Monday, November 30, 2020

✍🏻 🐥🐥இயற்கை வாழ்வியல் முறை🐥🐥சளிக் காய்ச்சல் இருமலுக்கு இயற்கை வைத்தியம்.

 ✍🏻 🐥🐥இயற்கை வாழ்வியல் முறை🐥🐥சளிக் காய்ச்சல் இருமலுக்கு இயற்கை வைத்தியம்.

சளி, இருமல் ஜலதோஷம் ஒரே நாளில் குணமாக வீட்டு வைத்தியம்/sali irumal vaithiyam/How  to get rid of cold - YouTube

🐥🐥🐥🐥🐥🐥

சளிக்காய்ச்சல் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கு வந்தாலும் பாடாய்ப்படுத்தும். சளிக்காய்ச்சசல் இருமலால் அவதியுறும்பொழுது நீங்கள் இந்த இயற்கை வைத்திய முறைகளை பயன்படுத்தி பயன் காணலாம்.

🐥🐥🐥🐥🐥🐥

கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு சர்க்கரை கலந்து கொடுத்தால், குழந்தைகளின் கபம் கலந்த இருமல் நீங்கும். வறட்டு இருமலுக்கு திப்பிலியை வறுத்துப் பொடி செய்து, தேனில் குழைத்துக் கொடுத்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை அனைவரும் செய்யலாம்.

இருமல் மற்றும் வறட்டு இருமலுக்கு கற்பூரவள்ளி இலை சாறு - இயற்கை வைத்தியம்..!

🐥🐥🐥🐥🐥🐥

சூட்டினால் வரும் இருமலை வறட்டு இருமல் என்று கூறுவார்கள். இப்படிப்பட்ட இருமலுக்குச் சீரகத்தை அரை தேக்கரண்டி கலந்து தூள் செய்து வெந்நீருடன் தேன் கலந்து பருகி வர விரைவில் வறட்டு இருமல் விலகிவிடும்.

🐥🐥🐥🐥🐥🐥

தொடர்ச்சியான இருமல் - இருமல் தொடர்ந்து ஏற்பட்டு தொல்ல அளிக்கும்போது, பத்து கிராம் சிற்றரத்தையை உடைத்து ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கிக்கொண்டு அதில் இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்து, அத்துடன் ஒரு தேக்கரண்டி இஞ்சி சாற்றை கலந்து உள்ளுக்குக் கொடுத்து வந்தால் குணமாகும்.

🐥🐥🐥🐥🐥🐥

சிற்றிருமல்

நீங்கள் நன்றாகக் காய்ச்சிய பசும் பாலுடன் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளுடன் சிறிது மிளகுத்தூளையும் சேர்த்துக் கலக்கி அருந்த இருமல் தணியும்.

🐥🐥🐥🐥🐥🐥

இரைப்பு இருமலுக்கு

இஞ்சிச் சாறு, ஈர வெங்காயச் சாறு, எலுமிச்சம்பழச்சாறு இவைகளை சம அளவு எடுத்து வேளைக்கு ஒரு தேக்கரண்டி அளவு மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு இருமல் சாந்தியாகும். இருமல் அதிகமாயிருந்தால் ஒரு நாளைக்கு இரு வேளை சாப்பிடலாம்.

KKR Health Care - K.Karthik Raja Health Collections: சளி தொல்லை

🐥🐥🐥🐥🐥🐥

கோழை இருமல்

நாய் துளசியைக் கொண்டு வந்து தினம் கொஞ்சம் சாப்பிட்டு வந்தால் கோழை இருமல் போன்ற குறைகளை அகற்றும். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல போஷாக்கு பெறும்.

நாள்பட்ட நெஞ்சு சளியை வெளியேற்ற உதவும் சில கை வைத்தியங்கள்! | Herbal  Remedies For Cough And Cold - Tamil BoldSky

🐥🐥🐥🐥🐥🐥

வறட்டு இருமல்

வறட்டு இருமல் ஏற்பட்டிருந்தால், ஆழாக்களவு பசும்பாலுடன் அரைத் தேக்கரண்டியளவு மிளகை உடைத்துப் போட்டுக் கொதி வரும் வரைக் கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி, சிறிதளவு பனங்கற்கண்டையும் சேர்த்துக் கலக்கிப் படுக்கப் போகுமுன் குடித்துவிட வேண்டும். இது போல மூன்று நாள் சாப்பிட்டால் போதும், வறட்டு இருமல் குணமாகும்.

🐥🐥🐥🐥🐥🐥

உடல் சூட்டினால் இருமல்

உடல் சூட்டினால் ஏற்படும் இருமலைத்தான் இந்த மருத்துவம் கண்டிக்கும். மிளகுத் தூளையும் பனை வெல்லத்தையும் சேர்த்துப் பிசைந்து வைத்துக்கொண்டு ஒரு சுண்டைக்காய் அளவு உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், இரண்டொரு நாட்களில் சூட்டு இருமல் சரியாகும்.

🐥🐥🐥🐥🐥🐥

எந்த வகையான இருமலுக்கும்

பொதுவாக எந்த வகையான இருமலையும் சீரகம் குணப்படுத்திவிடும். 10 கிராம் சீரகத்தைச் சுத்தம் பார்த்து அதை இலேசாக வறுத்து எடுத்து அம்மியில் வைத்துத் தூள் செய்து அது எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவு கற்கண்டைத் தூள் செய்து அத்துடன் கலந்து, ஒரு சீசாவில் வைத்துக்கொண்டு, காலை, மாலை அரை தேக்கரண்டியளவு சாப்பிட்டு வெந்நீர் குடிக்க ஐந்தே நாளில் இருமல் குணமாகும்.

வீட்டு மருத்துவம் - Posts | Facebook

🐥🐥🐥🐥🐥🐥

கக்குவான் இருமலுக்கு

கக்குவான் இருமலின்போது வெள்ளைப் பூண்டை உரித்து அதை நெய்யில் வதக்கி வைத்துக்கொண்டு சாதத்துடன் சுமார் இரண்டு கிராம் எடை வீதம் சேர்த்துக் கொடுத்து வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.

🐥🐥🐥🐥🐥🐥

ஜலதோஷம் காரணமாக இருமல்

ஜலதோஷம் காரணமாக இருமல் ஏற்பட்டிருந்தால் ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டியைக் காயவிட்டு அதில் இரண்டு தேக்கரண்டியளவு மிளகைப் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு வறுபட்டு சிவந்து வருகி, அதில் தீப்பொறி பறக்கும் சமயம் ஆழாக்குத் தண்ணீரை அதில் விட்டு மூடி நன்றாகக் கொதிக்க விட வேண்டும்.

🐥🐥🐥🐥🐥🐥

கொதித்தபின் இறக்கி அதில் பாதியை மட்டும் ஒரு டம்ளரில் இறுத்துக்கொண்டு, அதில் தேவையான அளவு சர்க்கரைச் சேர்த்துக் காலையில் குடித்துவிட வேண்டும். மறுபகுதியை மிளகுடன் வைத்திருந்து மாலையில் குடித்துவிட வேண்டும். இருமல் குணமாகும்.

🐥🐥🐥🐥🐥🐥

காய்ச்சல் - சாதாரண ஜூரத்திற்கு

இருபது கிராம் மிளகை எடுத்து சட்டியில் போட்டு நன்றாக வறுக்க வேண்டும். மிளகு அனைத்தும் நன்கு சிவந்து தீப்பொறி பறக்கும் சமயம் மத்தைக் கொண்டு கடைந்துவிட்டு அதில் 200 மில்லி நீர் விட்டு, 100 மில்லியளவுக்குச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி அதில் இரண்டு தேக்கரண்டி எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து காலை மாலை கொடுத்து வர வேண்டும். இரண்டே நாட்களில் குணமாகிவிடும்.

home remedies for cold and cough: இடைவிடாத இருமலை இல்லாமல் செய்துவிடுவோம் -  how to stop cough and cold naturally at home | Samayam Tamil

