ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உட்பட 24 பதவிகளுக்கான- UPSC தேர்வு கடினமாக இருந்ததா?
இணையதளம் மூலம் விண்ணப்பப்பதிவு மார்ச் மாதம் 4-ம் தேதி முதல் மார்ச் 24-ம் தேதி வரை நடைபெற்றது. கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி நடைபெற இருந்த சிவில் சர்வீஸ் தேர்வு கரோனா பெருந்தொற்றால் தள்ளி வைக்கப்பட்டு, அக்டோபர் 10-ம் தேதி (இன்று) நடைபெறும் என மத்திய அரசு தேர்வாணையம் அறிவித்தது.
அதன்படி, நாடு முழுவதும் 712 காலிப்பணியிடங்களுக்கான இந்திய குடிமைப்பணிக்கான முதல் நிலை தேர்வுகள் இன்று நடைபெற்றது. தமிழகத்தில் சென்னை, மதுரை, வேலூர், கோவை உள்ளிட்ட முக்கிய நகரில் யுபிஎஸ்சி தேர்வுகள் நடைபெற்றன.
ஒவ்வொரு தேர்வு மையத்திலும் 24 நபர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு எழுத வந்தவர்களின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு, தேர்வு மையத்துக்குள் தேர்வர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர். கரோனா பரவல் காரணமாக தேர்வு எழுத வந்தவர்கள் முகக்கவசம் அணிந்த, சானிடைசர் கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். தேர்வு மையத்தில் தனிநபர் இடைவெளி விட்டு இருக்கைகள் அமைக்கப்பட்டிருந்தன.
எலக்ட்ரானிக்ஸ், மின்னனு சாதனப்பொருட்கள், கைபேசி, கால்குலேட்டர் உள்ளிட்ட பொருட்களை எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை எழுத்துத்தேர்வுகளும், பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை திறனறித் தேர்வும் நடைபெறுகிறது.
இது போன்ற தகவல் பெறhttps://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
நன்றி.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், p.ramesh704@gmail.com மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப் அனுப்பிட வேண்டுகிறோம்.
No comments:
Post a Comment