வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, வழிகாட்டியாக விளங்கும் ஆசிரியர்கள்-ஆசிரியர் தினம் இன்று (செப்டம்பர் 5).
ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, மாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்க்கை, பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, மாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கி, ஒவ்வொரு மாணவர்களையும், சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும்.
ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லை. ஒழுக்கம், பண்பு, ஆன்மீகம், பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறி, அவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்க, தன்னலமற்ற, தியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாது. கற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள். தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதி, பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டி, ஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை, இந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கல்வி என்பது குழந்தைகளின் ஒட்டு மொத்த ஆளுமைத் திறனை வளர்க்கும் முயற்சி எனலாம். இம்முயற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களை சமுகமானது மாதா மற்றும் பிதாவைத் தொடர்ந்து அடுத்த நிலையில் தெய்வத்திற்கு மேலாக ஆசிரியர்களைக் கருதும் நிலை இன்றும் காண இயலும். இச்சமூகத்தின் எதிர்பார்ப்பையும் மீறி தன் வகுப்பு மாணவர்கள் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டு அவர்கள் மேம்பட போராடும் ஒவ்வொரு ஆசிரியரும் போர்வீரனே. அதில் வெற்றியோ தோல்வியோ என்ற கேள்விக்கு இடமின்றி, அவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கு அனைவரும் தலைவணங்குவார்கள் என்பதில் ஐயமில்லை. “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என ஆத்திச்சூடியில் பாடியிருக்கிறார் ஔவையார். ஆசிரியர் என்பவர் இறைவனுக்கு சமமாக பார்க்கப்படுபவர்.
ஒரு மாணவனை தன்னம்பிக்கை மிகுந்த மனிதன் ஆக்குவது ஆசிரியர்கள்தான். இப்படி மாணவர்களின் வாழ்வில் ஒரு பெரும் பங்கை வகிப்பதால் தான் ஆசிரியர்கள் என்றும் போற்றப்படுகிறார்கள். ஆசிரியர் தின நன்னாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும், சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்தும். மாணவர்களும், அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவிப்பர். இத்திருநாளில் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 05, 1888ல் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி.ஏ. பட்டமும், பின்னர் முதுகலைத் துறையில் எம்.ஏ. பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர், இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல், புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும், மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோ, ப்லோடினஸ், காந்த், பிராட்லி, மற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்று, அதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல், நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்து, ஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.
1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921ல், கல்கத்தா பல்கலைக்கழகத்தில், தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம், பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது. இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்க, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம், டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில், அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால், மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக் கூறலாம்.
1931 ஆம் ஆண்டு, டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள், ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டு, பெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல், அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களை, பல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும், ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது. இயற்கையோடு இயைந்த முறையிலான கல்வியை அவர் என்றும் வரவேற்றார். மனிதனுக்குக் கல்வி பெறும் திறன் இருப்பதுதான் அவனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்றார்.
கல்வியின் நோக்கம் மனித மனத்தில் ஒளி பாய்ச்சி, அவனுக்குள்ளே இருக்கும் குரங்கு தன்மையை நீக்கி, இதயத்தில் அன்பை வளர்த்து, அனைவற்றிற்கும் மேலாக உயிரோட்டமுள்ள கற்பனைத் திறனை உருவாக்குவதாகும். விஞ்ஞானத்தையும் தொழில் நுட்பத்தையும் மட்டும் கற்பிக்கும் கல்வி ஒரு மனிதனை சிறு தொழில் நுட்பாளனாக உருவாக்குமே தவிர நல்ல மனிதனாக ஆக்காது என்பதை வாதிட்டார். விஞ்ஞானம் அவனுக்கு இயற்கையை வெற்றி கொள்ளவும் பூமியைச் சூறையாடவும் உதவியிருக்கிறது. காற்றில் பறக்கவும் கடலுக்கடியில் நீந்தவும் அவனுக்கு சக்தி அளித்துள்ளது. இவையனைத்தும் மனிதனின் உண்மையான இயல்பு அல்ல. மனிதன் தன்னுடனேயே அமைதியான வாழும் திறனைக் கல்வி அவனுக்கு அளிக்கவில்லை என்று சாடினார்.