🐥🐥🐥🐥🐥🐥

காய்ச்சல் குணமாக

சீரகம் அரைத் தேக்கரண்டி, மிளகு அரை தேக்கரண்டி, இஞ்சித்துண்டு அரை தேக்கரண்டி அளவு எடுத்து அம்மியில் வைத்து, சுத்தம் பார்த்து கறிவேப்பிலையில் கைப்பிடியளவில் பாதியளவு எடுத்து இத்துடன் வைத்து மை போல அரைத்து, இரண்டு கழற்சிக்காயளவு எடுத்து வாயில் போட்டு தண்ணீணீர் குடிக்க வேண்டும். காலையிலும் மாலையிலும் இவ்விதம் சாப்பிட்டு வந்தால் எந்த விதமான காய்ச்சலும் குணமாகும்.

🐥🐥🐥🐥🐥🐥

காய்ச்சல் என்ற நிலை ஆரம்பித்தவுடனேயே மிளகுக் கஷாயம் போட்டுக் கொடுத்துவிட்டால் எந்த வகையான காய்ச்சலும் குணமாகும். ஒரு சுத்தமான சட்டியை அடுப்பில் வைத்து சட்டி காய்ந்தவுடன் மூன்று தேக்கரண்டியளவு மிளகை எடுத்துச் சட்டியில் போட்டு வறுக்க வேண்டும். மிளகு நன்றாக வறுபட்டு சிவந்து கருகி அதில் தீப்பெ¡றி பறக்கும் வரை வறுத்து அதில் இரண்டு ஆழாக்களவு தண்ணீரை விட்டு, நன்றாகக் கொதிக்க விட வேண்டும்.

கொதித்தபின் இறக்கி ஆறவிட்டு தாங்கக்கூடிய அளவு வந்ததும் இறுத்து கொஞ்சம் சர்க்கரைச் சேர்த்துக் குடித்துவிட வேண்டும். இதில் பாதியளவு கஷாயத்தை வைத்துக்கொண்டு மறுபடியும் கொதிக்க வைத்து மறுவேளைக்குக் குடிக்க வேண்டும். இந்த விதமாக காலை மட்டும் மூன்று நாளைக்கு சாப்பிட்டு வந்தால் எந்தக் காய்ச்சலும் குணமாகும்.

சளித்தொல்லையை விரட்ட சில இயற்கை வைத்திய குறிப்புகள்

🐥🐥🐥🐥🐥🐥

குளிர்காய்ச்சல்

நடுங்க வைக்கும் குளிருடன் காய்ச்சலும் இருக்கும்போது, சிறிது மிளகைத் தட்டிப்போட்டு, அத்துடன் கொஞ்சம் பனை வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு பாதியாகச் சுண்டுமளவு கஷாயமாக்கி கொடுத்து வர குணமாகும்.

🐥🐥🐥🐥🐥🐥

எந்த விதமான காய்ச்சலும் குணமாக


வல்லாரை இலையுடன், மிளகு, துளசி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து மெழுகுபதமாக அரைத்து மாத்திரைகளாக உருட்டி நிழலில் உலர்த்தி வைத்துக்கொண்டு சுடுநீரில் சாப்பிட்டால் காய்ச்சல் என்ன காரணத்தால் ஏற்பட்டிருந்தாலும் சரியாகும்.

🐥🐥🐥🐥🐥🐥

(குறிப்பு : குழந்தைகளுக்கு என்று குறிப்பிட்டிருந்தால் மட்டுமே குழந்தைகளுக்கு செய்து கொடுக்கவும், மற்றபடி வீட்டில் உள்ள முதியோர்களின் ஆலோசனையின் பேரில் மற்றும் நாட்டு வைத்திய அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்வது நல்லது)

🐥🐥🐥🐥🐥🐥

மிகினும் குறையினும் நோய்செய்யும் அளவோடு பயன்படுத்தி நலமோடு வாழ்வோம்.

🐥🐥🐥🐥🐥🐥

🌷🌷🌷🌷🌷🌷

உடல் ஆரோக்கியமாக  இருந்தால்தான் சிந்தனை தெளிவாக இருக்கும் சிந்தனை தெளிவாக இருந்தால் தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்🌷 ஆரோக்கியத்தை காப்போம் மகிழ்ச்சியுடன் இருப்போம்

🦚🦚🦚🦚🦚🦚

உடலில் உள்ள   எல்லா உடல் நல குறைபாடுகளையும்  சரிசெய்ய  இயற்கை வாழ்வியல் முறை சார்ந்த  ஆலோசனைகள் வழங்கபடும்

🦚🦚🦚🦚🦚🦚

நன்றி : பெருசங்கர்,  🚍 ஈரோடு  மாவட்டம், பவானி.

🐥🐥🐥🐥🐥🐥

(( செல் நம்பர்)) (( 6383487768))

(( வாட்ஸ் அப்))  (( 7598258480 ))

🐥🐥🐥🐥🐥🐥

குரு வாழ்க குருவே துணை

🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

டிசம்பர் 7 முதல் கல்லூரிகள் திறப்பு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…

 டிசம்பர் 7 முதல் கல்லூரிகள் திறப்பு… முதல்வர் அதிரடி அறிவிப்பு…


தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக தளர்வுகள் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள ஊரடங்கு இன்றோடு முடிவுக்கு வரும் நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் சில தளர்வுகளையும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அதன் விவரத்தை கீழ் காணலாம்.

  • தமிழத்தில் டிச.31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு - தமிழக அரசு
  • மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் டிசம்பர் 7 ஆம் தேதி முதல் துவங்கும். 
  • டிசம்பர்  14 ஆம் தேதி முதல் மெரினா கடற்கரைக்கு செல்ல பொதுமக்களுக்க்கு அனுமதி.
  • வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ பாஸ் தொடரும்.
  • கல்லூரி இளைநிலை இறுதியாண்டு வகுப்புகள் டிச.7 ஆம் தேதி முதல் தொடக்கம். 
  • உள் அரங்கில் 200 பேருக்கு மிகாமல் அரசியல் சமுதாய கூட்டங்கள் நடத்த டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அனுமதி.
  • கூட்டங்கள் நடத்த காவல்துறை ஆணையர், மாவட்ட ஆட்சியரிடம் முன்அனுமதி பெறுவது அவசியம்.






இன்று வானில் அரிய நிகழ்வு. 2020இன் கடைசி சந்திர கிரகணம்

 இன்று வானில் அரிய நிகழ்வு. 2020இன் கடைசி சந்திர கிரகணம்.

2020ஆம் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம் இன்று நிகழவிருக்கிறது.

சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் என்று கூறப்படுகிறது. அதாவது சூரியன், பூமி, சந்திரன் ஒரு நேர்கோட்டில் இருக்கும்.

இன்றைய சந்திர கிரகணம் இந்தியாவில் 1.04 மணிக்கு தொடங்கி 5.22 வரை நடைபெறும். 3.13 மணிக்கு உச்சத்தில் இருக்கும். இன்றைய சந்திர கிரகணம் அடிவானத்திற்கு கீழே இருப்பதால் இந்தியாவில் பார்க்க முடியாது.



இந்தியாவில் இந்த சந்திரகிரகணம் மதியம் 1.04 மணிக்கு தொடங்குகிறது. மாலை 5.22 மணிக்கு முடிவடைகிறது. மாலை 3.15 மணி அளவில் கிரகணம் உச்சத்தில் இருக்கும். இந்த கிரகணம் அடிவானத்திற்கு கீழே இருப்பதால் இந்தியாவில் தெரியாது என வானியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். எனினும் நாட்டின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளான பாட்னா, ராஞ்சி, கொல்கத்தா, லக்னோ, வாரணாசி, புவனேஸ்வர் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களால் இந்த கிரகணத்தை காணமுடியும். 

