Saturday, September 4, 2021

வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, வழிகாட்டியாக விளங்கும் ஆசிரியர்கள்-ஆசிரியர் தினம் இன்று (செப்டம்பர் 5).

வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்து, வழிகாட்டியாக விளங்கும் ஆசிரியர்கள்-ஆசிரியர் தினம் இன்று (செப்டம்பர் 5). 


ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டிமாபெரும் தத்துவமேதையாக விளங்கிய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளை ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் திருநாளாக இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒழுக்கம்பண்புஆற்றல்ஊக்கம்தன்னம்பிக்கைவிடாமுயற்சிவாழ்க்கைபொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு சிறந்த முறையில் கற்பித்துஒரு உண்மையான வழிகாட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படிபட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில்செப்டம்பர் 05 நாளை ‘ஆசிரியர் தினமாக’ கொண்டாடுகிறோம். வாழ்க்கை என்ற பாடத்தைக் கற்றுத்தந்துமாணவர்களுக்கு உண்மையான வழிகாட்டியாக விளங்கிஒவ்வொரு மாணவர்களையும்சிறந்த மனிதர்களாக்குவது ஆசிரியர்கள் தான். அத்தகைய எழுச்சிமிக்க மாணவர்களை ஒரு சிறந்த ஆசிரியரால் தான் உருவாக்க முடியும். 


ஆசிரியர் பணி என்பது வெறும் கல்வியை மட்டும் போதிப்பது இல்லைஒழுக்கம்பண்புஆன்மீகம்பொது அறிவு என அனைத்தையும் மாணவர்களுக்கு எடுத்துக்கூறிஅவர்களை சிறந்த மனிதர்களாக்கும் உன்னதப் பணியாகும். அப்படிப்பட்ட தெய்வீகமானப் பணியை மாணவர்களுக்கு அளிக்கதன்னலமற்றதியாக மனப்பான்மை கொண்டவராக இருந்தால் மட்டும் போதாதுகற்பிக்கும் தொழிலை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும். அவர்கள் தான் உண்மையான ஆசிரியர்கள்.  தன்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியை புனிதமாகக் கருதிபிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாகஒரு நல்ல ஆசிரியரால் எவ்வளவு தூரம் பயன்பட முடியும் என்பதை தமது இறுதி காலம் வரை வாழ்ந்துக் காட்டிஒரு மாபெரும் தத்துவமேதையாக உலகிற்குத் தன்னை வெளிப்படுத்திய டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 05 ஆம் நாளைஇந்தியாவில் 1962 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

                                      

கல்வி என்பது குழந்தைகளின் ஒட்டு மொத்த ஆளுமைத் திறனை வளர்க்கும் முயற்சி எனலாம். இம்முயற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களை சமுகமானது மாதா மற்றும் பிதாவைத் தொடர்ந்து அடுத்த நிலையில் தெய்வத்திற்கு மேலாக ஆசிரியர்களைக் கருதும் நிலை இன்றும் காண இயலும். இச்சமூகத்தின் எதிர்பார்ப்பையும் மீறி தன் வகுப்பு மாணவர்கள் மீது அதிக அன்பும்அக்கறையும் கொண்டு அவர்கள் மேம்பட போராடும் ஒவ்வொரு ஆசிரியரும் போர்வீரனே. அதில் வெற்றியோ தோல்வியோ என்ற கேள்விக்கு இடமின்றிஅவர் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கு அனைவரும் தலைவணங்குவார்கள் என்பதில் ஐயமில்லை. “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்” என ஆத்திச்சூடியில் பாடியிருக்கிறார் ஔவையார். ஆசிரியர் என்பவர் இறைவனுக்கு சமமாக பார்க்கப்படுபவர்.

