Wednesday, February 12, 2025

நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறு கோள்கள் அணிவகுக்கப்படும் அரிய வான்நோக்கல் நிகழ்ச்சி.

நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறு கோள்கள் அணிவகுக்கப்படும் அரிய வான்நோக்கல் நிகழ்ச்சி.


ஜனவரி 21 ஆம் தேதி முதல் வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய ஆறு கோள்கள் இரவு வானில் அணிவகுக்கப்படுவதால் ஒரு அரிய வான நிகழ்வு நடைபெறுகிறது. 12.02.2025 புதன்கிழமை பிற்பகல் 05.30 மணிமுதல் இரவு 08.30 மணிவரை நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளி  வளாகத்தில், திருச்சி- புத்தனாம்பட்டி நேரு நினைவுக்கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் முனைவர் இரமேஷ் மற்றும் குழுவினர்  Celestron 6SE 6" Advanced வானியல் தொலைநோக்கி மூலம் வான்நோக்கல் நிகழ்வு நடத்தப்பட்டது. இயற்பியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் ரமேஷ் பேசுகையில் நிலவின் இயக்கம், சூரிய குடும்பம் மற்றும் கோள்கள் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார். 


இந்த நிகழ்வில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அதிநவீன தொலைநோக்கி மூலம் சூரிய வடிகட்டி வழியாக சூரியனின் கரும்புள்ளிகள், பூமியின் துணைக்கோளான அழகிய நிலா, செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய கோள்கள் நேரடியாக காண்பிக்கப்பட்டது. இளநிலை இரண்டாம் ஆண்டு  இயற்பியல் அருட்செல்வன்  மூன்றாம் ஆண்டு இளநிலை வேதியியல் ஸ்ரீதர்  மாணவ மாணவிகளுக்கு  விளக்கம் அளித்தனர். இந்த விழாவில் 400க்கும்  மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும்  பொதுமக்கள்  பங்கு பெற்றனர். நேரு நினைவுக் கல்லூரி, நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளி, மற்றும் NMC ஆஸ்ட்ரோ கிளப் மற்றும் ஆகியவை இணைந்து இந்த விழாவை நடத்தியது. மேலும் இந்த நிகழ்ச்சியின் நோக்கம் வானவியல் தொடர்பான ஆர்வத்தை தூண்டுவதற்காகவும், இன்னும் பலர் வானவியல் நட்சத்திரங்களையும் கோள்களையும் தொலைநோக்குகளில் பார்க்காதவர்கள் பார்ப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இருந்தது.

 



நேரு நினைவுக்கல்லூரி கல்லூரித்  தலைவர் திரு பொன். பாலசுப்பிரமணியன், கல்லூரி செயலர் பொன்.இரவிச்சந்திரன், முதல்வர் முனைவர் வெங்கடேசன், மீனாட்சிசுந்தரம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி, நக்கசேலம் தலைமை ஆசிரியர் ரமேஷ், ஆசிரியர் ஓம் பிரகாஷ் வழிகாட்டுதல் உடன் இந்த நிகழ்ச்சியை இயற்பியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் பொ. ரமேஷ் ஒருங்கிணைத்தார்.



இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

                                                       மேலும் படிக்க 

🛑🤔 இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் அரசு வேலை எது?

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.

நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறு கோள்கள் அணிவகுக்கப்படும் அரிய வான்நோக்கல் நிகழ்ச்சி.

நக்கசேலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆறு கோள்கள் அணிவகுக்கப்படும் அரிய வான்நோக்கல் நிகழ்ச்சி. ஜனவரி 21 ஆம் தேதி முதல் வெள்ளி , செவ...