Wednesday, April 16, 2025

கோவில்பட்டி கல்லூரியில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு.

கோவில்பட்டி கல்லூரியில் விண்வெளி அறிவியல் கருத்தரங்கு.


கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப்  சார்பில் விண்வெளி அறிவியல் குறித்த கருத்தரங்கு நடந்தது. தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் செயலாளர் முத்துமுருகன் தலைமை தாங்கினார். கல்லூரி இயற்பியல் துறை தலைவர் சசீதாவணிக மேலாண்மை துறை தலைவர் விஜய கோபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கருத்தரங்கை கல்லூரி முதல்வர் செல்வராஜ் தொடக்கி வைத்தார் திருச்சி நேரு நினைவு கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியரும்5000 இடங்களில் அஸ்ட்ரானமி நிகழ்வின் மாநில ஒருங்கிணைப்பாளருமான ரமேஷ் கலந்து கொண்டு சூரியன்,நிலா,ஆகியவற்றின் இயக்கங்களை வைத்து நாட்காட்டி கணிப்பது பற்றியும் . சூரியன் நிழலை வைத்து கட்டிட உயரத்தை கணிப்பது குறித்தும்வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் குறித்தும் செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தார்.


கல்லூரி மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தொடக்கத்தில் இயற்பியல் துறை பேராசிரியர் பிரியங்கா அனைவரையும் வரவேற்றார் கல்லூரி பேராசிரியை சரவணகுமாரி நன்றி கூறினார்.














இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர் P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.







No comments:

Post a Comment

40 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்கு போகும் இந்திய விண்வெளி வீரர்!

40 ஆண்டுகளுக்குப் பிறகு  விண்வெளிக்கு போகும் இந்திய விண்வெளி வீரர்! சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆய்வு செய்ய இருக்கும் முதல் இந்தியர்.  40 ஆ...