர்த்து தூபமிட்டால் சகல ஐஸ்வர்யங்கள் உண்டாகும்.

சாம்பிராணியுடன் மருதாணி இலைப் பொடியை சேர்த்து தூபமிடும் போது மகாலட்சுமி அருள் கிடைக்கும்.

🪄🪄🪄🪄🪄

ஆஸ்துமா, மூச்சடைப்பு உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.


🪄🪄🪄🪄🪄

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

எல்லாம் உயிர்களும் நலமுடன் வாழ்க🐟

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

நிலவில் சந்திரயான் கண்டறிந்த ரகசியம்.. உலகமே திரும்பிப்பார்த்த தருணம்.

நிலவில் சந்திரயான் கண்டறிந்த ரகசியம்.. உலகமே திரும்பிப்பார்த்த தருணம். ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயத்தையும் மறைவையும் பார்க்கும் விண்வெளி ...