Tuesday, July 15, 2025

விண்வெளி ஆய்வு நிறைவு - வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் ஷுபன்ஷு சுக்லா.

விண்வெளி ஆய்வு நிறைவு - வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் ஷுபன்ஷு சுக்லா.

சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் தங்​கி​யிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட இந்​திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர், டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு வந்து சேர்ந்தனர். அமெரிக்​கா​வின் கலிபோர்போனியா அருகே பசிபிக் கடலில் விண்கலம் பத்திரமாக இறங்கியது.

ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்​வெளி வீரர்​களும் நேற்று மாலை 4.35 மணிக்கு சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் இருந்து டிராகன் விண்​கலத்​தில் பூமிக்கு புறப்​பட்​டனர். சுமார் 23 மணி நேர பயணத்​துக்​குப் பிறகு டிராகன் விண்​கலம் இந்திய நேரப்படி மாலை 3 மணி அளவில் பூமியை வந்​தடைந்தது.

அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா மாகாணம் பசிபிக் கடலில் விண்​கலம் இறங்கியது. சுமார் 5.5 கி.மீ. உயரத்​தில் பாராசூட்​கள் விரிக்​கப்​பட்டு விண்கலம் கடலில் பாது​காப்​பாக இறக்​கப்​பட்டது.

டிராகன் விண்​கலத்​தின் ஸ்பேஸ் எக்ஸ் நிறு​வனம் மற்​றும் நாசா​வின் மீட்​புக் குழுவினர் 4 விண்​வெளி வீரர்​களை​யும் விண்​கலத்​தில் இருந்து பத்​திர​மாக மீட்டனர். இதன்​பிறகு சு​மார்​ இரண்​டு ​வாரங்​கள்​, 4 வீரர்​களும்​ பல்​வேறு மருத்​துவ ஆய்​வு​களுக்​கு உட்​படுத்​தப்​படு​வார்​கள்​. இந்​த நடை​முறை​களுக்​குப்​ பிறகே ஷுபன்​ஷு சுக்​லா இந்​தி​யா திரும்​பு​வார்​.

முன்னதாக, அமெரிக்​கா​வின் அக்​ஸி​யம் ஸ்பேஸ், நாசா, இஸ்​ரோ, ஐரோப்​பிய விண்​வெளி முகமை ஆகியவை இணைந்து கடந்த 25-ம் தேதி சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​துக்கு பால்​கன் ராக்கெட் மூலம் டிராகன் விண்​கலத்தை அனுப்​பின. இந்த விண்​கலத்​தில் இந்​திய வீரர் ஷுபன்ஷு சுக்​லா, அமெரிக்​கா​வின் பெக்கி விட்​சன், போலந்​தின் ஸ்லா​வோகி உஸ்​னான்​ஸ்​கி, ஹங்​கேரி​யின் திபோர் கபு ஆகியோர் 28 மணி நேரம் பயணம் செய்து கடந்த 26-ம் தேதி சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்தை சென்​றடைந்​தனர்.

கடந்த 28-ம் தேதி பிரதமர் நரேந்​திர மோடி​யுடன் சுக்லா உரை​யாடி​னார். கடந்த 3, 4, 8 ஆகிய தேதி​களில் திரு​வனந்​த​புரம், பெங்​களூரு, லக்​னோவை சேர்ந்த 500 மாணவ,​ மாணவிகளு​டன் அவர் கலந்​துரை​யாடி​னார். கடந்த 6-ம் தேதி இஸ்ரோ விஞ்​ஞானிகளு​டன் அவர் ஆலோ​சனை நடத்​தி​னார்.

சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் ஷுபன்ஷு சுக்லா 17 நாட்​கள் தங்​கி​யிருந்​தார். அப்​போது அவர் சுமார் 60 வகை​யான ஆய்​வு​களை செய்​தார். குறிப்​பாக நெல், காராமணி, எள், கத்​தரி, தக்​காளி உள்​ளிட்ட 6 வகைகளை சேர்ந்த 4,000 விதைகளை சுக்லா விண்​வெளிக்கு எடுத்​துச் சென்​றார். அந்த விதைகளை அவர் விண்​வெளி​யில் சிறப்பு பெட்​டிகளில் வைத்து முளைக்​கச் செய்​தார். இந்த ஆராய்ச்​சி​யில் இஸ்​ரோ, கேரள வேளாண் பல்​கலைக்​கழகம், ஐரோப்​பிய விண்​வெளி முகமை ஆகிய​வை​யும் முக்​கிய பங்கு வகிக்​கின்​றன.

