Sunday, October 6, 2024

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?



இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Research Organisation, Human Space Flight Centre (HSFC) துறையில் மருத்துவ அதிகாரி, தொழில்நுட்ப உதவியாளர் , ட்ராஃப்ட்மேன் உள்ளிட்ட 103 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ், எம்இ, எம் டெக், பிஇ, பிஎஸ்சி படித்த பட்டதாரிகள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தற்போது பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. சந்திரன் வெற்றிக்குப் பிறகு மங்கள்யான், ககன்யான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அடுத்தடுத்து செயல்படுத்த இருக்கிறது.

விண்வெளி துறையில் பணியாற்ற ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி உள்ளிட்ட படிப்புகளை படித்திருக்க வேண்டும். அதே நேரத்தில் மற்ற படிப்புகளை படித்த இளைஞர்கள் இஸ்ரோவில் சேர வேண்டும் என்ற கனவோடு வலம் வருகின்றனர்.

இந்த நிலையில் மருத்தும், எம் டெக், பிஎஸ்சி உள்ளிட்ட பல்வேறு படிப்புகளில் பட்டம் பெற்றவர்களும் இஸ்ரோவில் சேர்வதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவ பணியாளர், விஞ்ஞானி, விஞ்ஞான உதவியாளர், டெக்னீசியன் உள்ளிட்ட 103 காலி பணியிடங்களை நிரப்புக தற்போது இஸ்ரோ அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

காலி பணியிட விபரம்: 

3 மருத்துவ அதிகாரிகள், 10 விஞ்ஞானி பொறியாளர், 28 தொழில்நுட்ப உதவியாளர்கள், ஒரு விஞ்ஞான உதவியாளர், 43 டெக்னீசியன்கள், 13 வரைவாளர் (ட்ராஃப்ட்மேன்), ஐந்து உதவியாளர்கள் என மொத்தம் 103 பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

ஊதிய விபரம்: 

உதவியாளர்களுக்கு 21 ஆயிரத்து 700 ரூபாய் முதல், விஞ்ஞானி, பொறியாளர், மருத்துவ அதிகாரி உள்ளிட்ட உயர்நிலை பணியிடங்களுக்கு 2,08,700 வரை ஊதியம் வழங்கப்படும்.

கல்வித் தகுதி விபரம்: 

மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எம்பிபிஎஸ் பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன், இரண்டு வருட முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விஞ்ஞானி பொறியாளர், தொழிற்ப உதவியாளர் பணியிடங்களுக்கு எம்இ, எம் டெக், பி பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். டெக்னீசியன் பணியிடங்களுக்கு பிஎஸ்சி படித்தவர்களும். உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 60% மதிப்பெண்களுடன் பிஎஸ்சி, பிஏ உள்ளிட்ட இளநிலை படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ட்ராப்ட்மேன் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ஐடிஐ படிப்பில் சான்றிதழ் பெற்று தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு விபரங்கள்: 

மருத்துவ அதிகாரி பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். எஸ்சி பிரிவு விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். விஞ்ஞான பொறியாளர் பணிக்கு 18 முதல் 30 ஆண்டுகளும், தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு 18 முதல் 35 வயது வரையும், அறிவியல் உதவியாளர் பணிக்கு 18 முதல் 35 வயது வரையும், டெக்னீசியன் (பி) பிரிவுக்கு 18 முதல் 35 ஆண்டுகளும், ட்ராஃப்ட்மேன் பணிக்கு 18 முதல் 35 வயது வரையும், உதவியாளருக்கு 18 வயது முதல் 28 வயது வரை வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வயது தளர்வு: 

எஸ் சி மற்றும் எஸ் டி வகுப்பைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக கூடுதலாக 5 வயது வரை விண்ணப்பிக்கலாம், ஓபி சி விண்ணப்பதாரர்கள் 3 ஆண்டுகள் வரையும் அந்தந்த பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்ட வயது வரம்பில் இருந்து விலக்கு பெறலாம்..

தேர்வு எப்படி நடக்கும் முறை: 

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பிறகு அவர்களுக்கு அழைப்பானை அனுப்பப்பட்டு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது: 

விண்ணப்பதாரர்கள் https://www.hsfc.gov.in/ என்ற இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் அக்டோபர் ஒன்பதாம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணமாக 100 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.அதே நேரத்தில் எஸ்சி, எஸ்டி பிரிவினர், முன்னாள் ராணுவத்தினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/FaFcmdwPG6yK8uSDjgUvXQ
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

Tuesday, October 1, 2024

நெருப்பு வளைய சூரிய கிரகணம் Ring of Fire Solar Eclipse.

நெருப்பு வளைய சூரிய கிரகணம் Ring of Fire Solar Eclipse புதன்கிழமை அக்டோபர் 2-ம் தேதி  வானத்தில் தோன்றவுள்ளது.

பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதன் மூலம் பூமியின் ஒரு சிறிய பகுதியிலிருந்து சூரியனின் பார்வையை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைக்கிறது. சந்திரனின் சுற்றுப்பாதை பூமியின் சுற்றுப்பாதையின் மிக அருகில் இருக்கும் போது, ​​அதன் அமாவாசை கட்டத்தில் கிரகண காலத்தில், தோராயமாக ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் இதுபோன்ற சீரமைப்பு நிகழ்கிறது. 

முழு கிரகணத்தில், சூரியனின் வட்டு சந்திரனால் முழுமையாக மறைக்கப்படும். பகுதி மற்றும் வளைய கிரகணங்களில், சூரியனின் ஒரு பகுதி மட்டுமே மறைக்கப்படும். பூமியின் இரவுப் பக்கத்தில் எங்கிருந்தும் பார்க்கக்கூடிய சந்திர கிரகணத்தைப் போலல்லாமல், சூரிய கிரகணத்தை உலகின் ஒப்பீட்டளவில் சிறிய பகுதியிலிருந்து மட்டுமே பார்க்க முடியும். மொத்த சூரிய கிரகணங்கள் சராசரியாக 18 மாதங்களுக்கு ஒருமுறை பூமியில் எங்கோ நிகழ்ந்தாலும், அவை 360 முதல் 410 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே எந்த இடத்தில் மீண்டும் நிகழும். 


சந்திரன் ஒரு முழுமையான வட்டப்பாதையில் மற்றும் பூமியின் அதே சுற்றுப்பாதையில் இருந்தால், ஒவ்வொரு அமாவாசையிலும் மாதத்திற்கு ஒரு முறை முழு சூரிய கிரகணம் இருக்கும். மாறாக, சந்திரனின் சுற்றுப்பாதை பூமியின் சுற்றுப்பாதையில் சுமார் 5 டிகிரி சாய்ந்திருப்பதால் , அதன் நிழல் பொதுவாக பூமியை இழக்கிறது. எனவே சூரிய (மற்றும் சந்திர) கிரகணங்கள் கிரகண காலங்களில் மட்டுமே நிகழ்கின்றன , இதன் விளைவாக ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இரண்டு மற்றும் ஐந்து வரை சூரிய கிரகணங்கள் ஏற்படுகின்றன, அவற்றில் இரண்டிற்கு மேல் மொத்தமாக இருக்க முடியாது.


பூமியிலிருந்து சூரியனின் தூரம் 150 மில்லியன் கிலோமீட்டர்கள்

ஒரு வானியல் அலகு (AU) என வரையறுக்கப்படுகிறது.

பூமியிலிருந்து சந்திரனின் தூரம்  3, 85,000 கிலோமீட்டர்கள்

சூரியனின் விட்டம் = 150 million கிலோமீட்டர்கள்

சந்திரனின் விட்டம் =3,475 கிலோமீட்டர்கள்


பூமியிலிருந்து சூரியனின் தூரம் சந்திரனின் தூரத்தை விட சுமார் 400 மடங்கு அதிகம், மேலும் சூரியனின் விட்டம் சந்திரனின் விட்டத்தை விட 400 மடங்கு அதிகம். இந்த விகிதங்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருப்பதால், பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியனும் சந்திரனும் தோராயமாக ஒரே அளவாகத் தோன்றும். 


இந்த ஆண்டிற்கான முதல் சூரிய கிரகணம் கடந்த ஏப்ரல் மாதம் ஏற்பட்ட நிலையில், இரண்டாவது மற்றும் கடைசி சூரிய கிரகணம் வரும் அக்டோபர் 2ம் தேதி புதன் கிழமை அன்று நிகழ உள்ளது. நெருப்பு வளையமாக தோன்றவுள்ள இந்த கிரகணம் எங்கு, எப்போது ஏற்படும். அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பவை குறித்து தெரிந்துகொள்ளலாம்.

இந்த சூரிய கிரகணம்  ரிங் ஆஃப் ஃபயர்என அழைக்கப்படுகிறது. அதாவது, சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் நிலா வரும்போது, பூமியில் இருந்து பார்க்கும்போது, நிலா முன்னாள் சென்று சூரியனை மறைக்கிறது. ஆனால், சூரியனின் மேற்பரப்பை நிலாவால் முழுமையாக மறைக்க முடிவதில்லை. இதன் விளைவாக வானத்தில் நெருப்பு வளையம் தோன்றும்.

