Friday, October 10, 2025

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி.

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி.


இன்று உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி த.பாதர்பேட்டையில் வானவியல் கண்காட்சி வெகுச் சிறப்பாக நடைபெற்றது. முதல் நிகழ்வாக பள்ளி தலைமையாசிரியர் திரு.அசோக்குமார்  அவர்கள் வரவேற்புரை நடத்தினார்.  அக்டோபர் 4ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தேசிய விண்வெளி வாரம் என்பதால் மாணவர்களுக்கு வானியல் சார்ந்த கண்காட்சி வைக்க திட்டமிடப்பட்டது.


 அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திருமதி.தனலட்சுமி அவர்கள்  விண்வெளி குறித்த படைப்புகளை செய்ய  மாணவர்களுக்கு வழிகாட்டி இருந்தார்.இந்நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். இதில்  40க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்களது விண்வெளி சார்ந்த படைப்புகளை செய்து விளக்கி கூறினார்கள். இக்கண்காட்சியில் செயற்கைகோள்,ராக்கெட்,நிலா ,சூரியகுடும்பம்,கிரகணங்கள், பிஸ்கட் மூலம் தேய்பிறை, வளர்பிறை,வாட்டர் பாட்டிலில் ராக்கெட்,பூமியின் சுழற்சி ,நெபுலா மூலம் வகுப்பறையில் விண்மீன் கூட்டம், பால்வழித்திரள் போன்ற படைப்புகளை காட்சிப்படுத்தினார். உடன் சுப்ரமணியன், தனலட்சுமி, சுதாகர், சாந்தி ஆகிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

வானவியல் கண்காட்சி மிகச் சிறப்பாக நடைபெற திருச்சி அஸ்ட்ரோ கிளப் வழிகாட்டியது குறிப்பிடத்தக்கது.



 


இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

நன்றி.
முனைவர். P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Thursday, September 25, 2025

ரயிலில் இருந்து 2000 கி.மீ தூரம் வரை தாக்கும் அக்னி - ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றி.

ரயிலில் இருந்து 2000 கி.மீ தூரம் வரை தாக்கும் அக்னி - ப்ரைம் ஏவுகணை சோதனை வெற்றி.


ரயிலில் இருந்து மொபைல் லாஞ்சர் மூலமாக 2,000 கி.மீ. வரையிலான இலக்கை தாக்கும் அக்னி - ப்ரைம் ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியதற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.
இது தொடர்பாக ராஜ்நாத் சிங் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ரயிலில் இருந்து மொபைல் லாஞ்சர் மூலமாக அக்னி - ப்ரைம் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக ஏவியுள்ளது. இந்த அடுத்த தலைமுறை ஏவுகணை 2000 கி.மீ. வரையிலான இலக்கை தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இது பல்வேறு மேம்பட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது.
நகரும் ரயில்களின் மூலம் ஏவுகணைகளை ஏவும் அமைப்பை உருவாக்கிய நாடுகளின் வரிசையில் இந்தியாவும் சேர்ந்துள்ளது. இந்த அக்னி - ப்ரைம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்ததற்காக டிஆர்டிஓ, எஸ்எஃப்சி மற்றும் ஆயுதப்படைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வகை ஏவுகணை ரயில் நெட்வொர்க் மூலம் நகரும் திறனைக் கொண்டுள்ளது. இதன் மூலமாக நாடு முழுவதிலும் இருந்து, குறுகிய நேரத்தில் நமது எதிர்வினையை தொடங்க முடியும்” என்றார்.

டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தயாரித்த ஏவுகணைகள் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளன. தொடர்ந்து, அடுத்த தலைமுறை ஏவுகணைகளை தயாரிக்கும் பணியில் தீவிரம் காட்டி வரும் டிஆர்டிஓ, வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் வகையில், அக்னி பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்து அசத்தியுள்ளது.

முதன் முறையாக ரயிலில் இருந்து ஏவப்பட்ட இந்த ஏவுகணை சுமார் 2 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் சென்று, இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. அக்னி-1, அக்னி-2 வரிசையில், மேம்படுத்தப்பட்ட பதிப்பான அக்னி பிரைம் எடை குறைவாகவும், கையாள எளிதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, ரயில், சாலை போன்ற பல்வேறு தளங்களில் இருந்தும் ஏவும் வகையில், சிறப்பு மிக்க நகரும் ஏவுதள அமைப்பைக் கொண்டுள்ளது. குறிப்பாக, கேனிஸ்டர் எனப்படும் சிறப்பு கொள்கலனில் இந்த ஏவுகணை வைக்கப்பட்டுள்ளதால், இதனை ரயில்கள், லாரிகள் போன்ற வாகனங்களில் எளிதாக ஏற்றிச் செல்ல முடியும்.




