Sunday, March 1, 2026

துறையூர் நகராட்சி பூங்காவில் வான்நோக்கல் நிகழ்ச்சி.

துறையூர் நகராட்சி பூங்காவில் வான்நோக்கல் நிகழ்ச்சி.


இன்று 01.03.2026 அன்று துறையூர் அஸ்ட்ரோ சார்பாக இரவு வான் நிகழ்வில் ஆறு கிரகங்களான புதன், வெள்ளி, வியாழன், சனி , நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய கிரகங்களை மேம்படுத்தப்பட்ட தொலைநோக்கியின் மூலமாக  துறையூர் நகராட்சி பூங்காவில் (ஓங்கார குடில்) அருகில் துறையூர் சுற்றுவட்டாரத்தில் 300 மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கண்டுகளித்து ஆர்வத்துடன் ஆறு கிரகங்களின் நேர்கோட்டு நிலைகளை கண்டறிந்தனர். இதற்கான ஏற்பாட்டினை துறையூர் அஸ்ட்ரோ தலைவர் செ.சசிகுமார்  ஆசிரியர் பயிற்றுநர் தலைமையிலும், மகேஸ்வரன் துறையூர் அஸ்ட்ரோ கிளப் செயலாளர் அவர்கள் முன்னிலையும், பொருளாளர் வாசுதேவன், துணை செயலாளர் கலைச்செல்வன், துணைத் தலைவர் சசிகுமார் அவர்களின் வழிகாட்டுதலின்படி சிறப்பான ஏற்பாட்டினை செய்து கொடுக்கப்பட்டது. மேலும் புத்தனாம்பட்டி கல்லூரி பேராசிரியர் திரு பி ரமேஷ் அவர்கள் வானோக்கு செயல்பாடுகள் பற்றி பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு செயல்பாடுகளுடன் எடுத்துரைத்தார், இதனை துறையூர் பகுதி பொதுமக்கள் மற்றும் மாணவ செல்வங்கள் ஆறு கிரகங்கள் ஒரே நேர் கோட்டில் செல்வதை பொதுமக்கள் அனைவரும் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர். குறிப்பாக மாணவ மாணவிகள் வானோக்கு செயல்களை ஆர்வத்துடன் பார்த்து கண்டுகளித்தனர்.









Saturday, February 28, 2026

தோகைமலை செர்வைட் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம்.

தோகைமலை செர்வைட் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம்.


கரூர் தோகைமலை சர்வீட் கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் விண்வெளி கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசைட்டின் மாநில செயலாளர், நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர்  முனைவர் ரமேஷ் கலந்து கொண்டு விண்வெளி குறித்த சிறப்புரை ஆற்றினார். இதில் சூரிய குடும்பம், கோள்கள் நிலாக்கள், விண்கற்கள், பிரபஞ்சம் தோன்றிய விதம், நட்சத்திரங்கள் உருவான விதம், சந்திர மற்றும் சூரிய கிரகணங்கள், நட்சத்திர கூட்டங்கள், செயற்கை கோள்கள் போன்ற பல்வேறு விண்வெளி குறித்த கருத்துகளை பகிர்ந்து கொண்டார். 






சூரிய வடிகட்டி மூலம் தொலைநோக்கியின் வழியாக சூரியனை பார்த்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்வானது  மாணவிகளிடையே வானவியல் பற்றிய அறிவியலை மேம்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.




த. பாதர்பேட்டையில் அறிவியல் கண்காட்சி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்போம் விழிப்புணர்வு.

த. பாதர்பேட்டையில் அறிவியல் கண்காட்சி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்போம் விழிப்புணர்வு. 

உப்பிலிபுரம் ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி த. பாதர்பேட்டையில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. தலைமையாசிரியர் பொறுப்பில் இருக்கும் அறிவியல் ஆசிரியர் தனலட்சுமி அவர்கள் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தார். முதல் நிகழ்வாக அறிவியல் அறிஞர் சர்.சி. வி.ராமன் ஐயா அவர்களின் திருவுருவப் படத்திற்கு பூக்கள் தூவி மரியாதை செய்யப்பட்டது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தங்களது படைப்பாற்றலை கண்காட்சியின் மூலம் வெளிப்படுத்தினர்.








செயற்கைக்கோள், காற்றழுத்தம்,அடர்த்தி, குறுக்கலைகள், நெட்டலைகள், துரித உணவு குடிநீர் சுத்திகரிப்பு,ரெயின் டிடெக்டர், வளர்பிறை தேய்பிறை, வகுப்பறையில் வானவில், இன்னும் பல செயல்பாடுகளை மாணவர்கள் தங்களது சொந்த படைப்புகளை காட்சிப்படுத்தினார்கள். 


நெகிழியை ஒழிப்போம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  செய்தித்தாளில் 110 பைகள் செய்து மாணவர்கள் அசத்தினர். அவர்களை பை வடிவத்தில் அமரச் வைத்தது மிகவும்  சிறப்பாக இருந்தது.தளுகை பாதர்பேட்டை கிராமத்திற்கு நெகிழியை ஒழிப்போம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்நிகழ்வு அமைந்தது. உடன் ஆ.சுப்பிரமணியன், ஆனந்தம், க. பா.சுப்ரமணியன், தனலட்சுமி ஆகியோர் மாணவர்களுக்கு ஊக்கமளித்தனர்.














துறையூர் நகராட்சி பூங்காவில் வான்நோக்கல் நிகழ்ச்சி.

துறையூர் நகராட்சி பூங்காவில் வான்நோக்கல் நிகழ்ச்சி. இன்று 01.03.2026 அன்று துறையூர் அஸ்ட்ரோ சார்பாக இரவு வான் நிகழ்வில் ஆறு கிரகங்களான புதன்...