இந்திய சுதந்திரம் மற்றும் இந்தியக்கல்வி இரண்டிலும் தீவிர அக்கறை கொண்டவராக இருந்தார். மனிதனுடைய வாழ்வு விலங்குகளிடமிருந்து வேறுபட்டுள்ளதை தனது பல்வேறு உரைகளில் எடுத்துரைக்கச் செய்தார். மனிதனை கடவுளின் படைப்பின் மகுடம் என்றும் மனம் போனபோக்கில் செல்லாமல், தான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சுதந்திரமாக தெரிவுச்செய்து செயல்படக் கூடியவனாக விளங்க வேண்டும் என்றார். மேலும் அவர் நாம் அனைவருமே வாழ்க்கையின் பொருள் என்னவென்பதையும், வாழ்வின் நோக்கம் என்னவென்பதையும் அறிய வேண்டியவனாகிறோம் என்றும் ஒவ்வொருவரும் வாழ்க்கைக்கான திட்டத்தையும், நோக்கத்தையும் அறிந்து கொள்ளாமல் அமைதி காண இயலாது என்கிறார். உங்களது இலட்சியமும் நம்பிக்கையும் ஒரு கோட்பாட்டில் அமையாவிட்டால், உங்கள் நடத்தை சஞ்சலமடைந்து முயற்சி (சக்தி) வீணாகிவிடும் என்கிறார். அதிலும் கோட்பாட்டில் நம்பிக்கை உறுதிப்படுத்துவதன் மூலம் தான் நடத்தை உருவாகிறது என்பதை திறம்பட உரைக்கிறார்.
ஒவ்வொரு மனிதனும் தனித்த வாழ்க்கையன்றி மற்ற மனிதர்களுக்கிடையில்தான் வாழ்கின்றான். இதன் விளைவாக தோன்றியதுதான் நாகரீகம். ஓவ்வொருவரும் இன்பங்களை அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழ மற்றவரின் ஒத்துழைப்பும் இணக்கப்பண்பும் அவசியம் என்பதை மேலும் வலியுறுத்துகிறார். கோழைத்தனத்தை வெறுத்து தைரியத்தை ஆதரித்ததோடு; தைரியம் இல்லாமல் எந்த நற்பண்பும் வாழ முடியாது என்றும்; எல்லா அம்சங்களையும் கவனமாகக் கணித்து திட்டமிட்டு தைரியமாக செயல்படுத்த வேண்டும் என்பதே அவரின் தின்னமான கருத்தாக இருந்தது. நாம் எப்போதும் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள முடியும் என்றார். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்க்கு 1954 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும், இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார். பாரத ரத்னா டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஏப்ரல் 17, 1975ல் தனது 86வது அகவையில் சென்னையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
என்றென்றும் மாணவர் உலகில் நறுமணம் வீசிட செய்திடும் ஆசிரியர் உலகுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்..
Source By: itstamil, Wikipedia,
தகவல்: முனைவர். P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
யார் நல்லாசிரியர் செப்டம்பர் -5 ஆசிரியர் தினம்
உன்னால் முடியாது என ஆயிரம் பேர் பின்னால் கூறினார்கள். உன்னால் முடியும் என என் ஆசிரியர் கூறினார். இன்றைய என் வெற்றிகளுக்கு காரணமான ஆசிரியர்க்கு ஆசிரியரின் நல்வாழ்த்துக்கள். மாணவர் நலனில் அக்கறை, நல்லொழுக்கத்தை வளர்ப்பவர், கற்றலை எளிதாக்குபவர், ஊக்கமளிப்பவர், இவையெல்லாம் சிறந்த ஆசிரியரின் நற்குணங்கள்.
