Thursday, June 20, 2024

காதலுக்கு உதவுமா குவாண்டம் காந்த கணினிகள்?

 காதலுக்கு உதவுமா குவாண்டம் காந்த கணினிகள்?


பள்ளிக்கூட காலத்தில் இரண்டு சாதாரண காந்தங்களை கையில் வைத்திருப்பது புதையல் ஆகும். ஒரு காந்தம் வைத்திருப்பவனே வகுப்பறையில் மகாராஜா. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்ல் இருந்து பலரை பெரிய விஞ்ஞானிகள் ஆக்கிய பெருமை இந்த காந்தத்திற்கு உண்டு. நம்முடைய குழந்தைப் பருவத்து ஆவலின் பிரம்மாண்ட சகாவான இந்த காந்தம் வருங்கால கணினி உலகை முற்றிலும் தன்னுடைய ஆளுகைக்குள் கொண்டு வரப்போகிறது என்றால் நம்புவீர்களா?

குவாண்டம் காந்த கணினிகள் (Quantum magnetic computers) - https://bookday.in/

மாறக்கூடிய காந்தப்புலம் என்கிற ஒன்றை வைத்துக்கொண்டு தகவல் சேமிப்பை துரிதப்படுத்த இப்பொழுது அல்ட்ரா கோல்ட் (Ultra Cold) வெப்பநிலையில் சாத்தியம் ஆகும் என்பதை இயற்பியல் பேராசிரியர் அலெக்சாந்தர் பல்லாஸ்கி நிரூபித்திருக்கிறார். இவர் நோர்டிக் இன்ஸ்ட்டிட்யூட் ஆஃப் தி ரட்டிகள் ஃபிசிக்ஸ் என்கின்ற மிக முக்கிய நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானி ஆவார். இதனால் நமக்கு என்ன பயன்? நான் உண்மையிலேயே இதை வாசித்துவிட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

அறை வெப்பநிலையில் காந்தமற்ற ஒரு பொருளை காந்தத்தன்மை ஏற வைக்கின்ற புதிய அணுகுமுறை பல நூற்றாண்டுகளாக முயற்சி செய்யப்படும் ஒரு விஷயம். சமீபத்தில் இந்த விஷயம் சூடுபிடித்திருக்கிறது. இது குவாண்டம் பண்புகளை தூண்டுவதன் மூலம் செய்யப்படுவதால் அதிவேக கணினிக்கு வழி வகுக்கப்போகிறது என்பது தான் தற்போதைய செய்தி.

குவாண்டம் காந்த கணினிகள் (Quantum magnetic computers) - https://bookday.in/

2017 ஆம் ஆண்டில் பாலாஸ்கி மற்றும் அவருடைய சகாக்கள் ஒரு குவாண்டம் நிலையை உருவாக்குவதற்கான தத்துவார்த்த அணுகுமுறையை வகுத்தனர். இது டைனமிக் மல்டிஸ்ட்ராசிட்டி என்று அழைக்கப்பட்டது. இதனை வாசித்த பொழுது அது தொடர்பான பலசந்தேகங்கள் எனக்கு முளைத்தன. 2018 இல் இது குறித்த ஒரு புத்தகம் வெளிவந்தது. அதில் மின்துருவ முனைப்பு, காந்தம் அல்லாத பொருளில் காந்தத்தை தூண்ட முடியும் என்று எழுதப்பட்டிருந்தது.

டைட்டானியம் அணுக்களை ஒரு காந்தப்புலத்தை உருவாக்கும் வகையில் ஒரு பொருளில் கிளறி விடுவதை இந்த செயல்முறை உள்ளடக்கியது. சென்ற ஆண்டு நேச்சர் இதழில் ஏப்ரல் 10 அன்று வெளியிடப்பட்ட புதிய ஆய்வில் ஆர்தர்பலஸ்கின் குழு ஸ்டோன்யம் டைட்டன்த்தால் சூழப்பட்ட டைட்டானியம் அணுக்களின் கோட்பாட்டை நிரூபித்திருக்கிறது. இது அற்புதமான புதிய செய்தியாகும். இதன் மூலம் காந்தப்புல கணினிகள் சாத்தியமாகும்.