ஐரோப்பாஆசியாஆஸ்திரேலியாவட அமெரிக்காதென் அமெரிக்கா,பசிபிக் மற்றும் ஆட்லாண்டிக் உள்ளிட்ட பகுதிகளில் பார்க்க முடியும். இந்த ஆண்டில் ஜனவரி 10, ஜூன் 5, ஜூலை 4 ஆகிய தேதிகளில் சந்திர கிரகணங்கள்  ஏற்பட்ட நிலையில் இது 2020இன் கடைசி மற்றும் நான்காவது சந்திர கிரகணம். 

சந்திர கிரகணங்கள் மூன்று வகைப்படும். அவை முழு கிரகணம், பகுதி கிரகணம், பெனும்ரல் கிரகணம் ஆகும். ஏற்கெனவே ஏற்பட்ட 3 கிரகணங்களும் பெனும்ரல் வகையை சேர்ந்தவையாகும். பெனும்ரல் கிரகணம் என்றால் பூமியால் சூரியன் பகுதி அளவு மறைக்கப்படும். அப்போது நிலவுக்கு சூரிய வெளிச்சம் போய் சேராது. பூமியின் வெளிப்புற நிழல் மட்டுமே நிலவுக்கு செல்லும். அதுதான் பெனும்ரல் கிரகணம் ஆகும். இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் டிசம்பர் 14-ஆம் தேதி நிகழ்கிறது.

Today (November 30, 1830) is the Memorial Day of the German physicist, mathematician and astronomer Johann Tobias Mayer, who founded Pythagoras' theoretical number.

Today (November 30, 1830) is the Memorial Day of the German physicist, mathematician and astronomer Johann Tobias Mayer, who founded Pythagoras' theoretical number.

 

Johann Tobias Mayer was born on May 5, 1752, in Gottingen, the first son of Tobias Mayor and Maria. His father was a professor of geology, physics and astronomy at Cottingham. His father died when the mayor was in his tenth year. In 1769 Gottingen studied theology and philosophy at George August University. It was then that the new university was started under Abraham Gothelf Kastner. After Cosner, it operated under George Christophe Ilstenberg. After graduating in 1773, he worked as a lecturer and mathematician in mathematics. Invited by the University of Aldorf on November 17, 1779. He worked there from 1780 to 1786.

 

He later taught mathematics and physics at the Friedrich Alexander University in Nuremberg, Erlangen. He continued to head the University of Cottingon in 1799 after Ellistenberg. Some of his students include Kieran Dirkson. After Dirkson received his doctorate in 1820, Carl Kushtav became Jacob's mentor. The mayor and his wife, Johanna, had five children. The theoretical number of Pythagoras, believed to have belonged to Ileanardo da Vinci, is now thought to have been established by Meyer in 1772.

 

Mayor is best known for his textbooks on mathematics and natural sciences. His 1801 textbook on physics, Anfangsgründe der Naturlehre zum Behuf der Vorlesungen über die Experimental-Physik, had a profound impact on all German-speaking countries. Her studies of astronomy and recipe physics were published in the journal Annalen der Physik. The German physicist Johann Tobias Meyer, the founder of the Pythagorean theorem, passed away on November 30, 1830, in Gottingen, at the age of 78.

Source By: Wikipedia

Information: Dr. P. Ramesh, Assistant Professor of Physics, Nehru Memorial College, Puthanampatti, Trichy.


Get information like this
https://t.me/joinchat/jpqj3jQLN51kYTk9
Join Telegram  Group.
https://chat.whatsapp.com/HHC5m0Jz3Ue1E8ilgta0YT
Join WhatsApp  Group
Thanks.

பிதாகோரசின் தேற்ற எண்பிப்பு நிறுவிய ஜெர்மனிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் யோகான் தோபியாசு மேயர் நினைவு தினம் இன்று (நவம்பர் 30, 1830).

பிதாகோரசின் தேற்ற எண்பிப்பு நிறுவிய ஜெர்மனிய இயற்பியலாளர், கணிதவியலாளர், வானியலாளர் யோகான் தோபியாசு மேயர் நினைவு தினம் இன்று (நவம்பர் 30, 1830). 