ஆசிரியராக வேலை பார்க்கும் போது மாத சம்பளம் கிடைக்கின்றது. நான் நன்றாக பாடம் நடத்துகின்றேன், இது மட்டுமல்ல ஆசிரியர் பணி, எத்தனை மாணவர்களை உருவாக்கினேன் என்பதுதான் முக்கியம்.
Not only Teaching and also Creating
வகுப்பறையில் மாணவர்களை கண்டிப்பது தவறல்ல, ஆனால் அன்று மாலைக்குள் பள்ளி முடிவடைவதற்குள் எந்த மாணவனை கண்டித்தோமோ அவனை தனியாக பேசி அவனுடைய நல்ல குணங்களை கூறி, உன்னால் முடியும் என வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உள்ள மன வேறுபாடுகளை பள்ளியிலேயே சுமுகமாக திருத்துக்கொள்ள வேண்டும். மனபாரத்துடன் ஆசிரியரோ மாணவர் வீட்டிற்கு சென்றாள் நிம்மதி இருக்காது.
ஆசிரியர் பணி ஒரு காலத்தில் சிறந்த பணியாக இருந்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மிகவும் கடினமான பணியாக மாறிவிட்டது.
ஆசிரியர் என்பவர் நல் விதையை மாணவர்கள் இடத்தில் விதைக்க வேண்டும். விதை உடனே முளைக்குமா, சிறிது காலம் கழித்து முளைக்குமா, முளைக்காமலேயே விட்டுவிடுமா, என்பதை பற்றி கவலை பட கூடாது. நல்ல எண்ணங்களை விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும். நமது பணியை நாம் சிறப்பாக செய்து கொண்டே இருக்க வேண்டும். தலைமை ஆசிரியரோ, நிர்வாகமோ, பெற்றோரோ நம்மை பாராட்டுவார்கள் என நினைத்து செய்ய வேண்டாம். நமது மனதிருப்திக்கு நாம் சிறப்பாக செய்து கொண்டே இருக்க வேண்டும்.
அண்மையில் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற 72 வயது நபர் சீர்காழியில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் சேர்ந்து தினந்தோறும் படிக்க செல்கின்றார். ஒரு பேருந்தை விட்டவருக்கு தான் தெரியும் அடுத்த பேருந்தை விட்டுவிடக்கூடாது என்று. அன்று பாலிடெக்னிக் படிக்க முடியாத அந்த கனவு இன்று 72 வயதில் அவருக்கு நிறைவேறுகின்றது.
நல்லாசிரியர் என்றும் சிறந்த மாணவர், புத்தகங்கள் மூலமாக நூலகங்கள் மூலமாக தொடர்ந்து படித்துக்கொண்டே கொண்டே இருப்பவர். எந்த ஆசிரியர் ஓய்வு பெற்ற பிறகும் மாணவர்களாளும், பொதுமக்களாளும், மதிக்கப்படுகின்றாரோ அவர்தான் என்றும் சிறந்த ஆசிரியர்.
நல்லாசிரியர் யார்?
வாழ்க்கைப் பாடம் கற்றுத்தந்து, தலைமுறைகளை உருவாக்குபவரே உண்மையான ஆசிரியர்!
செப்டம்பர் 5 – ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை
“உன்னால் முடியாது என்று ஆயிரம் பேர் பின்னால் கூறினார்கள்; உன்னால் முடியும் என்று என் ஆசிரியர் கூறினார்” – இந்த ஒரு வரியே ஒரு நல்லாசிரியரின் மகத்துவத்தை உணர்த்துவதற்கு போதுமானது. பாடப்புத்தகத்தில் உள்ள பாடங்களை மட்டும் கற்றுக் கொடுப்பவர் ஆசிரியர் அல்லர். மாணவரின் திறமையை அடையாளம் கண்டு, அவனுக்குள் இருக்கும் நம்பிக்கையைத் தூண்டி, வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான பாதையைக் காட்டுபவரே உண்மையான ஆசிரியர்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர், சிறந்த தத்துவஞானி மற்றும் கல்வியாளர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்த நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 1962ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ஆசிரியர் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
ஆசிரியர் பணி என்பது வெறும் தொழில் அல்ல; அது ஒரு தலைமுறையை உருவாக்கும் பணி. மாணவர்களுக்கு அறிவை வழங்குவதுடன், ஒழுக்கம், பண்பு, பொறுப்பு, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, மனிதநேயம், சமூக அக்கறை போன்ற பண்புகளையும் வளர்ப்பது ஆசிரியரின் முக்கியக் கடமையாகும்.
Not only
Teaching and also Creating
நான் நன்றாகப் பாடம் நடத்துகிறேன்; அதற்காக எனக்கு மாதச் சம்பளம் கிடைக்கிறது” என்ற அளவில் ஆசிரியர் பணியைப் புரிந்துகொள்வது முழுமையான பார்வையல்ல. “எத்தனை மாணவர்களை உருவாக்கினேன்?” என்பதே ஒரு ஆசிரியர் தன்னைத் தானே கேட்டுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்வி.
ஒரு சிறந்த ஆசிரியர் நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்களை மட்டும் உருவாக்குவதில்லை. பின்தங்கிய மாணவர்களையும் கைபிடித்து முன்னேற்றுகிறார். தயக்கம் கொண்ட மாணவனுக்கு தன்னம்பிக்கையை அளிக்கிறார். தோல்வியடைந்த மாணவனுக்கு மீண்டும் முயற்சி செய்யும் மனப்பக்குவத்தை உருவாக்குகிறார். “உன்னால் முடியும்” என்ற இரண்டு வார்த்தைகள் சில நேரங்களில் ஒரு மாணவனின் முழு வாழ்க்கையையே மாற்றிவிடுகின்றன.
கண்டிப்பிலும் அன்பு இருக்க வேண்டும்
வகுப்பறையில் மாணவர்களை
கண்டிப்பது தவறு அல்ல. ஆனால் அந்தக் கண்டிப்பு மாணவனின் மனதை உடைப்பதாக இருக்கக்கூடாது; அவனைத் திருத்தி முன்னேற்றுவதாக இருக்க வேண்டும்.
ஒரு மாணவனை ஆசிரியர் கண்டித்திருந்தால், அதே நாளில் அவனை தனியாக அழைத்து, அவனுடைய நல்ல குணங்களை எடுத்துக்கூறி, “உன்னால் முடியும்; இன்னும் சிறப்பாகச் செய்யலாம்” என்று வழிகாட்ட வேண்டும். ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையே உருவாகும் மனப்பாரத்தை அன்றே அகற்றுவது நல்ல ஆசிரியரின் பண்பாகும்.
கண்டிப்பது ஒழுக்கத்திற்காக; அன்பு செலுத்துவது வளர்ச்சிக்காக. இந்த இரண்டும் இணைந்தால்தான் ஆசிரியர்–மாணவர் உறவு சிறப்பாகும்.
நல்ல விதைகளை விதைக்கும் ஆசிரியர்
ஆசிரியர் என்பவர் மாணவர்களின் மனதில் நல்ல எண்ணங்கள் என்ற விதைகளை விதைப்பவர். அந்த விதை உடனடியாக முளைக்கலாம்; சில ஆண்டுகளுக்குப் பிறகு முளைக்கலாம்; ஏன், தாம் கற்பித்த காலத்திலேயே அதன் விளைவை ஆசிரியர் பார்க்காமல் போகலாம். ஆனால் அதற்காக நல்ல எண்ணங்களை விதைப்பதை ஆசிரியர் நிறுத்திவிடக் கூடாது.
தலைமை ஆசிரியர் பாராட்ட வேண்டும் என்பதற்காகவோ, நிர்வாகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதற்காகவோ, பெற்றோர் புகழ வேண்டும் என்பதற்காகவோ ஆசிரியர் தனது பணியைச் செய்யக் கூடாது. தனது மனநிறைவிற்காகவும், மாணவர்களின் எதிர்காலத்திற்காகவும் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.
