Monday, March 31, 2025

இளைஞர்களுக்கான வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு தொடர்பான கருத்தரங்கம்.

இளைஞர்களுக்கான வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாடு தொடர்பான கருத்தரங்கம்.


தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி, பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் கருத்துக்களை பல்வேறு நிகழ்வுகள் மூலம் பரப்புரை செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக 17 முதல் 22 வயதுவரை உள்ள கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டினை ஜூன் மாதம் கோவையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் இளைஞர்கள் வானவியல் குறித்த ஆய்வுக் கட்டுரைகள், போஸ்டர்கள் தயாரிப்பு, குறும்படம் தயாரிப்பு, போட்டோகிராபி, புதுமையான விளையாட்டுக்கள் உருவாக்குதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்கலாம்.

வானவியல் மாநாடு தொடர்பாக  மாநில அளவிலான கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற்றது. தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி மாநிலத்தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். ராமன் ரிச்சர்ச் பவுண்டேசன் தலைவர் ரவிச்சந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளர் உதயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி அஸ்ட்ரோ கிளப் செயலாளர் உமா அனைவரையும் வரவேற்றார். `டாஸ்’ மாநில பொதுச் செயலாளர் மனோகர் வானவியல் மாநாடு குறித்து நோக்கவுரையாற்றினார். பேராசிரியர்கள் ரவிக்குமார், ஜோஸ்பின் பிரபா, நாச்சியப்ப சுவாமிகள் கல்லூரியின் முதல்வர் சந்திரமோகன், சிட்டிசன் சயின்டிஸ்ட் முகிலன் ஆகியோர் கலந்து கொண்டு 17 முதல் 22 வயதுள்ள இளைஞர்கள் வானவியல் மாநாட்டில் சமர்பிக்க வேண்டிய ஆய்வு கட்டுரைகள், போஸ்டர்கள் மற்றும் வானவியல் குறித்த நிகழ்வுகளில் பங்கேற்பது குறித்து செயல்விளக்கத்துடன் பேசினர்.

மூத்த வழக்கறிஞர் மார்டின் கலந்து கொண்டு  வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் குறித்த விழிப்புணர்வு அட்டைகள், செய்முறை அறிவியல் கருவிகள் வழங்கி பேசினார். `டாஸ்’ நிர்வாகிகள் சாந்தி, ஜெகதீஸ்வரன், ரமேஷ், சக்திவேல், சொக்கநாதன் உள்பட பேராசிரியர்கள், டாஸ் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் திருநெல்வேலி  டாஸ் செயற்குழு உறுப்பினர் முத்துசாமி நன்றி கூறினார்.

இளைஞர் வானவியல் மற்றும் விண்வெளி அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் இளைஞர்கள் நிகழ்வுகள் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமாரை 9840607391 எண்ணில் தொடர்பு கொண்டு அல்லது (https://tass.co.in) https://docs.google.com/forms/d/e/1FAIpQLSe1ss9-J2nj5PKoItrWiyHYYwxJLXobpxS8Njfncf_fcCYs2Q/viewform?pli=1  இணைய வழியில் பதிவு செய்து பங்கேற்கலாம்.








இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர் P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.



காப்புப்பிரதி (Backup) செய்ய மறவாதே...!!! இழந்தால் ஏங்காதே!" (World Backup Day).

காப்புப்பிரதி (Backup) செய்ய மறவாதே...!!! இழந்தால் ஏங்காதே!" (World Backup Day).



தரவு காப்புப்பிரதி என்றால் என்ன?

தரவு காப்புப்பிரதி என்பது ஒரு ஐடி அமைப்பில் உள்ள முக்கியமான கோப்புகள் மற்றும் தரவை மற்றொரு இடம் / இடத்திற்கு நகலெடுக்கும் செயல்முறையாகும், இது உபகரணங்கள் செயலிழப்பு, சைபர் தாக்குதல், இயற்கை பேரழிவு மற்றும் பிற தரவு இழப்பு நிகழ்வுகளின் போது தரவைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உலக காப்புப்பிரதி தினம்(World Backup Day) எப்போது?

தரவுகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், அமைப்புகள் மற்றும் கணினிகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டும் வகையில், ஆண்டுதோறும் மார்ச் 31 ஆம் தேதி உலக காப்புப்பிரதி கொண்டாடப்படுகிறது. இந்தப் பிரச்சாரம் 2011 ஆம் ஆண்டு இஸ்மாயில் ஜாதுவால் (Ismail Jadun) தொடங்கப்பட்டது. அதன் பிறகு, ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31 ஆம் தேதி, நிறுவனங்கள் தரவு இழப்பைத் தடுக்க தரவை காப்புப் பிரதி எடுப்பதன் முக்கியத்துவம் குறித்து ட்வீட்(Tweet) செய்து பாட்காஸ்ட்களை (Podcasts) வழங்கி வருகிறது.


காப்புப்பிரதி தேவையா?

