Friday, December 31, 2021

தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஓமைக்ரான்.

தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஓமைக்ரான்.

சென்னையில் நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 34 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு என தகவல்.

தமிழகத்தில் மேலும் 74 பேருக்கு ஓமைக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே 44 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், மேலும் 74 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதாக தகவல் கூறப்படுகிறது.

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நீட் பயிற்சி மையத்தில் பயின்ற 34 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒரே பயிற்சி பள்ளியில் 34 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், குழு பரவல் ஏற்பட்டுள்ளது என அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.




No comments:

Post a Comment

துறையூர் நகராட்சி பூங்காவில் வான்நோக்கல் நிகழ்ச்சி.

துறையூர் நகராட்சி பூங்காவில் வான்நோக்கல் நிகழ்ச்சி. இன்று 01.03.2026 அன்று துறையூர் அஸ்ட்ரோ சார்பாக இரவு வான் நிகழ்வில் ஆறு கிரகங்களான புதன்...