 

ஒரு மாணவனை தன்னம்பிக்கை மிகுந்த மனிதன் ஆக்குவது ஆசிரியர்கள்தான். இப்படி மாணவர்களின் வாழ்வில் ஒரு பெரும் பங்கை வகிப்பதால் தான் ஆசிரியர்கள் என்றும் போற்றப்படுகிறார்கள். ஆசிரியர் தின நன்னாளில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பல பேச்சுப் போட்டிகட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்திமாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும்சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வண்ணமாக அவர்களுக்கு விருதுகள் வழங்கி அரசு அவர்களைப் பெருமைப்படுத்தும். மாணவர்களும்அந்நாளில் தங்களுக்குப் பிடித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகளை வழங்கிவாழ்த்துக்கள் தெரிவிப்பர். இத்திருநாளில் பள்ளிகள்கல்லூரிகள்அலுவலகங்கள் என இந்தியா முழுவதும் விடுமுறை அளிக்கப்பட்டு ஆசிரியர்களுக்கு மரியாதை தரும் வகையில் சிறப்புகள் செய்யப்பட்டு வருகிறது. 

சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் செப்டம்பர் 05, 1888ல் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற இடத்தில் ஒரு ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்தார். தத்துவத்தை முதற்பாடமாகக் கொண்டு இளங்கலைத் துறையில் பி.ஏ. பட்டமும்பின்னர் முதுகலைத் துறையில் எம்.ஏ. பட்டமும் பெற்றவர். சென்னையில் உள்ள பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராகத் தன்னுடைய ஆசிரியர் பணியைத் தொடர்ந்த அவர்இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள்பகவத்கீதைபிரம்மசூத்திராமற்றும் சங்கராராமானுஜர்மாதவர்போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத் தேர்ந்தார். அதுமட்டுமல்லாமல்புத்தமத மற்றும் ஜெயின் தத்துவங்களையும்மேற்கத்திய சிந்தனையாளர்களான பிளாட்டோப்லோடினஸ்காந்த்பிராட்லிமற்றும் பெர்க்சன் போன்றோரின் தத்துவங்களையும் கற்றுஅதன் சிறப்பைப் பற்றி நமது நாட்டில் எடுத்துரைத்தார். மேலை நாடுகளுக்குச் செல்லாமல்நம் நாட்டிலேயே அனைத்து சித்தாந்தங்களையும் படித்துஒரு தத்துவமேதையாகத் உலகிற்குத் தன்னை வெளிப்படுத்தினார்.

 

1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921ல்கல்கத்தா பல்கலைக்கழகத்தில்தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923ல்,  டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” வெளியிடப்பட்டது. இப்புத்தகம்பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது. இந்துமதத் தத்துவங்கள் பற்றி விரிவுரைகள் வழங்கஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம்டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பு விடுத்தது. பல மேடைகளில்அவரது சொற்பொழிவுகளை இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஒரு ஆயுதமாக பயன்படுத்தினார். மேற்கத்திய சிந்தனையாளர்களின் அனைத்து கூற்றுகளும் பரந்த கலாச்சாரத்தில் இருந்து இறையியல் தாக்கங்கள் சார்புடையதாகவே உள்ளது என்று வாதிட்டார். இந்தியத் தத்துவங்களைத் தரமான கல்வி வாசகங்கள் உதவியுடன் மொழிப்பெயர்த்தால்மேற்கத்திய தரங்களையும் மிஞ்சி விடும் என்றுரைத்தார். இவ்வாறு இந்தியத் தத்துவத்தை, ‘உலக வரைபடத்தில் வைத்த ஒரு மாபெரும் தத்துவஞானி’ என டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைக் கூறலாம். 


1931 ஆம் ஆண்டுடாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள்ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஆம் ஆண்டுபெனாரஸ் இந்துமதம் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரானார். 1946ல்அவர் யுனெஸ்கோவின் தூதுவராக நியமிக்கப்பட்டார். சுதந்திரத்திற்குப் பின், 1948ல் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களைபல்கலைக்கழகக் கல்வி ஆணையத் தலைவராகுமாறு கேட்டுக்கொண்டது. இந்தியக் கல்வி முறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும்சிறப்பான கல்வித் திட்டத்தை வடிவமைக்கவும்ராதாகிருஷ்ணன் அவர்களுடைய குழுவின் பரிந்துரைகள் பெரிதும் உதவியது. இயற்கையோடு இயைந்த முறையிலான கல்வியை அவர் என்றும் வரவேற்றார். மனிதனுக்குக் கல்வி பெறும் திறன் இருப்பதுதான் அவனை விலங்கிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது என்றார்.

