N.P. RAMESH, Assistant Professor of Physics, Nehru Memorial College, Puthanampatti, Trichy. Secretary of the Tamil Nadu Astronomy and Science Society (TASS) Cell: 9489666102
Wednesday, February 24, 2021
25ஆம் தேதி முதல் பேருந்துகள் ஓடாது-போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.
25ஆம் தேதி முதல் பேருந்துகள் ஓடாது-போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.
தமிழகத்தில் வரும் 25ஆம் தேதி முதல் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்.
ஊதிய உயர்வு, ஓய்வூதியப் பலன்களை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம்.
வேலை நிறுத்தப் போராட்டத்தால் 25ஆம் தேதி முதல் பேருந்துகள் ஓடாது என அறிவிப்பு.
ஊதிய உயர்வு, தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர பணி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் போக்குவரத்து துறை அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொழிற்சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால், அந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த நிலையில், வருகிற 25ஆம் தேதி முதல் (நாளை மறுதினம்) போக்குவரத்து ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதுகுறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்து பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை தீர்வு ஏற்படவில்லை.
எனவே ஊதிய உயர்வு, ஓய்வு பெற்றவர்களுக்கான பணப்பலன்களை உடனே வழங்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 25ஆம் தேதி முதல் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்ட அறிவிப்பால், மாநிலம் முழுவதும் பேருந்து போக்குவரத்து பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment