Saturday, June 17, 2023

✍🏻இயற்கை வாழ்வியல் முறை🕊️🐚🐚கிணற்றுப்பாசான் நன்மைகள்.

✍🏻இயற்கை வாழ்வியல் முறை🕊️🐚🐚கிணற்றுப்பாசான் நன்மைகள்.


🐚🐚🐚🐚🐚🐚

கிணற்றுப்பாசான் இதை தாத்தா செடி என்று அழைப்பார்கள் இந்த தாத்தா செடி இன்னும் பல பெயர் இதற்க்கு உண்டு .

🐚🐚🐚🐚🐚🐚

1. கைமூக்குத்திப்பூ,

2. காயப்பச்சிலை,

3. கிணற்றடிப் பூண்டு,

4 தலைவெட்டியான்,

5. கிணற்றுப்பாசான்.


🐚🐚🐚🐚🐚🐚

என பல பெயர்களில் அழைக்கப்படும் மூலிகை இது. காயங்களை ஆற்றுவதில் வல்லமை பெற்றது.! மழைக் காலங்களில் அனைத்து சமவெளிப் பகுதிகளிலும் கிடைக்கும் ஒரு அற்புத மூலிகை இது. நீர் ஓட்டம் உள்ள செம்மண் நிலத்தில் தனாகவே வளரும் செடி. இதன் இலை பகுதி சற்று சொறு சொறுப்பாக இருக்கும். இலையை பரித்து கையால் கசக்கினால் அதிக படியானவ பச்சை நிர நீர் வரும் இதை அடிபட்ட புண் மீது அப்படியே தடவ காயத்தில் இருந்து வெளிவரும் இரத்தம் குறைந்து விரைவில் புண் ஆறிவிடும். கொப்புளங்கள், தீ கயங்கள் மீதும் இதன் சாற்றை தடவலாம் இலையை பரிக்கும் முன் கையை சுத்தமாக கழுவவும் விவசாயம் செய்பவர்கள் ம்ற்றும் கல் உடைப்பவர்கள் இன்றும் இதை அருமருந்தாக பயன் படுத்துகின்றனர் கிணற்று பாசான் மருத்துவ குணங்கள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது.

🐚🐚🐚🐚🐚🐚

குடற்புண் இருப்பவர்கள் காலையில் வெறும் வயிற்றில் இந்த இலையெடுத்து இரண்டு முறை மென்று துப்பிவிட வேண்டும் பல்லின் விஷம் வெளி வந்து விடும். முன்றாம் முறை மென்று விழுங்க வேண்டும் குடற்புண் ஆற்றும் குடல் புற்று நோயை தடு்க்கும்.

🐚🐚🐚🐚🐚🐚

இந்த பூவை 5,6 பறித்து வாயில் போட்டு மென்று சாப்பிட்டால் பல் வலி் சொத்தை பல் பூச்சிகள் வெளியேறி விடும் பார்க்கும் போது சாப்பிடுங்கள்

🐚🐚🐚🐚🐚🐚

சர்க்கரை நோயாலியின் புண்களும் எளிதில் ஆறும் பெறிய அல்லது நீண்ட நாட்கள் ஆறாமல் இருக்கும் புண்கள் மீது இந்த செடியின் இலையை தேவையான அளவு பிடிங்கி சிறிது தண்ணீர் விட்டு அறைத்து உடம்பில் உள்ள. வெளி காயங்களுக்கு போட்டு வந்தால் எப்படி பட்ட புண்களாக இருந்தாலும் எளிதில் ஆறி விடும்.


🐚🐚🐚🐚🐚🐚

கிணற்றுப்பாசான்  இலை சாறு சளி பிரச்சனைக்கும், அதனால் ஏற்படும் தலைவலி, தலையில் நீர் கோர்வையினால் ஏற்படும் தலைவலி, மற்றும் தலைபாரம் நீக்கவும் உபயோகப்படுத்தப் படுகிறது. இதன் சாற்றை மிளகு ரசமாக வைத்து சளி இருக்கும் நேரங்களில் சாப்பிட்டு வர சளி தொந்தரவு நீங்கும்.

🐚🐚🐚🐚🐚🐚

காயம் ஏற்பட்டு இரத்தம் வரும் இடங்களில் இதன் சாற்றை நேரடியாத பிழிந்து விட, இரத்தம் உறைந்து காயம் விரைவில் குணமடைய இது பயன்படுத்தப் படுகிறது. வெட்டு காயங்களில் சீழ் பிடித்து புரையோடுவதை தடுக்க இதன் இலை சாறும், பசையும் பயன்படுத்தப்படுகிறது. வெட்டுக்காயங்கள் குணமாக  பயன்படுவதால் தான் வெட்டுக்காயப் பூண்டு அல்லது வெட்டுக்காயப் பச்சிலை என்ற காரணப் பெயர் இதற்கு உண்டு

🐚🐚🐚🐚🐚🐚

கிணற்றுப்பாசான் இலை சாறு தோல் தொற்று நோய்கள் உள்ள இடங்களில் தடவி வர, தொற்றை கட்டுப்படுத்தி அவை குணமாக  பயன்படும். தோலில் ஏற்படும் சூட்டு கொப்பளங்கள், மற்றும் தீயினால் ஏற்படும் கொப்பளங்களுக்கும் இதன் சாற்றை பயன் படுத்தலாம்

🐚🐚🐚🐚🐚🐚

பின்-குறிப்பு : எந்தவொரு மூலிகையையும் நீங்களாகவே பயன்படுத்துவது நல்லதல்ல. ஒவ்வொருக்கும் நோயின் தன்மையும், காரணமும் வேறுபடும். நீங்கள் உங்களின் மருத்துவரிடம் தகுந்த ஆலோசனை பெற்று அதன்பின் உபயோகப்படுத்துவது சிறந்த பலனைக் கொடுக்கும்.


🐚🐚🐚🐚🐚🐚

🌷🌷🌷🌷🌷

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚

உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்.

🦚🦚🦚🦚🦚

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

No comments:

Post a Comment

CSIR-NET PHYSICS BOOKS

  CSIR-NET PHYSICS BOOKS NOW IT IS EASY TO PREPARE FOR CSIR-NET, GATE, JEST, TIFR ,IIT-JAM, SET, Assistant Professor Exam The following book...