பாசி பன்​றிக்​குட்டி என்ற நுண் உயி​ரியை ஷுபன்ஷு சுக்லா விண்​வெளிக்கு எடுத்​துச் சென்​றார். இதை வெறும் கண்​ணால் பார்க்க முடி​யாது. நுண்​நோக்கி உதவி​யுடன் மட்​டுமே பார்க்க முடி​யும். இந்த நுண் உயிரி விண்​வெளி​யில் எவ்​வாறு வளர்​கிறது என்​பது குறித்​தும் சுக்லா ஆய்வு செய்​தார்.நீல பச்சை பாசி வகையை சேர்ந்த இரு பாசிகளை அவர் விண்​வெளிக்கு எடுத்​துச் சென்​றார். இந்த பாசி வகைகள் எவ்​வாறு வளர்​கின்றன என்​பது குறித்து அவர் ஆய்வு நடத்​தி​னார்.

மைக்​ரோஅல்கா என்ற பாசி வகை​யை​யும் சுக்லா விண்​வெளிக்கு எடுத்​துச் சென்​றார். இதன் வளர்ச்சி குறித்​தும் அவர் செய்​தார். இந்த வகை பாசி மூலம் உணவு, எரிபொருள், ஆக்ஸிஜனை உற்​பத்தி செய்ய முடி​யும். இது எதிர்​கால விண்​வெளி பயணத்​துக்கு பயனுள்​ள​தாக இருக்​கும். இவை உட்பட ஒட்​டுமொத்​த​மாக 60 வகை​யான ஆராய்ச்​சிகளை ஷுபன்ஷு சுக்லா விண்​வெளி​யில் மேற்​கொண்​டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை நிறைவு செய்து பூமிக்குத் திரும்பியுள்ள குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "விண்வெளிக்கான தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை நிறைவு செய்து பூமிக்குத் திரும்பியுள்ள குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லாவை நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பார்வையிட்ட இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக, அவர் தனது அர்ப்பணிப்பு, துணிச்சல் மற்றும் முன்னோடி மனப்பான்மை மூலம் கோடிக்கணக்கானவர்களின் கனவுகளை ஊக்குவித்துள்ளார். இது நமது சொந்த மனித விண்வெளி பயணமான ககன்யானை நோக்கிய மற்றுமொரு முக்கிய நடவடிக்கை" என தெரிவித்துள்ளார்.

Thanks: Hindutamil news

இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர் P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

                                                       மேலும் படிக்க 

🛑🤔 இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் அரசு வேலை எது?

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.

நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


Thursday, July 10, 2025

அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிலா திருவிழா.

 அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நிலா திருவிழா.


சா.அய்யம்பாளையத்தில் நிலா திருவிழா சிறப்பாக நடைபெற்றது அரசு மேல்நிலைப்பள்ளி சா அய்யம்பாளையம், புத்தனாம்பட்டி நேரு நினைவு கல்லூரி, திருச்சி அஸ்ட்ரோ கிளப் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது. நிலா திருவிழா என்னும் நிகழ்ச்சியில் உற்றுநோக்கப்பட்டன. நிலாவின் தோற்றம் மேடு பள்ளங்கள், செவ்வாய் கிரகம் சர்வதேச விண்வெளி மையம் ஆகியன உற்று நோக்கப்பட்டன. 


பள்ளியின் தலைமை ஆசிரியை  திருமதி ராஜஸ்ரீ நேரு நினைவுக் கல்லூரி புத்தனாம்பட்டி பேராசிரியர் முனைவர் ரமேஷ் நிகழ்ச்சியை சிறப்புரச் செய்தார். விழா ஏற்பாடுகளை ஆசிரியர்கள் திருமாவளவன், மோகன்ராஜ், முத்தமிழ்செல்வன், ஆறுமுகம் ரமேஷ் குமார், துரைப்பாண்டியன், பால்ராஜ் ஹென்றி சாண்டி சாமுவேல், ஜெயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர் விழாவில் 1000 மேலான மாணவர்களும் 200கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனார்.














இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர் P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

                                                       மேலும் படிக்க 

🛑🤔 இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் அரசு வேலை எது?

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.

நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Monday, July 7, 2025

உப்பிலியபுரம் ஒன்றியம் த.பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விண்வெளி குறித்து இஸ்ரோ இளநிலை பொறியாளர் சிறப்புரை.

உப்பிலியபுரம் ஒன்றியம் த.பாதர் பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விண்வெளி குறித்து இஸ்ரோ இளநிலை பொறியாளர் சிறப்புரை.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் த.பாதர் பேட்டை ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் விண்வெளி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. முதல் நிகழ்வாக பள்ளி தலைமை ஆசிரியர் இருதயராஜ் தேவகுமாரன் அவர்கள் வருகை புரிந்து இருந்த சிறப்பு விருந்தினரை வரவேற்று பேசினார்.

பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் தனலட்சுமி அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு  ஏற்பாடு செய்து  தொகுத்து வழங்கினார்.


இந்நிகழ்வில் பங்கு பெற்ற முன்னாள் இஸ்ரோ இளநிலை பொறியாளர் பால சண்முகம் அவர்கள் கலந்துகொண்டு இஸ்ரோவில் அப்துல் கலாம் அவர்களுடன் பணியாற்றிய அனுபவம் பற்றியும் இஸ்ரோவில் ராக்கெட்டுகள் பயன்பாடு ராக்கெட் ஏவுதல் குறித்த பல்வேறு செய்திகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் முனைவர் ரமேஷ் அவர்கள் கலந்து கொண்டு விண்வெளி ஆய்வு மையம் குறித்தும் விண்வெளி ஆய்வு மையத்தில் தற்போது சென்றுள்ள இந்திய விண்வெளி அறிஞர் செய்யும் ஆராய்ச்சிகள் குறித்தும் விண்வெளி நிலையத்தை நேரடியாக காண்பது பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.



மாணவர்கள் மிகவும் ஆர்வமுடனும் மகிழ்ச்சியுடனும் இந்நிகழ்வை கண்டுகளித்தனர்.. நிகழ்வு அரசு பள்ளி மாணவ செல்வங்களுக்கு விண்வெளி குறித்த விழிப்புணர்வாக இருந்தது. உடன் பள்ளி ஆசிரியர்கள் சுப்பிரமணியன் ஆனந்தம் சுப்பிரமணி சாந்தி தனலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தனர்.







திருச்சி மாவட்டம் அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விண்வெளி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 



இதில் பங்கு பெற்ற முன்னாள் இஸ்ரோ இளநிலை பொறியாளர் பால சண்முகம் அவர்கள் கலந்துகொண்டு இஸ்ரோவில் அப்துல் கலாம் அவர்களுடன் பணியாற்றிய அனுபவம் பற்றியும் இஸ்ரோவில் ராக்கெட்டுகள் பயன்பாடு ராக்கெட் ஏவுதல் குறித்த பல்வேறு செய்திகளை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார். நேரு நினைவுக் கல்லூரி இயற்பியல் பேராசிரியர் முனைவர் ரமேஷ் அவர்கள் கலந்து கொண்டு விண்வெளி ஆய்வு மையம் குறித்தும் விண்வெளி ஆய்வு மையத்தில் தற்போது சென்றுள்ள இந்திய விண்வெளி அறிஞர் செய்யும் ஆராய்ச்சிகள் குறித்தும் விண்வெளி நிலையத்தை நேரடியாக காண்பது பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.








இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர் P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

                                                       மேலும் படிக்க 

🛑🤔 இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் அரசு வேலை எது?

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.

நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.






விண்வெளி ஆய்வு நிறைவு - வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் ஷுபன்ஷு சுக்லா.

விண்வெளி ஆய்வு நிறைவு - வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் ஷுபன்ஷு சுக்லா. சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் தங்​கி​யிருந்து ஆய்வுகளை மேற்கொண...