Sunday, November 29, 2020

டிசம்பர் 2ம் தேதி ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம்.

டிசம்பர் 2ம் தேதி  ரெட் அலர்ட்: வானிலை ஆய்வு மையம்.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 36 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற பின் மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும். மேலும், புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் டிசம்பர் 2-ம் தேதி தமிழகத்தில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இதனால் டிசம்பர் 2-ம் தேதி தென் தமிழகத்தில் அதி கனமழையும், வட தமிழகத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.




No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...