இத்தகைய சிறப்புவாய்ந்த திட்டத்திற்கு சோவியத் யூனியன் தான் முன்னோடி. 1980-களில், RT-23 Molodets என்ற கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணையை ரயில் அடிப்படையிலான அமைப்பில் சோவியத் யூனியன் நிலைநிறுத்தியது. பனிப்போர் சமயத்தில், அமெரிக்கா முன்னெடுக்கும் தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, தங்கள் அணு ஆயுத ஏவுகணைகளை மொபைல் கேனிஸ்டர் அமைப்பில் வைத்து ரயில்களிலும், சாலைகளிலும் நகர்த்தி வந்தது சோவியத் யூனியன்.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

Friday, September 19, 2025

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்.. எப்போது , எங்கு நிகழும்.

இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்.. எப்போது , எங்கு நிகழும்.



செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் சந்திரன் சந்திர கிரகணம் நடைபெற்றது. அப்போது நிலா இரத்த நிலவு போல் காட்சியளித்தது. இதனை தொடர்ந்து செப்டம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை மற்றொரு கிரகணம் நடைபெற உள்ளது.


​சூரிய கிரகணம் என்றால் என்ன?

பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய ஒளியை முழுமையாகவோ அல்லது பாதியாகவோ மறைக்கும் போது சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனால் வானத்தில் சூரியனின் பிறை வடிவ நிழல் தோன்றும். சந்திர கிரகணங்களைப் போலல்லாமல், சூரிய கிரகணங்கள் பூமியில் குறிப்பிட்ட இடங்களிலிருந்து மட்டுமே தெரியும்.


இந்த ஆண்டின் சூரிய கிரகணம் எப்போது?

சூரிய கிரகணம் செப்டம்பர் 21, 2025 அன்று நிகழ உள்ளது. இது இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணமாகும். இது ஒரு பகுதி கிரகணமாக இருக்கும், அதாவது சந்திரன் சூரியனின் ஒரு பகுதியை மட்டுமே மறைக்கும். உலகின் சில பகுதிகளில் உள்ள மக்கள் வானத்தில் பிறை வடிவ சூரியனைக் பார்க்கமுடியும். இது ஒரு பகுதி கிரகணமாக இருக்கும், சில பகுதிகளில் சந்திரன் சூரியனின் 85% வரை மறைக்கும்.



சூரிய கிரகணம் -நேரம்
செப்டம்பர் 21ஆம் தேதி இரவு 10.59 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்குகிறது. நள்ளிரவு 1.11 மணிக்கு முழுமை அடைந்து செப்டம்பர் 22ஆம் தேதி அதிகாலை 3.23 மணியளவில் சூரிய கிரகணம் நிறைவடைகிறது. வானம் சற்று மங்கலாக இருக்கும், ஆனால் முழு கிரகணத்தைப் போல முற்றிலும் இருட்டாக மாறாது.

யாரெல்லாம் பார்க்கலாம்?

இந்த கிரகணம் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பசிபிக் பெருங்கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் உள்ளிட்ட சில பகுதிகள் தெற்கு அரைக்கோளத்தில் காணப்படும்.

யாரெல்லாம் பார்க்க முடியாது?

 ஆனால் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் நேபாளம் உள்ளிட்ட நாடுகளால் பார்க்க முடியாது. பகுதி நேர சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவில் நிகழ்கிறது. இந்த நேரத்தில், இந்தியாவில் சூரியனை சுற்றி வரும் போது இந்திய பகுதி அடியில் இருக்கும். இதன்காரணமாக இந்த சூரிய கிரணத் பார்க்க முடியாது. முன்னதாக இந்த ஆண்டு, முதலாவது, பகுதி சூரிய கிரகணம், மார்ச் 29 அன்று நடந்தது குறிப்பிடத்தக்கது.




இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: முனைவர்.P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

Saturday, September 6, 2025

முழு சந்திர கிரகணம்! 7-ஆம் தேதி நிகழும் வானவியல் அற்புதம்!

முழு சந்திர கிரகணம்! 7-ஆம் தேதி நிகழும் வானவியல் அற்புதம்!

