இஸ்ரோ டேராடூன் இந்திய தொலை உணர்வு நிறுவனத்தில் பயிற்சி பெற்ற நேரு நினைவுக் கல்லூரி மாணவர்.
புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லுரியின் இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவர் தருண்குமார் செ. (U25CSC249), இஸ்ரோ டேராடூன் இந்திய தொலை உணர்வு நிறுவனத்தில் நடைபெற்ற திறன் மேம்பாட்டுப் பயிலரங்கில் ஒரு வாரம் பங்கேற்று வெற்றிகரமாகப் பயிற்சி முடித்து சான்றிதழ் பெற்றார். இந்தப் பயிலரங்கில் தொலை உணர்வு (Remote Sensing), புவியியல் தகவல் அமைப்பு (GIS), செயற்கைக்கோள் தொழில்நுட்பம் மற்றும் அவற்றின் நடைமுறைப் பயன்பாடுகள் குறித்து ஆழமான பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், சந்திரயான்–3 திட்டத்தின் நோக்கங்கள், நிலவின் தென் துருவத்திற்கு அருகே வெற்றிகரமாக தரையிறங்கியதன் அறிவியல் முக்கியத்துவம் மற்றும் அதன் மூலம் பெறப்பட்ட ஆய்வுத் தகவல்கள் குறித்து விரிவாக அறிந்துகொண்டார்.
அத்துடன், விண்வெளித் தொழில்நுட்பம் விவசாயம், பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, நீர்வள மேலாண்மை மற்றும் நகர்ப்புறத் திட்டமிடல் போன்ற துறைகளில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதையும் நிபுணர்களின் விரிவுரைகள் மற்றும் செய்முறைப் பயிற்சிகள் மூலம் கற்றுக்கொண்டார். இப்பயிற்சி தனது தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தியதோடு, இந்திய விண்வெளி ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் ISRO-வின் செயல்பாடுகள் குறித்த ஆழமான புரிதலை ஏற்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
மாணவருக்கு இயற்பியல் உதவி பேராசிரியர் மற்றும் துறைத் தலைவர் முனைவர் P.ரமேஷ் வழிகாட்டியாக இருந்து பயிற்சிக்குத் தயார்படுத்தினார். பயிற்சியை வெற்றிகரமாக முடித்த மாணவர் தருண்குமாரை கல்லூரித் தலைவர் பொறியாளர் பொன். பாலசுப்ரமணியன், செயலர் பொன். ரவிச்சந்திரன், முதல்வர் அ. வெங்கடேசன், துணை முதல்வர் முனைவர் தமிழ்மணி, ஒருங்கிணைப்பாளர் முனைவர் மீனாட்சி சுந்தரம், கணினி அறிவியல் துறைத் தலைவர் பிரியா மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தனர்.
இது போன்ற தகவல் பெற
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp குழுவில் இணையவும்.
நன்றி.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
மேலும் படிக்க
🛑✍️நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


.jpg)

.jpg)
No comments:
Post a Comment