 

கல்வியின் நோக்கம் மனித மனத்தில் ஒளி பாய்ச்சிஅவனுக்குள்ளே இருக்கும் குரங்கு தன்மையை நீக்கிஇதயத்தில் அன்பை வளர்த்துஅனைவற்றிற்கும் மேலாக உயிரோட்டமுள்ள கற்பனைத் திறனை உருவாக்குவதாகும். விஞ்ஞானத்தையும் தொழில் நுட்பத்தையும் மட்டும் கற்பிக்கும் கல்வி ஒரு மனிதனை சிறு தொழில் நுட்பாளனாக உருவாக்குமே தவிர நல்ல மனிதனாக ஆக்காது என்பதை வாதிட்டார். விஞ்ஞானம் அவனுக்கு இயற்கையை வெற்றி கொள்ளவும் பூமியைச் சூறையாடவும் உதவியிருக்கிறது. காற்றில் பறக்கவும் கடலுக்கடியில் நீந்தவும் அவனுக்கு சக்தி அளித்துள்ளது. இவையனைத்தும் மனிதனின் உண்மையான இயல்பு அல்ல. மனிதன் தன்னுடனேயே அமைதியான வாழும் திறனைக் கல்வி அவனுக்கு அளிக்கவில்லை என்று சாடினார்.

 

இந்திய சுதந்திரம் மற்றும் இந்தியக்கல்வி இரண்டிலும் தீவிர அக்கறை கொண்டவராக இருந்தார். மனிதனுடைய வாழ்வு விலங்குகளிடமிருந்து வேறுபட்டுள்ளதை தனது பல்வேறு உரைகளில் எடுத்துரைக்கச் செய்தார். மனிதனை கடவுளின் படைப்பின் மகுடம் என்றும் மனம் போனபோக்கில் செல்லாமல், தான் என்ன செய்ய வேண்டும் என்பதைச் சுதந்திரமாக தெரிவுச்செய்து செயல்படக் கூடியவனாக விளங்க வேண்டும் என்றார். மேலும் அவர் நாம் அனைவருமே வாழ்க்கையின் பொருள் என்னவென்பதையும்வாழ்வின் நோக்கம் என்னவென்பதையும் அறிய வேண்டியவனாகிறோம் என்றும் ஒவ்வொருவரும் வாழ்க்கைக்கான திட்டத்தையும்நோக்கத்தையும் அறிந்து கொள்ளாமல் அமைதி காண இயலாது என்கிறார். உங்களது இலட்சியமும் நம்பிக்கையும் ஒரு கோட்பாட்டில் அமையாவிட்டால்உங்கள் நடத்தை சஞ்சலமடைந்து முயற்சி (சக்தி) வீணாகிவிடும் என்கிறார். அதிலும் கோட்பாட்டில் நம்பிக்கை உறுதிப்படுத்துவதன் மூலம் தான் நடத்தை உருவாகிறது என்பதை திறம்பட உரைக்கிறார்.

                             

ஒவ்வொரு மனிதனும் தனித்த வாழ்க்கையன்றி மற்ற மனிதர்களுக்கிடையில்தான் வாழ்கின்றான். இதன் விளைவாக தோன்றியதுதான் நாகரீகம். ஓவ்வொருவரும் இன்பங்களை அனுபவித்து மகிழ்ச்சியுடன் வாழ மற்றவரின் ஒத்துழைப்பும் இணக்கப்பண்பும் அவசியம் என்பதை மேலும் வலியுறுத்துகிறார். கோழைத்தனத்தை வெறுத்து தைரியத்தை ஆதரித்ததோடுதைரியம் இல்லாமல் எந்த நற்பண்பும் வாழ முடியாது என்றும்எல்லா அம்சங்களையும் கவனமாகக் கணித்து திட்டமிட்டு தைரியமாக செயல்படுத்த வேண்டும் என்பதே அவரின் தின்னமான கருத்தாக இருந்தது. நாம் எப்போதும் நிகழ்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அணுகுமுறைகளை மாற்றிக் கொள்ள முடியும் என்றார். டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்க்கு 1954 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவரும்இரண்டாவது குடியரசுத் தலைவரும் ஆவார்.  பாரத ரத்னா டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஏப்ரல் 17, 1975ல் தனது 86வது அகவையில் சென்னையில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

                                  

என்றென்றும் மாணவர் உலகில் நறுமணம் வீசிட செய்திடும் ஆசிரியர் உலகுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்..

