Friday, August 16, 2024

140 கோடி இந்தியர்களின் பெருங்கனவு விண்ணுக்கு மனிதனை அனுப்ப இலக்கு-இஸ்ரோ தலைவர் சோம்நாத்.

140 கோடி இந்தியர்களின் பெருங்கனவு விண்ணுக்கு மனிதனை அனுப்ப இலக்கு-இஸ்ரோ தலைவர் சோம்நாத்.





இஓஎஸ்-08 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்.


ஸ்ரீஹரிகோட்டா: எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) விண்ணில் செலுத்தப்பட்ட புவி கண்காணிப்புக்கான அதிநவீன இஓஎஸ்-08 உட்பட 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக அதற்கான புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

ராக்கெட் ஏவப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சோம்நாத் கூறியதாவது: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக வடிவமைத்த அதிநவீன இஓஎஸ்-08 எனும் செயற்கைக்கோள் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இப்போது அந்த செயற்கைக்கோள் அதற்கான புவி சுற்றுவட்டப் பாதையில் சரியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை எல்லாம் திட்டமிட்டபடியே நடந்துள்ளன. தொடர்ந்து செயற்கைக்கோளின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இஓஎஸ்-08 செயற்கைக்கோள் சிறப்பாக செயல்படும். இதற்கான உழைப்பைச் செலுத்திய எஸ்எஸ்எல்வி டி-3 குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகளில் இது மூன்றாவது உந்து வாகனம், இன்றைய வெற்றி மூலம் எஸ்எஸ்எல்வி வளர்ச்சி நிறைவுபெற்றது என்று அறிவிக்கலாம்.” என்றார்.








இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

                                                       மேலும் படிக்க 

No comments:

Post a Comment

பூமியை தாக்க வேகமாக நகர்ந்து வரும் ‘அபோபிஸ்’ எனும் சிறுகோள்!

பூமியை தாக்க வேகமாக நகர்ந்து வரும் ‘அபோபிஸ்’ எனும் சிறுகோள்! பூமியை தாக்க வேகமாக நகர்ந்து வரும் ‘அபோபிஸ்’ எனும் சிறுகோள்! பொதுவாக 140 மீட்டர...