டைட்டானியம் மற்றும் இதில் இருந்து உருவாக்கப்பட்ட ஆக்சைடு இந்த குழு லேசர் தன்மைகளை அணுகியது. அது வட்டமாக தூவப்பட்ட போட்டான்ங்கள் அல்லது ஒளித்துகள்களை அலைநீளங்களில் குறுகிய குழுவில் உருவாக்கியது. ஆராய்ச்சியாளர்கள் 1300 நேனோமீட்டர் அலை நீல அகச்சிவப்பு லேசர் ஐ ஒரு நொடியில் ட்ரில்லியன் என்கின்ற 800 மைக்ரோளின் வெடிப்புகளில் உள்ள பொருட்களின் மீது செலுத்தினர்.

Laser cutting machine - https://bookday.in/

ஒப்பீட்டளவில் முடி அகற்றலில் பயன்படுத்தப்படுகின்ற லேசர்கள் 40 சூழல்கள் அல்லது 4,00,000 மைக்ரோஜூங்கள் வரை வெப்பநிலையை தாங்க முடியும். சுமார் 0.5 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட வட்டமான கற்றை உருவாக்கப்பட்டு இதன் மூலம் காந்தப்புலங்கள் தூண்டப்பட்டன. இந்ததுடிப்புகள் பொருளில் உள்ள அணுக்களின் இயக்கத்தை தூண்டின. இவை எதிர் கடிகார சுழற்சி மூலம் நமக்கு தேவையான குளிர்சாதன காந்தத்தை போல வலுவான காந்தப்புலங்களை உருவாக்குகின்றன. இவற்றை இயக்கவும் தேவைப்பட்டால் அணைத்து வைக்கவும் முடியும். அணுக்கள் அசைக்கப்படும்போது தான் காந்தப்புலம் உருவானது.

எனவே காந்த கணினிகள் சாத்தியமாகின்றன. ஒரு காலத்தில் அறிவியல் புனைகதைகளில் நாவல்களில் இடம் பெற்ற ஒரு கண்டுபிடிப்பு தற்போது நேரடியான பயன்பாட்டுக்கு வர இருக்கிறது. இருபத்தோராம் நூற்றாண்டில் அதிவேக கணினி என்பது ஏறக்குறைய மனித மனங்களின் வேகத்தில் செயல்படக்கூடியதாக மாறப்போகிறது. டெலிபத்தி என்பது? வெறும் கதை வடிவமல்ல. நாம் என்ன ஓட்டங்களை? ஒரு கருவி புரிந்துகொண்டு அந்த எண்ண ஓட்டங்களின் வேகத்திலேயே நமக்கு தட்டச்சு செய்தும் நமக்கான தகவல்களை பரிமாறியும் அதிவேகமான பாய்ச்சலை அறிவியலுக்கு வழங்க இருக்கிறது.

கார்ல் சாகனின் காண்டேக்ட் (Contact  Novel by Carl Sagan) - https://bookday.in/

கார்ல் சாகனின் காண்டேக்ட் (Contact  Novel by Carl Sagan) நாவலில் மிக அற்புதமான ஒரு விஷயம் வரும் வெப்பமுடுக்கவியலின் இரண்டாவது வீதி பின்னோக்கி ஓடும். இதே மாதிரி விஷயத்தைப் பற்றி கிரிகரி, பெட்ஃபோர்ட் எனும் வானியல் இயற்பியலாளர் பிளே இன்சைட் என்று ஒரு கதை எழுதினார். அதில் ஒருவருடைய மனதில் தோன்றுகின்ற அதுவரையில் மனிதகுலம் சிந்திக்காத புதிய விஷயங்கள் ஏதாவது இருந்தால் பிளேன்சைட் என்கின்ற அந்த ப்ராஜெக்ட் உடனடியாக கணினியாக்கம் செய்து உலகிற்கு அறிவித்துவிடும். பல சோம்பி நாவல்களில் வருவதை போல அரைமனிதன், அரைமிருகம் என்கின்ற இடத்தில் இருக்கும் பிசாசுகள் காந்த கணினிகள் உருவாக்கி.. என்னவெல்லாம் சந்திக்கின்றன என்பதை டேவிட்பிரீன் எழுதிய த ப்ராக்டிஸ் எஃபெக்ட் நாவல் படித்திருக்கிறேன்.