சில நேரங்களில் கணினியில் ஏற்படும் ஒரு சில சிறிய பிரச்சனைகள் தரவு அழிவுக்கு வழிவகுக்கும் மற்றும் சில சமயங்களில் நாம் நமது கணினி மற்றும் மின்னணு சாதனங்களை இழக்க நேரிடலாம். சில சமயங்களில், தீம்பொருள் (Malware) கணினியை சேதப்படுத்துவதோடு அல்லாமல் தரவு இழப்புக்கு வழிவகுக்கும் என்பதால் காப்புப்பிரதி என்பது மிகவும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக இந்த டிஜிட்டல் உலகில் கருதப்படுகிறது. .

காப்புப்பிரதி எடுப்பதற்கான வழிகள்?

காப்புப்பிரதி எடுப்பதற்கு மூன்று முக்கிய வழிகள் உள்ளன: முழு, அதிகரிப்பு மற்றும் வேறுபாடு காப்புப்பிரதி. முழு காப்புப்பிரதி தரவின் முழுமையான நகலையும், அதிகரிப்பு காப்புப்பிரதி கடைசி காப்புப்பிரதியிலிருந்து மாற்றங்களை மட்டுமே சேமிக்கிறது, அதே சமயம் வேறுபட்ட காப்புப்பிரதி கடைசி முழு காப்புப்பிரதியிலிருந்து மாற்றங்களை மட்டும் சேமிக்கின்றன. கையேடு காப்புப்பிரதி எடுப்பது கூட ஒரு காப்புப்பிரதியாக கருதலாம். இதில், கணினியில் உள்ள கோப்புகளில் தேவையானவைகளை தேர்ந்தெடுத்து நகலெடுப்பதை உள்ளடக்கிய ஒரு வகை காப்புப்பிரதியாகும்.



காப்புப்பிரதியை எங்கு உருவாக்கலாம்?

1. ஆன்லைன் காப்புப்பிரதி சேவைகள் / கிளவுட் காப்புப்பிரதி - தொலைதூர, கிளவுட் அடிப்படையிலான சேமிப்பக சேவையில் காப்புப்பிரதிகளை சேமித்தல். 

2. ஆஃப்சைட் (Offsite) காப்புப்பிரதி - முதன்மை இயந்திரத்திலிருந்து கோப்புகளை வேறு கணினியில் சேமித்தல். 

3. வெளிப்புற ஹார்டு டிஸ்க் டிரைவ்களில் (Hard Disk Drive) சேமித்து வைத்தல் ஒரு முக்கியமான முறையாகும், ஆனால் HDD பழுதடையலாம் அல்லது தொலைந்து போகலாம்.

4. வெளிப்புற சாலிட் ஸ்டேட் டிரைவ் (Solid State Drive) – தற்சமயம், மக்கள் காப்புப்பிரதியை SSD இல் சேமிக்கிறார்கள், ஆனால் கணினி திருடப்படும் போதோ அல்லது இயற்கை பேரழிவுகளை சந்திக்கும் போதோ தரவு ஒரு கேள்விக்குறியாகிறது.

5. விண்டோஸ் உள்ளமைக்கப்பட்ட காப்புப்பிரதி (Windows Built-in Backup) – விண்டோஸின் “காப்புப்பிரதி மற்றும் மீட்டமை” அம்சத்தைப் பயன்படுத்தி கோப்புகளை காப்புப்பிரதி எடுக்கலாம் அல்லது OneDrive-இல் அதிகபட்சமாக 5 GB கோப்புகளை காப்புப்பிரதி எடுக்கலாம்.  

தேவைக்கேற்ப காப்புப்பிரதியைச் சேமிப்பதற்கு மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழிகளில் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்யவும். 

உலக காப்புப்பிரதி தினத்தன்று, அதாவது மார்ச் 31 ஆம் தேதி, வருடத்திற்கு ஒரு முறையாவது காப்புப்பிரதி எடுத்து, உங்கள் தரவைப் பாதுகாத்து கொள்ளவும். மேலும் worldbackupDay.com என்ற இணையதளத்தில் உறுதிமொழி எடுத்தும், மக்கள் தங்கள் தரவை இழக்காமல் இருக்கவும் ஊக்குவிக்கவும். 

காப்புப்பிரதி எடுங்கள்...!!! பாதுகாப்பாக இருங்கள்...!!!! 

டாக்டர் ப. கல்பனா

உதவிப் பேராசிரியர் & Sustainable Development Goals ஒருங்கிணைப்பாளர் 

கணினி அறிவியல் துறை

கிறிஸ்து (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)

பெங்களூர், கர்நாடகா.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர் P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Friday, March 28, 2025

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025- Partial solar eclipse March 29, 2025.

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025 Partial solar eclipse March 29, 2025.


