Saturday, February 28, 2026

தோகைமலை செர்வைட் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம்.

தோகைமலை செர்வைட் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம்.


கரூர் தோகைமலை சர்வீட் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டின் மாநில செயலாளர், நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர்  முனைவர் ரமேஷ் கலந்து கொண்டு விண்வெளி குறித்த சிறப்புரை ஆற்றினார். இதில் சூரிய குடும்பம், கோள்கள் நிலாக்கள், விண்கற்கள், பிரபஞ்சம் தோன்றிய விதம், நட்சத்திரங்கள் உருவான விதம், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், நட்சத்திர கூட்டங்கள், செயற்கை கோள்கள் போன்ற பல்வேறு விண்வெளி குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டார். 






சூரிய வடிகட்டி மூலம் தொலைநோக்கியின் வழியாக சூரியனை பார்த்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வானது  மாணவிகளிடையே வானவியல் பற்றிய அறிவியலை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.




No comments:

Post a Comment

தோகைமலை செர்வைட் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம்.

தோகைமலை  செர்வைட்  கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம். கரூர் தோகைமலை சர்வீட் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரிய...