Monday, September 13, 2021

அரசுப்பணிகளில் மகளிர் இடஒதுக்கீடு 40% ஆக உயர்வு.

அரசுப்பணிகளில் மகளிர் இடஒதுக்கீடு 40% ஆக உயர்வு.

தமிழக சட்டப்பேரவையில் 2021-22ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல்செய்தார். இதையடுத்து, நிதிநிலை அறிக்கை குறித்த மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 23 நாட்களாக நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று மட்டும் 20 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. ஆகஸ்ட் 13ஆம் தேதி தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

அரசுப் பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 40%ஆக உயர்த்தியுள்ளது தமிழ்நாடு அரசு. முன்னதாக இது 30% என்றிருந்தது.

மாற்றத்தை ஊக்குவிப்பதில் பாலின சமத்துவம் முக்கியம் என்பதை அடிப்படையாகக் கொண்டு, நேரடி நியமனம் மூலம் நடைபெறும் அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்குரிய சட்டதிருத்தம் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

No comments:

Post a Comment

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது?

விண்வெளி வீரர்கள் எப்படி சாப்பிடுகிறார்கள்? உணவு எப்படி விண்வெளிக்கு அனுப்பப்படுகிறது? கடந்த இரண்டு மாதங்களாக விண்வெளியில் தங்கியுள்ள விண்வெ...