கணினிகள்  பெரும்பாலும் இலக்கியம், திரைப்படங்கள் மற்றும் பிற ஊடகங்களின் கற்பனை பொருளாக 1940 முதல் வலம் வந்திருக்கின்றன. அப்படி பார்க்கின்றபொழுது ஜோனாதன் ஷிஃப்ட் எழுதிய களிவர் டிராவல்ஸ்… என்ஜின் என்கிற ஒரு கணினி 1726 அறிமுகமாகிவிட்டது. நீங்கள். இயந்திர நகரம் படித்திருக்கிறீர்களா? ஜான் டபிள்யூ கேம்பல் எழுதியது. அதில் டூலைட் என்கின்ற ஒரு கணினி வரும். 1954 எழுதப்பட்ட இந்த கணினி முழுக்க முழுக்க காந்தங்களை வைத்து உருவாக்கப்பட்டதாகும் என்று அந்த நாவல் உங்களுக்கு சொல்லிக்கொண்டே இருக்கும்.
ஐசக் அசிமாவ் (Isaac Asimov) - https://bookday.in/

அதேபோல ஐசக் அசிமாவ் (Isaac Asimov) பிரைம் ரேடியன்ட் என்று ஒரு கதை எழுதினார். அதில் உலகத்தின் ஒரு கணினி உருவாக்கப்பட்டு அனைத்து கேள்விகளுக்கும் அது பதில் சொல்லிக்கொண்டிருக்கும். ஆர்தர்சி கிளாக் தனது ஒன்பது பில்லியன் பெயர்கள் கதையில் திபத்தி. லாமாசரியில் உள்ள துறவிகள் கடவுளின் அனைத்து சாத்தியமான பெயர்களையும் குறியாக்கம் செய்யும் ஒரு காந்தப் புல கணினியை வடிவமைத்து. மார்க் V என்று பெயரிட்டு இருப்பார். இப்படி காந்தகணினி பல வகையில் ஏற்கனவே நம்முடைய கதைவெளிக்கு வந்துவிட்டது.

 

 

 Elon Musk - https://bookday.in/

 

தற்போது நிஜத்திலேயே அப்படியான காந்த கணினிகள் வரப்போகின்றன. நம்முடைய வழக்கமான தட்டச்சு. வடிவத்தை காந்த ஸ்விச்ங்களாக மாற்றப்போகிறார்கள்.. CHAT GPT வந்தபொழுது ஒரு அன்பர். மனிதனின் வேலையை எல்லாம் அது செய்யப்போகிறது என்றால் எனக்கு பதிலாக ரேஷனில் வரிசையாக நின்று அதனால் சர்க்கரை வாங்க முடியுமா? என்று ஒரு கேள்வியை எழுப்பியிருந்தார். அது மாதிரி இந்த காந்த கணினிகள் காதலுக்கு உதவுமா? என்று நாம் கேட்க வேண்டியிருக்கிறது..

 

எழுதியவர்

 

ஆயிஷா இரா. நடராசன் நேர்காணல்: கல்வித் துறை சார்ந்த எழுத்து, வாசிப்பு இயக்கம் தேவை! | Ayesha Ira. Natarajan Interview - hindutamil.in

ஆயிஷா இரா. நடராசன்.

இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

                                                       மேலும் படிக்க 

Saturday, June 15, 2024

✍🏻 இயற்கை வாழ்வியல் முறை🕊️📡📡வேர்கடலை நன்மைகள்.

✍🏻 இயற்கை வாழ்வியல் முறை🕊️📡📡வேர்கடலை நன்மைகள்.


📡📡📡📡📡📡

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக் காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.


நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம். எனவை நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும். தினமும் பெண்கள் எடுத்துக் கொண்டால் மகப்பேறு நன்றாக இருக்கும். கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும் கருத்தரிப்பதற்கு முன்பே உண்பது மிக மிக உத்தமம். இல்லையேல் கருவுற்ற பின்னும் எடுத்துக் கொள்ளலாம்.


நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது . நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் (osteoporosis)  வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக்கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது . இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.



இளமையை பராமரிக்கும்:

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடலையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.


கொழுப்பை குறைக்கும்

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16கிராம் உள்ளது


இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மைசெய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள் பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை. எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலைஎண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக *குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.


கடந்த 20 வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடி இருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் *பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம்,பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிறைந்துள்ள சத்துக்கள்:

100கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

கார்போஹைட்ரேட்- 21 மி.கி.

நார்சத்து- 9 மி.கி

கரையும்(நல்ல HDL) கொழுப்பு – 40 மி.கி.

புரதம்- 25 மி.கி

ட்ரிப்டோபான்- 0.24 கி

திரியோனின் – 0.85 கி ஐசோலூசின் – 0.85 மி.கி.

லூசின் – 1.625 மி.கி

லைசின் – 0.901 கி

குலுட்டாமிக் ஆசிட்- 5 கி 

கிளைசின்- 1.512 கி

விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி

காப்பர் – 11.44 மி.கி.

இரும்புச்சத்து – 4.58 மி.கி.

மெக்னீசியம் – 168.00 மி.கி.

மேங்கனீஸ் – 1.934 மி.கி.

பாஸ்பரஸ் – 376.00 மி.கி. 

பொட்டாசியம் – 705.00 மி.கி.

சோடியம் – 18.00 மி.கி

துத்தநாகச்சத்து – 3.27 மி.கி

தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது

📡📡📡📡📡📡📡



பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா,முந்திரிப்பருப்புகளில்தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு. நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

📡📡📡📡📡📡📡

கட்டுரை .அருள் நாகலிங்கம்

📡📡📡📡📡📡📡

🌷🌷🌷🌷🌷🌷

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.🙏🏻

🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚🦚 

நன்றி: பெருசங்கர், 🚍ஈரோடு  மாவட்டம், பவானி.              

செல் நம்பர் 7598258480, 6383487768.

((வாட்ஸ் அப்))  7598258480

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

N.P. RAMESH: 9489666102.

இது போன்ற தகவல் பெற

Tuesday, June 4, 2024

நேரு நினைவு கல்லூரியில் கோள்களின் அணிவகுப்பு வான்நோக்கும் நிகழ்ச்சி.

நேரு நினைவு கல்லூரியில் கோள்களின் அணிவகுப்பு வான்நோக்கும் நிகழ்ச்சி.


பூமி உள்ளிட்ட 8 கோள்கள் அடங்கிய நமது சூரியக்குடும்பம் என்பது இன்றளவும் நமக்கு முழுமையாக புரியா த, இயற்கையின் ஒரு விந்தையாகவே உள்ளது. நம்மை ஆச்சரியப்படுத்தும் பல அற்புதமான, அரிய வகை நிகழ்வுகள் அடிக்கடி வானில்அரங்கேறிய வண்ணம்தான் உள்ளன. அந்த வகை யில், 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் நேற்று மற்றும் இன்று  (ஜுன் 4) வானில் நிகழ்ந்தது. இது கிரகங்களின் அணிவகுப்பு PARADE OF PLANETS அல்லது கோ ள்களி ன் சீரமை ப்பு PLANETS ALIGNMENT என அழைக்கப்படுகிறது. 



புதன், செவ்வாய், வியாழன், சனி, யூரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய கிரகங்கள் ஒரே நேர்க்கோட்டில் வந்தது. நேரு நினைவு கல்லூரியில் காலை 4.30 மணி முதல் அழகிய நிலா, செவ்வாய், வளையங்க்களுடன் சனிகோள், பட்டையுடன் வியாழன் கோள்,  ஆகியவை அதிநவீன தொலைநோக்கி வழியாக காண்பிக்கப்பட்டது. கல்லூரித்  தலைவர் திரு பொன். பாலசுப்பிரமணியன், கல்லூரி செயலர் பொன்.இரவிச்சந்திரன், முதல்வர் முனைவர் வெங்கடேசன், ஒருங்கிணைப்பாளர் முனைவர் மு.மீனாட்சி சுந்தரம், துறை தலைவர் ஆகியோர் ஆகியோர் அனுமதியுடன் இந்த நிகழ்ச்சியை இயற்பியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் கபிலன்  ஒருங்கிணைத்தார். இந்த நிகழ்வில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்  தொலைநோக்கி வழியாக நிலவு மற்றும் கோள்களை கண்டு களித்து வியப்படைந்தனர். தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் சங்கம், மற்றும் நேரு நினைவுக் கல்லூரி இணைந்து  இந்த வான்நோக்கும் நிகழ்ச்சியை நடத்திது.







காதலுக்கு உதவுமா குவாண்டம் காந்த கணினிகள்?

 காதலுக்கு உதவுமா குவாண்டம் காந்த கணினிகள்? பள்ளிக்கூட காலத்தில் இரண்டு சாதாரண காந்தங்களை கையில் வைத்திருப்பது புதையல் ஆகும். ஒரு காந்தம் வை...