நேரம்: இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணம் இந்திய நேரப்படி அக்டோபர் 2ம் தேதி இரவு 9.12 மணிக்கு தொடங்கி அக்டோபர் 3ம் தேதி நள்ளிரவு 3.17 மணியுடன் முடிவடைகிறது. நெருப்பு வளையம் போன்று தோன்றக்கூடிய கிரகணத்தின் உச்ச நிலை, நள்ளிரவு 12.15 மணிக்கு ஏற்படும்.

எங்கு பார்க்கலாம்?: வட அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக், அண்டார்டிக்கா, தென் அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை காண இயலும். வட அமெரிக்கா, பசிபிக் பெருங்கடல்,அட்லாண்டிக், அண்டார்டிக்கா பகுதிகளில் சூரிய கிரகணத்தின் ஒரு பகுதியை காண இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் காண இயலுமா?:  இந்திய நேரப்படி இரவு நேரத்தில் கிரகணம் ஏற்படுவதால், இந்தியா, ஆசியாவில் இந்த கிரகணத்தைப் பார்க்க இயலாது.


இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/FaFcmdwPG6yK8uSDjgUvXQ
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

Monday, September 30, 2024

பூமிக்கு இரண்டாவது நிலவா? உண்மை என்ன? - யாரெல்லாம் இந்த நிலாவ பாக்க முடியும்?

பூமிக்கு இரண்டாவது நிலவா? உண்மை என்ன? - யாரெல்லாம் இந்த நிலாவ பாக்க முடியும்?


ஒரு வானியல் ஆச்சரியத்தைக் காணத் தயாராகுங்கள். பூமியில் இரண்டு நிலாக்கள் தோன்றும் ஒரு வானியல் அற்புதம் நிகழவுள்ளதாக பலரும் கூறுகிறார்கள். பூமியின் ஈர்ப்பு விசையால் ஒரு சிறுகோள் (Asteroid) ஈர்க்கப்பட்டு, பூமியைச் சுற்றும் ஒரு தற்காலிகமாக ‘சிறிய-நிலா ஆகப் பிரகாசிக்கப் போகிறது. 

பூமி தனது ஈர்ப்பு விசையால் 2024 PT5 என்ற சிறிய ஆஸ்ட்ராய்டு - விண்கல்லை தனது சுற்றுப்பாதை அருகே கொண்டு வருகிறது. சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளாக  இருக்கின்ற பூமியின் முதன்மை துணைக்கோளான நிலவை போலல்லாமல், இந்த "புதிய மினி-நிலா" இரண்டு மாதகாலம் நமக்கு ஒரு நிலவுபோலத் தெரியும். பின்னர் நமது பூமிக்குப் பின்னால் உள்ள சிறுகோள் பெல்ட்டில் இருக்கும் தனது தாய் வீட்டிற்குத் திரும்பிவிடும். 


துரதிர்ஷ்டவசமாக, இந்த இரண்டாம் நிலா மிகவும் சிறியதாகவும், மங்கலாகவும் இருக்கும் என்பதால், வெறும் கண்களால் அதனைத் தெளிவாகப் பார்க்க முடியாது. ஒரு நல்ல தொலைநோக்கி இருந்தால் இந்தச் சிறிய நிலாவைத் தெளிவாக கண்டு ரசிக்க முடியும்.

 பூமியை சுற்ற வரும் இரண்டாம் நிலா.


இந்தச் சிறுகோள் முதன் முதலில் ஆகஸ்ட் 7-ஆம் தேதி அன்று நாசாவின் ‘ஆஸ்டிராய்டு டெரஸ்ட்ரியல்-இம்பாக்ட் லாஸ்ட் அலர்ட் சிஸ்டம் (ATLAS) மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அமெரிக்க வானியல் கழகத்தின் ஆய்வுக் குறிப்புகளில், விஞ்ஞானிகள் தற்காலிகச் சிறிய நிலவின் பாதையைக் கணக்கிட்டுள்ளதைத் தெரிவித்துள்ளனர்.