யோகான் தோபியாசு மேயர் (Johann Tobias Mayer) மே 5, 1752ல் தோபியாசு மேயருக்கும் மரியாவுக்கும் முதல் மகனாகப் கோட்டிங்கனில் பிறந்தார். இவரது தந்தையார் கோட்டிங்கனில் புவிப்பரப்பியல், இயற்பியல், வானியல் துறைப் பேராசிரியராக விளங்கினார். மேயரின் பத்தாம் அகவையிலேயே தந்தையார் இறந்து விட்டார். 1769ல் கோட்டிங்கன், ஜார்ஜ் ஆகத்து பல்கலைக்கழகத்தில் இறையியலும் மெய்யியலும் கற்றார். இது அப்போது தான் ஆபிரகாம் கோதெல்ஃப் காசுட்னரின் கீழ் தொடங்கப்பட்ட புதிய பல்கலைக்கழகமாகும். காசுட்னருக்குப் பின்னர், இது ஜார்ஜ் கிறித்தோப் இல்ச்டென்பர்கின் கீழ் இயங்கியது. இவர் 1773ல் பட்டம் பெற்றதும் கணிதவியல் விரிவுரையாளராகவும் வானியலாளராகவும் பணிபுரிந்தார். நவம்பர் 17, 1779ல் அல்தோர்ஃப் பல்கலைக்கழகத்தால் அழைக்கப்பட்டுள்ளார். அங்கே இவர் 1780 முதல் 1786 வரை பணிபுரிந்தார். 


பிறகு இவர் எர்லாங்கன் நியூரன்பர்கில் அமைந்த பிரீட்ரிக் அலெக்சாந்தர் பல்கலைக்கழகத்தில் கணிதவியலும் இயற்பியலும் கற்பித்தார். இவர் 1799ல் கோட்டிங்கனில் இலிச்டென்பருக்குப் பிறகு தொடர்ந்து அப்பல்கலைக்கழகத்துக்குத் தலைமை வகித்துள்ளார். இவரது மாணவர்களில் என்னோ கீரன் டிர்க்சன் அடங்குவார். டிர்க்சன் 1820ல் முனைவர் பட்டம் பெற்றதும், கார்ல் குசுதவ் யாகோபுக்கு அறிவுரையாளராக விளங்கினார். மேயருக்கும் அவரது மனைவி யோகான்னாவுக்கும் ஐந்து குழந்தைகள் பிறந்தனர். இலியனார்டோ டா வின்சியினது எனக் கருதப்பட்ட பிதாகோரசின் தேற்ற எண்பிப்பு இப்போது மேயர் 1772ல் நிறுவியதாகக் கருதப்படுகிறது. 


பிதாகரஸ் தேற்றம் அல்லது பித்தேகோரசு தேற்றம் அல்லது பைத்தகரசின் தேற்றம் (Pythagorean theorem அல்லது Pythagoras' theorem) என்பது ஒரு செங்கோண முக்கோணத்தில் உள்ள மூன்று பக்கங்களுக்கும் இடையே உள்ள தனிச்சிறப்பான ஒரு தொடர்பைக் கூறும் ஒரு கூற்று.

தேற்றத்தின் கூற்று

ஒரு செங்கோண முக்கோணத்தில், அதன் செம்பக்கத்தின் (கர்ணத்தின்) நீளத்தின் இருமடியானது, மற்ற பக்க நீளங்களின் இருமடிகளின் கூட்டுக்கு ஈடு (சமம்).

இத்தேற்றத்தை கிரேக்க நாட்டு கணிதவியல் அறிஞர், மெய்யியல் அறிஞராகிய பித்தகோரசு கண்டுபிடித்தார் என்று பொதுவாக நம்பப்படுவதால், அவர் பெயரால் இத்தேற்றம் வழங்குகின்றது [1]. ஆனால் இத்தேற்றத்தின் உண்மை அவர் காலத்திற்கு மிக முன்னமேயே அறியப்பட்டுப் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது.

