த.பாதர்பேட்டை பள்ளி ஆசிரியர் தனலட்சுமி சரஸ்வதி பாடல் எழுதி உலக சாதனை நிகழ்வு.
பெங்களூர் ஷியாம்ஸ் ஆர்ட் மற்றும் கிராஃப்ட் அகாடமி யூனிட்டி யூனிவர்ஸ் புக் ஆஃப் ரெகார்ட் நிறுவனம் இன்று காலை எட்டு மணி அளவில் இணையவழி காணொளி மூலம் உலக சாதனை நிகழ்ச்சி ஆனது மிகச் சிறப்பாக நடைபெற்றது. சரஸ்வதி ஓவிய படத்தில் சரஸ்வதி அந்தாதி, சகலகலாவல்லி மாலை, கலைமகள் போற்றி, வீணை ஏந்தும் சரஸ்வதி போன்ற பாடல்களை போஸ்டரில் (நீளம் 4 அடி, அகலம் 3 அடி) திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி த.பாதர்பேட்டையில் பணியாற்றி வரும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தனலட்சுமி அவர்கள் தன் வீட்டில் இருந்து எழுதினார்.
சரஸ்வதி தேவியின் ஓவியத்தில் சுமார் 2 மணி நேரத்தில் அனைத்து பாடல்களையும் எழுதி சாதனை படைத்துள்ளார். அறிவியல் பட்டதாரி ஆசிரியராக இருந்தாலும் தொடர்ந்து தமிழ் மொழியில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். ஆசிரியரின் உலக சாதனை நிகழ்வானது போற்றுதலுக்குரியது. விடுமுறை நாட்களையும் பாராமல் இந்த உலக சாதனை நிகழ்வை நிகழ்த்தியுள்ளார். இந்நிகழ்வை பாராட்டி மற்ற ஆசிரியர்கள் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தொடர்ந்து தெரிவித்துக் கொண்டு வருகின்றார்கள்.
- இது போன்ற தகவல் பெற
நன்றி.
முனைவர். P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
🛑👍👌 உனக்கான வாய்ப்பை உருவாக்கி கொள்-அனைத்து மாணவர்களும் காண வேண்டிய பதிவு.
மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.








.png)
