Tuesday, March 31, 2026

கண்ணூர் பாளையம் கிராமத்தில் வான்நோக்கல் நிகழ்ச்சி.

கண்ணூர் பாளையம் கிராமத்தில் வான்நோக்கல் நிகழ்ச்சி.

இன்று 31.03.2026 துறையூர் அஸ்ட்ரோ சார்பாக இரவு வான் நிகழ்வில் அழகிய நிலா, வெள்ளி மற்றும் வியாழன் ஆகிய கோள் மேம்படுத்தப்பட்ட தொலைநோக்கியின் மூலமாக  கண்ணூர் பாளையம் கிராமத்தில் சுற்றுவட்டாரத்தில் 100 மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கண்டுகளித்தனர். 



தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டின் மாநில செயலாளர், நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர்  முனைவர் ரமேஷ் கலந்து கொண்டு விண்வெளி குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். துறையூர் அஸ்ட்ரோ கிளப் செயலாளர் மகேஸ்வரன்  முன்னிலை வகித்தார். கல்லூரி மாணவிகள் கிருத்திகா மற்றும் கவுசல்யா நிகச்சியை ஒருங்கிணைத்தார்கள். குறிப்பாக மாணவ மாணவிகள் வானோக்கு செயல்களை ஆர்வத்துடன் பார்த்து கண்டுகளித்தனர்.






















திருச்சி: நிலா, வெள்ளி, வியாழன் கோள்களை கண்டுகளித்த பொதுமக்கள்

இந்த தகவலை முழுமையாக படிக்கவும்: 

Sunday, March 29, 2026

முசிறி நூலகத்தில் இளைஞர்களுக்கான ஒரு நாள் தலைமைப்பண்பு பயிற்சி பட்டறை.

முசிறி நூலகத்தில் இளைஞர்களுக்கான ஒரு நாள் தலைமைப்பண்பு பயிற்சி பட்டறை.


முசிறி முழு நேர கிளை நூலகம், முசிறி வாசகர் வட்டம் மற்றும் களம் இலக்கிய அமைப்பு இணைந்து நடத்திய இளைஞர்களுக்கான ஒரு நாள் தலைமைப்பண்பு பயிற்சி பட்டறை 29.03.26 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் மாணவர்களுக்கு தேவையான மென் திறன்கள் குறித்து இந்திய அளவில் புகழ்பெற்ற தலைமை பண்பு பயிற்சியாளர் திருமிகு ஆர்த்தி அவர்கள் சிறப்பாக எடுத்து வழங்கினார். இதில் மாணவர்கள் எவ்வாறு தன்னை உணருதல், பிறரிடம் உரையாடுதல், உறவாடுதல், ஆளுமை திறன்கள், தலைமைப்பண்பு, கூட்டு முயற்சி, கவன உழைப்பு, சூழ்நிலையை கையாளுதல் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வழங்கினார். வாய்ப்பை சரியாக பயன்படுத்துபவரே திறமைசாலியாக மாறுகிறார் என்றும், நமக்கு தேவை இருந்தால் நான் தான் தேடிப் போக வேண்டும் என்றும், எல்லோரும் வாழ்வில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நமக்கு உதவி புரிவார்கள் என்றும் விளக்கமாக எடுத்துக் கூறினார். ஒவ்வொரு மாணவர்களுக்கும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும். தேடல் இருந்து கொண்டே இருந்தால்தான் புதிதாக நாம் கற்றுக் கொண்டு இருக்க முடியும். இதுவே மாணவர்களுக்கு அவர்கள் எடுத்துக் கூறிய அறிவுரையாகும்.






தகவல்: முனைவர் P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டி.


இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர் P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Monday, March 23, 2026

நேரு நினைவு கல்லூரியின் 22வது பட்டமளிப்பு விழா.

நேரு நினைவு கல்லூரியின் 22வது பட்டமளிப்பு விழா.

துறையூர், மார்ச் 23. திருச்சி மாவட்டம், துறையூர் அருகே புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியின் 22வது பட்டமளிப்பு விழா கல்லூரியின் மூக்கப்பிள்ளை கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரிக்குழு செயவர் பொன்.ரவிச்சந்திரன் வரவேற்றார். கல்லூரிக்குழுத் தலைவர் பொன்.பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி துணைமுதல்வர் முனைவர் தமிழ்மணி ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரி முதல்வர் வெங்கடேசன் பட்டம் பெற்ற மாணவர்களை உறுதிமொழி ஏற்க செய்து பட்டமளிப்பு விழாவை நிறைவு செய்தார்.



சிறப்பு விருந்தினராக சென்னை, ரானே குழும நிறுவனங்களின் தலைவர் ஹரீஷ்லட்சுமணன் கலந்து கொண்டு பல்கலைக்கழக அளவில் தரவரிசைப் பட் டியலில் தமிழில் முதலிடம் பெற்ற தமிழ்த்துறை மாணவி பவித்ரா உள்ளிட்ட தரவரிசை பெற்ற 23 மாணவ, மாணவியர்களுக்கு பதக்கம், முதுகலை மற்றும் இளங்கலையில் பல்வேறு துறைகளை சேர்ந்த 852 பேருக்கு பட்டம் வழங்கி பேசினார். கிராமப்புற மக்கள் கல்வி கற்க வேண்டும் என்கிற உயர்த்த நோக்கத்தில் கல்லூரி நிறுவனர் மூக்கப்பிள்ளை இந்த கல்லூரியை நிறுவியுள்ளார். இன்று இந்தக் கல்லூரியில் பயில்கிற மாணவர்களில் 95 விழுக்காடு பேர் கிராமப்புறத்தை சேர்த்தவர்கள் என்பது பெருமைக்குரியதாகும் என்று கூறினார். ரானே குழும நிறுவனத்தை சேர்த்த ஐயப்பன் சிவபாலாஜி கல்லூரிக்குழு உறுப்பினர்கள் லோகநாதன், மாலாபாலசுப்பிரமணியன், சியாமளா ரவிச்சந்திரன், தனிபு கிஷன், முனைவர் சோம. ராசேந்திரன், சுயநிதிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர்.மீனாட்சிசுந்தரம், தேர்வு தெழியாளர் முனைவர்.மேரி அன்புமதி, கல்வி புலத்தலைவர் முனைவர்.சாவித்திரி, உள்தர கட்டுப்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர்.சரவணன், வேலைவாய்ப்பு மைய பொருப்பாளர் முனைவர் கஸ்தூரி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியால்லாப்பணியாளர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.



நாசாவின் ஆர்டெமிஸ் 2 நிலவு திட்டம் - சந்திரனில் தரையிறங்காமல் 10 நாட்கள் என்ன செய்யும்?

நாசாவின் ஆர்டெமிஸ் 2 நிலவு திட்டம் - சந்திரனில் தரையிறங்காமல் 10 நாட்கள் என்ன செய்யும்? 2026 ஏப்ரல் 1 நிலவரப்படி, ஆர்டெமிஸ் II விண்ணேவு வாகன...