சூரிய கிரகணம் என்பது சூரியன் மற்றும் பூமி இடையில் சந்திரன் ஒரே நேர் கோட்டில் வரும்போது நிகழ்கின்றது. சூரியன் சந்திரனை விட 400 மடங்கு பெரியது. ஆனால் சூரியன் சந்திரனை விட பூமியிலிருந்து 400 மடங்கு தொலைவில் இருப்பதால் சந்திரனின் கோண விட்டமும் சூரியனின் கோண விட்டமும் பூமியிலிருந்து பார்க்கும்போது கிட்டத்தட்ட ஒரே அளவாக தெரிகிறது(அரை டிகிரி). எனவே எப்போதெல்லாம் சந்திரன் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே ஒரே நேர்கோட்டில் வருகிறதோ அப்பொதெல்லாம் சூரிய கிரகணம் ஏற்படும்.

இந்த நிகழ்வில் சந்திரன் சூரியனை மறைப்பதால் பூமியின் சில பகுதிகளில் சூரிய ஒளியின் பொலிவு குறையும். அந்தப்பகுதிதான் சூரிய கிரகணம் நடக்கும் பகுதி ஆகும்.

சூரிய கிரகணத்தின் வகைகள்:

1.            முழு சூரிய கிரகணம் (Total Solar Eclipse):

சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்கும்போது இது நிகழும். முழு சூரிய கிரகணத்தின் போது சூரியனின் வெளிப்புற அடுக்கை (Corona) அறிவியல் அறிஞர்கள் நிறமாலைமானி மூலம் ஆராய்ச்சி செய்வதற்கான வாய்ப்பு கிடைக்கிறது.



2.            பகுதி சூரிய கிரகணம் (Partial Solar Eclipse):

சூரியன் மற்றும் பூமி இடையில் சந்திரன் ஒரே நேர் கோட்டில் வராமல் சற்று விலகி சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல் சூரியனின் ஒரு பகுதியை மட்டும் மறைக்கும்.



3.            வளைய சூரிய கிரகணம் (Annular Solar Eclipse):

சில நேரங்களில் சந்திரன் சூரியனை மறைக்கும் போது சந்திரனின் கோண விட்டமானது சூரியனின் கோண விட்டத்தை விட கொஞ்சம் குறைவாக இருப்பதால் சூரியன் வளையம் போன்ற வடிவில் தெரியும். 


2025 ஆம் ஆண்டு சூரிய கிரகணம்:

மார்ச் 29, 2025 அன்று, ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவின் சில பகுதிகளில் பகுதி சூரிய கிரகணம் ஏற்படும். இருப்பினும், இந்த அரிய வான நிகழ்வு அதன் புவியியல் இருப்பிடம் காரணமாக இந்தியாவில் இருந்து தெரியாது. சந்திரன் சூரியனை முழுமையாக மறைக்காமல் ஒரு பகுதியை மட்டும் மறைக்கும் பகுதி சூரிய கிரகணம் ஆகும்.

சூரிய கிரகணத்தின் போது கண் பாதுகாப்பு மிக முக்கியமானது. இது பகுதி கிரகணமாக இருந்தாலும், சூரியனை நேரடியாகப் பார்ப்பது கண்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, உங்கள் கண்களை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்?

 நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது இங்கே.

ISO-சான்றளிக்கப்பட்ட சூரிய தடுப்பு(எக்லிப்ஸ்) கண்ணாடிகள்:

இந்த சிறப்பு கண்ணாடிகள், சூரியனைப் பார்ப்பதற்கான கடுமையான பாதுகாப்பு தரநிலைகளைப் பூர்த்தி செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. வழக்கமான சூரியக்கண்ணாடிகள் போதுமான பாதுகாப்பை வழங்காது.

 பின்ஹோல் ப்ரொஜெக்டர்:

 இந்த எளிய பயனுள்ள முறையின் மூலம் சூரியனின் பிம்பத்தை ஒரு திரையில் காண்பிக்க உதவுகிறது. இது நேரடி சூரிய ஒளியிலிருந்து கண்களை பாதுகாக்கிறது.



தொலைநோக்கிகள்:
இந்த சாதனங்களுடன் எப்போதும் சூரிய வடிகட்டிகளைப் பயன்படுத்த வேண்டும். சரியான பாதுகாப்பு இல்லாமல் அவற்றின் மூலம் சூரியனைப் பார்ப்பது நிரந்தர கண் பாதிப்பை ஏற்படுத்தும்.

சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் பூமியின் அழகிய வானியல் நிகழ்வுகள் மட்டுமின்றி அறிவியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை சந்திரன் அல்லது பூமியின் நிழல்கள் காரணமாக ஏற்படக்கூடிய இயற்கை நிகழ்வுகள். இவற்றால் மனிதர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது!!





இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர் P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

🛑📕 3231 பக்கங்கள் கொண்டTNPSC Overall Previous Year Question.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

கோவில்பட்டியில் வானவியல் அறிவியலை பரப்புரை செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள்.

கோவில்பட்டியில் வானவியல் அறிவியலை பரப்புரை செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள். தூத்துக்குடி மாவட்ட அஸ்ட்ரோ கிளப் சார்பில் வானவியல் அறிவியலை பொ...