ஒரு ஆசிரியர் விதைத்த ஒரு நல்ல எண்ணம், பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மாணவனின் வாழ்க்கையில் மிகப்பெரிய மரமாக வளரலாம்.
கல்விக்கு வயது இல்லை
கல்வி என்பது ஒரு குறிப்பிட்ட வயதிற்குள் முடிந்துவிடும் பயணம் அல்ல. இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக 72 வயதில் மீண்டும் கல்வி கற்கச் சென்ற ஓய்வுபெற்ற ஒருவரின் முயற்சியைச் சொல்லலாம்.
இளமையில் நிறைவேறாத
கல்விக் கனவை முதுமையிலும் தொடரும் அவரது முயற்சி, “கற்றலுக்கு வயது தடையல்ல” என்பதை உலகிற்கு உணர்த்துகிறது.
ஒரு பேருந்தைத் தவறவிட்டவருக்குத்தான் அடுத்த பேருந்தைத் தவறவிடக்கூடாது என்பது தெரியும்” என்ற உணர்வுடன் வாழ்க்கையில் தவறவிட்ட வாய்ப்புகளை மீண்டும் தேடி செல்லும் மனப்பக்குவத்தை கல்வி நமக்கு அளிக்கிறது. இதுபோன்ற வாழ்க்கை உதாரணங்களை மாணவர்களிடம் எடுத்துக்கூறி, அவர்களுக்குள் நம்பிக்கையை உருவாக்குவதும் ஆசிரியரின் பொறுப்பாகும்.
ஆசிரியரும் வாழ்நாள் மாணவரே!
ஒரு நல்ல ஆசிரியர் கற்பிப்பதை மட்டும் அறிந்தவர் அல்லர்; தொடர்ந்து கற்றுக்கொண்டே இருப்பவர்.
புதிய அறிவியல் வளர்ச்சிகள், தொழில்நுட்ப மாற்றங்கள், புதிய கற்பித்தல் முறைகள், சமூக மாற்றங்கள் என அனைத்தையும் ஆசிரியர் தொடர்ந்து கற்றுக்கொள்ள வேண்டும். புத்தகங்கள், நூலகங்கள், பயிற்சிகள், கருத்தரங்குகள், இணையவழிக் கற்றல் என பல வழிகளில் தனது அறிவை புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.
நல்ல ஆசிரியர் என்பவர் முதலில் நல்ல மாணவர்.
தாம் கற்றுக்கொள்வதை நிறுத்திவிட்ட நாளிலிருந்து ஆசிரியரின் வளர்ச்சியும் நின்றுவிடுகிறது. எனவே, “நான் ஆசிரியர்” என்பதோடு “நான் வாழ்நாள் முழுவதும் மாணவரும் கூட” என்ற எண்ணம் ஒவ்வொரு ஆசிரியரிடமும் இருக்க வேண்டும்.
ஓய்வு பெறுவது பணியிலிருந்து மட்டுமே!
ஒரு ஆசிரியர் அரசு பணியில் இருந்து ஓய்வு பெறலாம். ஆனால் உண்மையான ஆசிரியருக்கு மாணவர்களின் மனதில் இருந்து ஓய்வு கிடையாது.
பல ஆண்டுகளுக்குப் பிறகும் ஒரு மாணவன் தனது ஆசிரியரைப் பார்த்து, “சார், நீங்கள் அன்று சொன்ன ஒரு வார்த்தைதான் என் வாழ்க்கையை மாற்றியது” என்று கூறும் தருணமே ஆசிரியரின் மிகப்பெரிய விருது.
விருதுகள், பாராட்டுச் சான்றிதழ்கள், பதக்கங்கள் ஆகியவை ஆசிரியரின் பணியைப் பாராட்டலாம். ஆனால் தனது முன்னாள் மாணவர்களின் அன்பும் மரியாதையும் தான் ஒரு ஆசிரியருக்குக் கிடைக்கும் மிக உயர்ந்த அங்கீகாரம்.
