Monday, August 30, 2021

விண்வெளியில் ஐஸ் க்ரீம் சாப்பிட்ட விண்வெளி வீரர்கள்.

விண்வெளியில் ஐஸ் க்ரீம் சாப்பிட்ட விண்வெளி வீரர்கள்.

முதல் முறையாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்வெளிக்கு எறும்புகள், இறால்கள், வெண்ணெய் மற்றும் மனித அளவிலான ரோபோ கைகள், ஜீரோ க்ராவிட்டி ஆராய்ச்சி பொருட்கள், விண்வெளி வீரர்களுக்கான உணவு, ஐஸ் கிரீம் போன்ற ஏராளமான பொருட்களை ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் அதன் ட்ராகன் கார்கோ ஷிப் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தை நோக்கி ஞாயிற்றுக்கிழமை விண்ணில் ஏவியுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம் நோக்கி பாய்ந்த டிராகன் கார்கோ ஷிப் இது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசா நிறுவனத்திற்காக செய்யும் 23 வது பயணம் ஆகும். மறுசுழற்சி செய்யப்பட்ட பால்கன் ராக்கெட் நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்த சரக்குகளை சர்வதேச விண்வெளி நிலையம் சென்று ஒப்படைக்க புறப்பட்டது. டிராகன் காப்ஸ்யூலை ஏற்றிய பிறகு, முதல் கட்ட பூஸ்டர் ஸ்பேஸ்எக்ஸின் புதிய கடல் தளத்தில் நிமிர்ந்து தரையிறங்கியது, "கிராவிடாஸ் ஷார்ட்ஃபால்" என்று பெயரிடப்பட்டது.

என்னவெல்லாம் இந்த முறை விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது? டிராகன் 2,305 பவுண்டுகள் கொண்ட அறிவியல் கியர் சாதனங்கள், கிட்டத்தட்ட 1,000 பவுண்டுகள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் உதிரி பாகங்களை எடுத்துச்செல்கிறது. அதேபோல், விண்வெளி கார்கோ ஷிப் 1,058 பவுண்டுகள் கொண்ட குழுப் பொருட்களுடன் நிரம்பியுள்ளது. இதில் ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் பிரெஷ் ஆகப் பறிக்கப்பட்ட பழங்கள் இம்முறை வீரர்களுக்காக விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று ஜான்சன் ஸ்பேஸில் விண்வெளி நிலைய திட்ட மேலாளர் ஜோயல் மாண்டல்பானோ கூறினார்.

முதல் முறையாக விண்வெளிக்கு சென்ற ஐஸ் கிரீம் 

அதேபோல், இம்முறை இந்த ஸ்டாக் உடன் எலுமிச்சை, வெங்காயம், சில கட்டி வெண்ணெய்கள், சில செர்ரி தக்காளிகள் போன்றவையும் விண்வெளி வீரர்களுக்காக விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார். இதை விட விண்வெளிக்கு வீரர்களுக்கு இம்முறை கிடைக்கும் மிகக் குளிர்ச்சியான விஷயம் என்னவென்றால் சில ஐஸ்கிரீம்களும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணுக்கு அனுப்பியுள்ளது. விண்வெளிக்கு ஐஸ் கிரீம் அனுப்பப்பட்டது இதான் முதல் முறை, இந்த வெற்றிக்குக் குழு உறுப்பினர்களின் முயற்சியே காரணம்.

எலும்புச் சிதைவு மற்றும் கண்பார்வை பிரச்சினைகளுக்கு விண்வெளியில் சோதனை 

விண்வெளி நிலையத்திற்கு வழங்கப்பட்ட அறிவியல் விசாரணைகளில் எடை இல்லாத நிலையில் எலும்புச் சிதைவைக் குறைப்பதற்கான சிகிச்சைகளைப் படிப்பதற்கான பரிசோதனைகள் நடத்தப்படும். மைக்ரோ கிராவிட்டிக்கு நீண்டகால வெளிப்பாட்டால் ஏற்படும் கண்பார்வை பிரச்சினைகளைப் படிக்க ஒரு சாதனம் அனுப்பப்பட்டுள்ளது. சோதனை ரோபோ கை தொழில்நுட்பம் மற்றும் பல்வேறு விண்வெளி கட்டிடப் பொருட்களில் விண்வெளிச் சூழலின் நீண்டகால விளைவுகளைப் படிப்பதற்கான ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும்.