 

விஞ்ஞானிகள் இந்தச் சிறுகோளை ‘2024 PT5’ எனக் குறிப்பிடுகின்றனர். இது அர்ஜுனா சிறுகோள் பெல்ட்டில் இருந்து வந்தது. அர்ஜுனா பெல்ட் பூமியின் சுற்றுப்பாதையை ஒத்த பாறைகளைக் கொண்டுள்ளது. எப்போதாவது, இந்தச் சிறுகோள்களில் சில, நமது கிரகத்திற்கு அருகே, 28 லட்சம் மைல்கள் (45 லட்சம் கி.மீ.) தொலைவில் நெருங்கி வருகின்றன. 

ஆய்வில் ஈடுபட்டுள்ள ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, 2024 PT5 போன்ற ஒரு சிறுகோள் சுமார் மணிக்கு 3,540 கி.மீ என்ற மெதுவான வேகத்தில் (ஒப்பீட்டளவில்) நகர்ந்தால், பூமியின் ஈர்ப்புப் புலம் அதன் மீது வலுவான தாக்கத்தைச் செலுத்தும். அதன் விளைவாகத் தற்காலிகமாக பூமியால் ஈர்க்கப்பட்டு, பூமியின் சுற்றுப்பாதையில் இருக்கும்.

 

இந்த நிகழ்வு, செப்டம்பர் 29-ஆம் தேதி தொடங்கி, இந்தச் சிறுகோள் பூமியைச் சுற்றி இரண்டு மாதங்கள் வரை பயணிக்கும். இந்தச் சிறுகோள் செப்டம்பர் 29-ஆம் தேதி சுற்றுப்பாதையில் நுழையும் என்றும், பின்னர் நவம்பர் 25-ஆம் தேதி வெளியேறும் என்று கணிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

"2024 PT5 நமது கிரகத்தின் முழு சுழற்சியை முடிக்கப் போவதில்லை, அதன் சுற்றுப்பாதையை மாற்றிக் கொண்டு, பூமியால் ஈர்க்கப்பட்டு, சில காலத்துக்கு பின்னர் அது அதன் சொந்த சுற்றுப் பாதையில் தொடரும்,” என்று அவர் கூறினார்.

எப்படி பார்ப்பது? 


2024 PT5 சிறுகோள் தோராயமாக 32 அடி (10மீ) நீளம் கொண்டது. இது பூமியின் நிரந்தரமான நிலவுடன் ஒப்பிடுகையில் மிகவும் சிறியது. இந்தச் சிறுகோள் அளவில் மிகச்சிறியது என்பதாலும், மங்கலான பாறையால் ஆனது என்பதாலும் வீட்டில் இருக்கும் சாதாரண தொலைநோக்கியைப் பயன்படுத்தி பூமியில் இருந்து பார்க்க முடியாது. 

"நல்ல தொழில்முறைத் 30” தொலைநோக்கிகளால் இதனைப் பார்க்க முடியும். எனவே, நீங்கள் இந்தச் சிறிய புள்ளி போன்று இருக்கும் அற்புதமான சிறுகோளைப் பார்க்க முடியும். இணையத்தில் வெளியாகும் படங்கள் வாயிலாகவும் பார்க்க முடியும்.

 


இதுபோன்ற சிறிய நிலவுகள் இதற்கு முன்னதாகவும் தோன்றியுள்ளன. மேலும், பல சிறுகோள்கள் கவனிக்கப்படாமல் போயிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

 

சில சிறுகோள்கள் மீண்டும் மீண்டும் பூமியின் சுற்றுப்பாதைக்கு வருகின்றன. ‘2022 NX1’ என்ற சிறுகோள் 1981-இல் சிறிய நிலவாக மாறியது. 2022-இல் மீண்டும் அது தோன்றியது.

எனவே, இம்முறை நீங்கள் சிறிய நிலவைப் பார்க்கமுடியாவிட்டால் கவலைப்பட வேண்டாம். விஞ்ஞானிகள் ‘2024 PT5’ எனும் இந்தச் சிறுகோள் 2055-இல் மீண்டும் பூமியின் சுற்றுப்பாதைக்குத் திரும்பும் என்று கணித்துள்ளனர். 


"இந்தச் சிறுகோளின் கண்டுப்பிடிப்பு, நமது சூரியக் குடும்பத்தில் நாம் கண்டுபிடிக்காதது இன்னும் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பிரதிபலிக்கிறது,”

"நாம் கண்டுபிடிக்காத பல்லாயிரக்கணக்கான வானியல் அற்புதங்கள் உள்ளன, எனவே நம் இரவு வானத்தைத் தொடர்ந்து கண்காணித்து இந்த வான்பொருட்கள் அனைத்தையும் கண்டுபிடிப்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக் காட்டுகிறது.




இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/FaFcmdwPG6yK8uSDjgUvXQ
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...