Source By: itstamil, Wikipedia,

தகவல்: முனைவர். P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.


யார் நல்லாசிரியர் செப்டம்பர் -5 ஆசிரியர் தினம் 

உன்னால் முடியாது என ஆயிரம் பேர் பின்னால் கூறினார்கள். உன்னால் முடியும் என என் ஆசிரியர் கூறினார். இன்றைய என் வெற்றிகளுக்கு காரணமான ஆசிரியர்க்கு ஆசிரியரின் நல்வாழ்த்துக்கள். மாணவர் நலனில் அக்கறை, நல்லொழுக்கத்தை வளர்ப்பவர், கற்றலை எளிதாக்குபவர், ஊக்கமளிப்பவர், இவையெல்லாம் சிறந்த ஆசிரியரின் நற்குணங்கள்.


ஆசிரியராக வேலை பார்க்கும் போது மாத சம்பளம் கிடைக்கின்றது. நான் நன்றாக பாடம் நடத்துகின்றேன், இது மட்டுமல்ல ஆசிரியர் பணி, எத்தனை மாணவர்களை உருவாக்கினேன் என்பதுதான் முக்கியம். 

Not only Teaching and also Creating

வகுப்பறையில் மாணவர்களை கண்டிப்பது தவறல்ல, ஆனால் அன்று மாலைக்குள் பள்ளி முடிவடைவதற்குள் எந்த மாணவனை கண்டித்தோமோ அவனை தனியாக பேசி அவனுடைய நல்ல குணங்களை கூறி, உன்னால் முடியும் என வழிகாட்டி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உள்ள மன வேறுபாடுகளை பள்ளியிலேயே சுமுகமாக திருத்துக்கொள்ள வேண்டும். மனபாரத்துடன் ஆசிரியரோ மாணவர் வீட்டிற்கு சென்றாள் நிம்மதி இருக்காது. 


ஆசிரியர் பணி ஒரு காலத்தில் சிறந்த பணியாக இருந்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் மிகவும் கடினமான பணியாக மாறிவிட்டது. 

ஆசிரியர் என்பவர் நல் விதையை மாணவர்கள் இடத்தில் விதைக்க வேண்டும். விதை உடனே முளைக்குமா, சிறிது காலம் கழித்து முளைக்குமா, முளைக்காமலேயே விட்டுவிடுமா, என்பதை பற்றி கவலை பட கூடாது. நல்ல எண்ணங்களை விதைத்துக் கொண்டே இருக்க வேண்டும். நமது பணியை நாம் சிறப்பாக செய்து கொண்டே இருக்க வேண்டும். தலைமை ஆசிரியரோ, நிர்வாகமோ, பெற்றோரோ நம்மை பாராட்டுவார்கள் என நினைத்து செய்ய வேண்டாம். நமது மனதிருப்திக்கு நாம் சிறப்பாக செய்து கொண்டே இருக்க வேண்டும். 

அண்மையில் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற 72 வயது நபர் சீர்காழியில் உள்ள அரசு பாலிடெக்னிக்கில் சேர்ந்து தினந்தோறும் படிக்க செல்கின்றார்.  ஒரு பேருந்தை விட்டவருக்கு தான் தெரியும் அடுத்த பேருந்தை விட்டுவிடக்கூடாது என்று. அன்று பாலிடெக்னிக் படிக்க முடியாத அந்த கனவு இன்று 72 வயதில் அவருக்கு நிறைவேறுகின்றது. 

நல்லாசிரியர் என்றும் சிறந்த மாணவர், புத்தகங்கள் மூலமாக நூலகங்கள் மூலமாக தொடர்ந்து  படித்துக்கொண்டே கொண்டே இருப்பவர். எந்த ஆசிரியர் ஓய்வு பெற்ற பிறகும் மாணவர்களாளும், பொதுமக்களாளும், மதிக்கப்படுகின்றாரோ அவர்தான் என்றும் சிறந்த ஆசிரியர்.




SAATTAI (2019) Tamil Full Movie HD


இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: முனைவர். P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...