எறும்புகள் மற்றும் இறால்கள் எதற்கு விண்வெளிக்கு? 

மேலும் இளம் பெண்களிடையே அறிவியலில் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், மூன்று பெண் சாரணர் சோதனைகளும் இம்முறை விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது போன்ற பல பொருட்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் எறும்புகள் மற்றும் இறால்களும் கூட இந்த முறை விண்வெளிக்கு அனுப்பப்பட்டுள்ளது. எதற்காக விண்வெளிக்கு எறும்புகள் மற்றும் இறால்கள் அனுப்பப்பட்டுள்ளது என்று தெரியுமா?

ஜீரோ கிராவிட்டி இல் எறும்புகள் என்ன செய்யும்? 

எறும்புகள் எடையற்ற நிலையில் எவ்வாறு சுரங்கப்பாதை அமைக்கும் என்பதைக் கண்டறிய ஒரு விண்வெளி வீரர் எலும்புகள் மற்றும் அதன் குணங்கள் பற்றி ஜீரோ கிராவிட்டியில் மதிப்பீடு செய்வார் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், மற்ற வீரர்கள் விண்வெளியில் தக்காளி, பெப்பர் மற்றும் லெமன் க்ராஸ் புல் வகையை எவ்வாறு வளர்ப்பது என்பதை ஆய்வு செய்வார்கள்.

விண்வெளியில் இருந்து மீண்டும் பூமிக்கு வரும் பொருட்கள் 

ஸ்டாக் கப்பல் மீண்டும் சோதனைகள் மற்றும் பூமிக்குத் திரும்பும் முன் விண்வெளி நிலையத்தில் இருந்து அனுப்பப்படும் மற்ற பொருட்களுடன் நிரம்பியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல், விண்வெளி வீரர்கள் மேற்கொள்ளும் விண்வெளி நடைப்பயணத்திற்கான நேரம் மாற்றப்பட்டுள்ளது. நாசா விண்வெளி வீரர் மார்க் வந்தே ஹெய் மற்றும் ஜப்பானிய குழுவினர் அகிகிகோ ஹோஷைட் ஆகியோர் கடந்த திங்கட்கிழமை விண்வெளிப்பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தனர்.

ஸ்பேஸ் வாக் பயணம் நாள் மாற்றப்பட்டதன் காரணம் என்ன? 

ஆனால் வந்தே ஹேய் உடலில் எதிர்பாராத நரம்பியல் வலி உருவாகியதால் இந்த ஸ்பேஸ் வாக் பயணம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், விண்வெளி நடைப்பயிற்சி இப்போது செப்டம்பர் 12 தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. பிரெஞ்சு விண்வெளி வீரர் தாமஸ் பெஸ்கெட் வந்தே ஹேயின் இடத்தில் பயணத்தை மேற்கொள்வர் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தால் எளிமையான விண்வெளி பயணம் செப்டம்பர் இறுதியில் கார்கோ டிராகன் கப்பலின் 3D கேமரா காட்சிகளைப் பூமிக்குத் திருப்பி அனுப்ப முடியும். புகைப்படம் எடுத்தல் என்பது சுற்றுப்பாதையில் வாழ்க்கையின் ஆழமான காட்சிகளைக் கைப்பற்றும் ஒரு வணிகத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முயற்சியினால் விண்வெளி பயணம் இப்போது சற்று எளிமை அடைந்துள்ளது.
Source :tamil.gizbot.com

இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...