மாணவர்களை உருவாக்குவதே ஆசிரியரின் வெற்றி
ஒரு ஆசிரியரின் வெற்றியை அவர் கற்பித்த பாடத்தின் மதிப்பெண்களால் மட்டும் அளக்க முடியாது. அவர் உருவாக்கிய மாணவர்களின் வாழ்க்கையால் அளக்க வேண்டும்.
அறிவுள்ள மாணவரை உருவாக்குவது கல்வி நிறுவனத்தின் கடமை. ஆனால் அறிவோடு பண்பும், திறமையோடு தன்னம்பிக்கையும், வெற்றியோடு மனிதநேயமும் கொண்ட மனிதனை உருவாக்குவது நல்ல ஆசிரியரின் கடமை.
“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என்ற ஔவையாரின் கருத்து ஆசிரியரின் உயர்ந்த நிலையை எடுத்துரைக்கிறது.
ஒரு நல்ல மருத்துவர் உயிரைக் காப்பாற்றுகிறார். ஒரு நல்ல பொறியாளர் கட்டிடங்களை உருவாக்குகிறார். ஆனால் ஒரு நல்ல ஆசிரியர் எதிர்கால மனிதர்களையே உருவாக்குகிறார்.
அதனால் ஆசிரியர் பணி உயர்ந்த பணி மட்டுமல்ல;
அது சமூகத்தை மாற்றும் பணி.
இன்றைய ஆசிரியர்களின் சவால்
இன்றைய சூழலில் ஆசிரியர் பணி மிகவும் சவாலானதாக
மாறியுள்ளது. மாணவர்களின் கவனத்தை ஈர்ப்பது, தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கற்பித்தலை மாற்றுவது, பெற்றோரின் எதிர்பார்ப்புகளை சமாளிப்பது, கல்விச் சுமைகளுக்கு இடையே மாணவர்களின் தனிப்பட்ட தேவைகளைப் புரிந்துகொள்வது என ஆசிரியர்களின் பொறுப்புகள் அதிகரித்துள்ளன.
இருப்பினும் உண்மையான ஆசிரியர் சவால்களைப் பார்த்து பின்வாங்குவதில்லை. மாணவர்களின் எதிர்காலத்தை முன்னிறுத்தி தொடர்ந்து பயணிக்கிறார்.
அவர் ஒரு விதைப்பவர்; வழிகாட்டி; ஊக்கமளிப்பவர்; நல்ல நண்பர்; வாழ்க்கைப் பயிற்சியாளர்; இறுதியில் ஒரு தலைமுறையை உருவாக்குபவர்.
யார் நல்லாசிரியர்?
மாணவர் நலனில் அக்கறை கொண்டவர் நல்லாசிரியர்.
மாணவனின் திறமையை அடையாளம் காண்பவர் நல்லாசிரியர்.
கற்றலை எளிதாக்குபவர் நல்லாசிரியர்.
தோல்வியடைந்த மாணவனை மீண்டும் எழச் செய்பவர் நல்லாசிரியர்.
நல்லொழுக்கத்தை வளர்ப்பவர் நல்லாசிரியர்.
“உன்னால் முடியும்”
என்று நம்பிக்கை ஊட்டுபவர் நல்லாசிரியர்.
மாணவர்களிடம் நல்ல விதைகளை விதைத்துக்கொண்டே இருப்பவர் நல்லாசிரியர்.
தாமும் தொடர்ந்து
கற்றுக்கொண்டே இருப்பவர் நல்லாசிரியர்.
ஓய்வு பெற்ற பிறகும் மாணவர்களாலும் சமூகத்தாலும் மதிக்கப்படுபவரே என்றென்றும் சிறந்த ஆசிரியர்.
ஆசிரியர் என்பவர் பாடம் நடத்துபவர் மட்டுமல்ல; வாழ்க்கையை நடத்தக் கற்றுக்கொடுப்பவர்.
மாணவர்களின் கண்களில் கனவுகளை விதைத்து,
அவர்களின் இதயத்தில் நம்பிக்கையை வளர்த்து, அவர்களின் பாதையில் ஒளியாக நின்று, அவர்களின் வெற்றியில் தன்னுடைய வெற்றியைக் காண்பவர்களே ஆசிரியர்கள்.
