Friday, April 30, 2021

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரம் வழங்கிய அரசு பள்ளி ஆசிரியை (நேரு நினைவு கல்லூரி முன்னாள் மாணவி).

கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரம் வழங்கிய அரசு பள்ளி ஆசிரியை (நேரு நினைவு கல்லூரி முன்னாள் மாணவி).


தமிழகத்தில் கொரோனா வைரசின் 2-வது அலையால், கொரோனாவினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரம்பலூர் அருகே உள்ள எளம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், பட்டதாரி ஆசிரியர்களுக்கு உதவி தலைமை ஆசிரியையாகவும், 9, 10-ம் வகுப்புகளுக்கு கணித ஆசிரியையாகவும் பணிபுரியும் பைரவி (வயது 41) நேற்று தனது மகன், மகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் ஆசிரியை பைரவி, கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியாவை சந்தித்து, கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.50 ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர், பைரவியை பாராட்டினார். ஆசிரியை பைரவி ஏற்கனவே கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது, எளம்பலூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த மாணவ-மாணவிகள் 16 பேருக்கு ஆன்-லைனில் பாடங்கள் கற்பிக்க செல்போன்கள் வாங்கி கொடுத்தார், என்பது குறிப்பிடத்தக்கது.

Source By: Dailythanthi.

இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc

இந்த Telegram  குழுவில் இணையவும்.

நன்றி.

No comments:

Post a Comment

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025- Partial solar eclipse March 29, 2025.

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025 Partial solar eclipse March 29, 2025. சூரிய கிரகணம் என்பது சூரியன் மற்றும் பூமி இடையில் சந்திரன் ஒரே ந...