செங்கோண முக்கோணத்தின் மிகப்பெரிய பக்கமாகிய செம்பக்கம் அல்லது கர்ணத்தின் நீளத்தை  என்று கொண்டு, மற்ற இரு பக்கங்களின் (“தாங்கிப் பக்கங்களின்”) நீளங்களை என்று குறித்தால், பித்தகோரசு தேற்றம் தரும் சமன்பாடு:

இப்பொழுது செம்பக்கத்தின் (கர்ணத்தின்) நீளத்தை நேரடியாக அறிய:

செம்பக்கத்தின் நீளமும், மற்றொரு பக்கத்தின் நீளமும் தெரிந்திருந்தால் மூன்றாவது பக்கத்தின் நீளத்தைக் கீழ்க்காணுமாறு அறியலாம்:

இந்தப் பித்தேகோரசின் தேற்றத்தின் நீட்சியாக அல்லது பொதுமைப்பாடாகச் செங்கோண முக்கோணம் மட்டுமல்லாமல் எந்த ஒரு (யூக்கிளிடிய சமதள) முக்கோணத்திற்கும் பொருந்துமாறு கோசைன்களின் விதி வகுக்கப்படுகின்றது. இந்தக் கோசைன்களின் விதிப்படி, மூன்றாவது பக்கத்தின் நீளத்தை அறிய, மற்ற இரு பக்கங்களின் நீளங்களும், அவற்றுக்கிடையே உள்ள கோணமும் அறிந்திருக்க வேண்டும். மற்ற இரு பக்கங்களுக்கும் இடையே உள்ள கோணம் செங்கோணமாக (90°) இருந்தால், கோசைன்களின் விதி பித்தகோரசின் விதியாகச் சுருங்கிவிடும்.


பித்தேகோரசின் விதியை வடிவங்களின் துணைகொண்டு காட்ட ஒவ்வொரு பக்கத்தின் இருமடியைக் காட்ட ஒவ்வொரு பக்கத்தின் மீதும் ஒரு கட்டம் (சதுரம்) வரைந்து காட்டப்பட்டுள்ளது; அது போலவே, சீரான எவ்வடிவும் இருக்கலாம் என்பதற்காக, அருகில் உள்ள படத்தில் ஒவ்வொரு பக்கங்களின் மீதும் அரைவட்டங்கள் காட்டப்பட்டுள்ளன. செம்பக்கத்தின் மீதுள்ள சீரான வடிவத்தின் பரப்பளவு மற்ற இரு பக்கங்களின் மீதுள்ள சீரான வடிவங்களின் பரப்புகளின் கூட்டுக்கு ஈடு. இதே போலச் சமபக்க முக்கோணங்கள், சீர் அறுகோணங்கள் போன்றவற்றையும் அமைத்துக் காட்டலாம்.


மேயர் கணிதவியல், இயற்கை அறிவியல் பாடநூல்களுக்குப் பெயர்போனவர். இவர் 1801 இல் எழுதிய இயற்பியல் பாடநூலான Anfangsgründe der Naturlehre zum Behuf der Vorlesungen über die Experimental-Physik எனும் நூல் ஜெர்மன் மொழிபேசும் நாடுகளில் எல்லாம் மிகுந்த தாக்கத்தைச் செலுத்தியது. இவரது வானியல், செய்முறை இயற்பியல் ஆய்வுகள் Annalen der Physik எனும் இதழில் வெளியாகின. பிதாகோரசின் தேற்ற எண்பிப்பு நிறுவிய ஜெர்மனிய இயற்பியலாளர், யோகான் தோபியாசு மேயர்  நவம்பர் 30, 1830ல் தனது 78வது அகவையில், கோட்டிங்கனில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.

Source By: Wikipedia

தகவல்: முனைவர். P. இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

இது போன்ற தகவல் பெற

நன்றி.

முனைவர். P. இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

எரக்குடி AGM மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் விண்வெளி விழிப்புணர்வு.

எரக்குடி AGM மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் மற்றும் விண்வெளி விழிப்புணர்வு. தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி நடத்தும் நிறமாலை தி...