அத்தகைய தன்னலமற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!
**“ஒரு நல்ல ஆசிரியர் ஒரு மாணவனை மட்டும் உருவாக்குவதில்லை;
ஒரு மாணவனின் மூலம் ஒரு தலைமுறையையே உருவாக்குகிறார்.”**
தகவல்: முனைவர். P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
🌹📚 17 ஆண்டுகள் ஆசிரியராக… என் வாழ்க்கையின் பெருமையான பயணம்! 📚🌹
17 ஆண்டுகள்…
இது வெறும் காலத்தின் கணக்கல்ல…
❤️ என் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றிய
ஆயிரக்கணக்கான மாணவர்களின் நினைவுகளின் தொகுப்பு!
📖 ஒவ்வொரு வகுப்பறையும் எனக்கு ஒரு புதிய அனுபவம்…
🌱 ஒவ்வொரு மாணவரும் எனக்கு ஒரு புதிய பாடம்…
✨ ஒவ்வொரு மாணவனின் வெற்றியும்
என் ஆசிரியர் வாழ்க்கையின் ஒரு சிறிய வெற்றி!
நான் கற்றுக் கொடுத்தது பாடங்களை மட்டுமல்ல…
💡 சிந்திக்க,
💪 நம்பிக்கையுடன் நிற்க,
🌱 தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ள,
🏆 வெற்றியை நோக்கி பயணிக்கவும் கற்றுக் கொடுத்தேன்.
🌳 ஒரு ஆசிரியர் விதைக்கும் விதை
அன்றே மரமாகாது…
ஆனால் ஒரு நாள்,
அந்த மரத்தின் நிழலில்
ஒரு தலைமுறையே நிற்கும்!
🙏 இன்று நான் திரும்பிப் பார்க்கும்போது,
என் மாணவர்களின் புன்னகையும்,
அவர்களின் முன்னேற்றமும்,
அவர்களின் வெற்றியும் தான்
என் 17 ஆண்டுகால ஆசிரியர் பயணத்தின்
மிகப்பெரிய விருதுகள்! 🏆❤️
💐 என்னை உருவாக்கிய என் ஆசிரியர்களுக்கு நன்றி…
🤝 என்னுடன் பயணித்த சக ஆசிரியர்களுக்கு நன்றி…
❤️ என்னை நம்பிய என் மாணவர்கள் அனைவருக்கும்
என்றென்றும் நன்றி!
🌟 17 ஆண்டுகள் கடந்தாலும்…
கற்றுக்கொடுப்பதற்கான ஆர்வம் குறையவில்லை;
கற்றுக்கொள்வதற்கான ஆர்வமும் குறையவில்லை!
👨🏫 ஒருமுறை ஆசிரியர்…
என்றென்றும் ஆசிரியர்! ❤️
🌹 இந்த ஆசிரியர் தினத்தில்,
“ஆசிரியர்” என்ற அடையாளத்தை
பெருமையுடன் கொண்டாடுகிறேன்! 🌹
✨ 17 Years of Teaching • Learning • Inspiring ✨
Dr. P. Ramesh Assistant Professor of Physics and HOD
👨🏫 Proud to be a Teacher! ❤️
❤️Happy Teachers Day 💯💪🫶🥳
SAATTAI (2019) Tamil Full Movie HD
இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp குழுவில் இணையவும்.
நன்றி.
தகவல்: முனைவர். P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
மேலும் படிக்க
🛑👌✍️ அரசு தேர்வுகள் பற்றிய முழு விபரங்கள் (TNPSC, TNUSRB, TRB, RRB, TET, SSC).
🛑💳 கொரோனா தடுப்பூசி UNIVERSAL PASS CUM CERTIFICATE எவ்வாறு பெறுவது?
🛑✍️தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் (TRB) தேர்வு தேதி வெளியீடு.
🛑✍️நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.








No comments:
Post a Comment