செப்டம்பர் 7, 2025 அன்று இரவு 11:01 மணி முதல் நள்ளிரவு 12:23 மணி வரை 82 நிமிடங்களுக்கு முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்த அற்புதமான வானவியல் நிகழ்வின் போது, பூமியின் நிழல் நிலவை முழுவதுமாக மறைப்பதால், நிலவு அடர் சிவப்பு நிறத்தில் தோன்றும். இது ‘இரத்த நிலவு’ (Blood Moon) என்று அழைக்கப்படுகிறது. வானம் தெளிவாக இருந்தால், இந்தியாவில் இந்த கிரகணத்தை முழுமையாக காண முடியும். இந்த முழு சந்திர கிரகணம், நிலவு பூமியின் மைய நிழலில் (Umbra) முழுமையாக நுழையும் போது நிகழ்கிறது.

இந்த நிகழ்வு இரவு 10:28 மணிக்கு பகுதி கிரகணமாக தொடங்கி, 11:01 மணிக்கு முழு கிரகணமாக மாறும். இரவு 12:23 மணிக்கு முழு கிரகணம் முடிந்து, 1:56 மணிக்கு பகுதி கிரகணமும் முடிவடையும். இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்ப்பது பாதுகாப்பானது, மேலும் இதற்கு தொலைநோக்கி அல்லது பைனாகுலர் தேவையில்லை.

இந்த சந்திர கிரகணம் இந்தியாவில் மட்டுமல்லாமல், ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் கிழக்கு தென் அமெரிக்காவின் சில பகுதிகளிலும் தெரியும். அடர் சிவப்பு நிறத்தில் நிலவு தோன்றுவது, பூமியின் வளிமண்டலத்தில் சிதறும் சூரிய ஒளியால் ஏற்படுகிறது. இந்தியாவில் வானிலை சாதகமாக இருந்தால், சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் இந்த அழகிய காட்சியை காணலாம்.வானியல் ஆர்வலர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும்.

இந்திய வானவியல் ஆய்வு மையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் கிரகணத்தை பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. “இந்த கிரகணத்தை பார்ப்பது பாதுகாப்பானது மற்றும் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் ஒரு அனுபவமாக இருக்கும்,” என்று வானியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வானம் மேகமூட்டமாக இல்லாவிட்டால், இந்த 82 நிமிட அற்புதத்தை அனைவரும் அனுபவிக்கலாம்.






இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: முனைவர். P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

Thursday, September 4, 2025

மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சந்திர கிரகணம் விழிப்புணர்வு.

மண்ணச்சநல்லூர் அரசு  மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சந்திர கிரகணம் விழிப்புணர்வு.

நேரு நினைவு கல்லூரியின் இயற்பியல் உதவி பேராசிரியர் முனைவர் R. கபிலன் மற்றும் முனைவர் P. ரமேஷ் அவர்கள் பங்குபெற்று விண்வெளி மற்றும் விண்வெளியில் இஸ்ரோ வளர்ந்த விதம் பற்றி எடுத்துக் கூறினார்.  மேலும் சந்திர கிரகணம் எப்படி ஏற்படுகிறது என்றும், வரும் செப்டம்பர் 7 இரவு நடைபெறும் சந்திர கிரகணம் பற்றிய செயல் முறை விளக்கமும் மாணவிகளுக்கு அளிக்கப்பட்டது. சந்திர கிரகணம் எவ்வளவு நேரம் நடைபெறுகிறது மற்றும் சிவப்பு நிலவு ( ரத்த நிலவு) ஏற்படும் காரணம் குறித்தும் மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இறுதியாக வகுப்பில் செயற்கை விண்வெளி காட்சி பார்த்து மாணவிகள் மகிந்தனார்.








மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவிகள் பால ஜனனி, ஆதிசக்தி மற்றும் கோபிகா, இரண்டாம் ஆண்டு கணினி அறிவியல் மாணவிகள் கங்கா, மித்ரா, கிரிஜா மற்றும் பிரியங்கா ஆகியோர் மாணவிகளுக்கு இந்த நிகழ்ச்சிக்கு தேவையான உதவிகளை செய்தார்கள்.

தகவல்: முனைவர். P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.







இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: முனைவர். P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

Thursday, August 28, 2025

துறையூர்: மாணவர்களுக்கு தேசிய விண்வெளி தினம் குறித்த விழிப்புணர்வு.

துறையூர்: மாணவர்களுக்கு தேசிய  விண்வெளி தினம் குறித்த விழிப்புணர்வு.

