Monday, August 30, 2021

செப்.15 வரை ஊரடங்கு நீட்டிப்பு, எவை இயங்கும்? எவை இயங்காது ?

செப்.15 வரை ஊரடங்கு நீட்டிப்பு, எவை இயங்கும்? எவை இயங்காது ?

தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகள் நடைமுறையில் உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்து வருகிறது. இதன் காரணமாக, செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் 9 - 12 வகுப்புகளுக்கான பள்ளிகள் மற்றும் அனைத்து தரப்பு மாணவர்களுக்குமான கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. இந்தச் சூழலில், மருத்துவத் துறை, வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனையின் முடிவில் தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

தமிழக அரசின் அந்த ஆலோசனை முடிவில்,

‘தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு செப்டம்பர் 15 ம் தேதி வரை நீடிக்கிறது.

வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடர்கிறது.

ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைகளில் மூடப்படும். கல்லூரி மாணவர்களுக்கான அரசு விடுதிகள், தனியார் விடுதிகள் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது’ போன்ற அறிவிப்புகள் வெளிவந்துள்ளது..

சமய விழாக்களை முன்னிட்டு (விநாயகர் சதுர்த்தி, மரிய அன்னை பிறந்தநாள்) மத சார்பான ஊர்வலங்கள், திருவிழாக்களுக்கான தடை தொடர்கிறது’ போன்ற அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.

Hon'ble CM-Press Release-Lockdown Meeting-Date 30.8.2021 Link








இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...