துறையூர் நகராட்சி உயர்நிலை பள்ளியில் மாணவர்களுக்கு தேசிய  விண்வெளி தினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 



நேரு நினைவு கல்லூரியின் இயற்பியல் உதவி பேராசிரியர் முனைவர் P. ரமேஷ் அவர்கள் பங்குபெற்று விண்வெளி மற்றும் சூரிய குடும்பம் உருவான விதம் பற்றி எடுத்துரைத்தார். இதில் விண்வெளி குறித்தும், வளிமண்டலம் குறித்தும், இஸ்ரோவில் உள்ள பல்வேறு ராக்கெட்டுகள் (SLV, SSLV, PSLV, GSLV, GSLV MK-III) செயற்கைக்கோள்கள் எவ்வாறு செயல்படு விதம் போன்றவற்றை எடுத்துரைத்தார். மேலும் விண்வெளி ஆய்வு மையம் குறித்தும் விண்வெளி ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி செய்யும்  சந்திக்கும் அவர்கள் ஆராய்ச்சி நம் நாட்டிற்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார். 





மேலும்சந்திர கிரகணம் எப்படி ஏற்படுகிறது என்றும், வரும் செப்டம்பர் 7 இரவு நடைபெறும் சந்திர கிரகணம் பற்றிய செயல் முறை விளக்கமும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. இறுதியாக வகுப்பில் செயற்கை விண்வெளி காட்சி பார்த்து மாணவர்கள் மகிந்தனார்.

துறையூர் கலிங்கமுடையன்பட்டி ஸ்ரீ விவேகானந்தா தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு தேசிய  விண்வெளி தினம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 


நேரு நினைவு கல்லூரியின் இயற்பியல் உதவி பேராசிரியர் முனைவர் P. ரமேஷ் அவர்கள் பங்குபெற்று விண்வெளி மற்றும் சூரிய குடும்பம் உருவான விதம் பற்றி எடுத்துரைத்தார். இதில் விண்வெளி குறித்தும், வளிமண்டலம் குறித்தும், இஸ்ரோவில் உள்ள பல்வேறு ராக்கெட்டுகள் (SLV, SSLV, PSLV, GSLV, GSLV MK-III) செயற்கைக்கோள்கள் எவ்வாறு செயல்படு விதம் போன்றவற்றை எடுத்துரைத்தார். 




மேலும் சந்திர கிரகணம் எப்படி ஏற்படுகிறது என்றும், வரும் செப்டம்பர் 7 இரவு நடைபெறும் சந்திர கிரகணம் பற்றிய செயல் முறை விளக்கமும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. இறுதியாக வகுப்பில் செயற்கை விண்வெளி காட்சி பார்த்து மாணவர்கள் மகிந்தனார்.


ஓமாந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சந்திர கிரகணம் விழிப்புணர்வு



நேரு நினைவு கல்லூரியின் இயற்பியல் உதவி பேராசிரியர் முனைவர் P. ரமேஷ் அவர்கள் பங்குபெற்று விண்வெளி மற்றும் விண்வெளியில் இஸ்ரோ வளர்ந்த விதம் பற்றி எடுத்துக் கூறினார். இதில் விண்வெளி குறித்தும், வளிமண்டலம் குறித்தும், இஸ்ரோவில் உள்ள பல்வேறு ராக்கெட்டுகள் (SLV, SSLV, PSLV, GSLV, GSLV MK-III) செயற்கைக்கோள்கள் எவ்வாறு செயல்படு விதம் போன்றவற்றை எடுத்துரைத்தார். மேலும் விண்வெளி ஆய்வு மையம் குறித்தும் விண்வெளி ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி செய்யும்  சந்திக்கும் அவர்கள் ஆராய்ச்சி நம் நாட்டிற்கு எவ்வாறு பயன்படுகிறது என்பதை குறித்தும் தெளிவாக எடுத்துரைத்தார். மேலும் சந்திர கிரகணம் எப்படி ஏற்படுகிறது என்றும், வரும் செப்டம்பர் 7 இரவு நடைபெறும் சந்திர கிரகணம் பற்றிய செயல் முறை விளக்கமும் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டது. இறுதியாக வகுப்பில் செயற்கை விண்வெளி காட்சி பார்த்து மாணவர்கள் மகிந்தனார்.









இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி.

த. பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வானவியல் கண்காட்சி. இன்று உப்பிலியபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி த.பாதர்பே...