Saturday, December 25, 2021

12 - 18 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி ஒப்புதல்.

12 - 18 வயதினருக்கான கொரோனா தடுப்பூசி ஒப்புதல்.

12 முதல் 18 வயது உள்ளவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி செலுத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் 2லிருந்து 8 வயது, 8லிருந்து 14 வயது மற்றும் 12லிருந்து 18 வயதினர் என பல்வேறு பிரிவுகளாகப் பிரித்து குழந்தைகளுக்கு தடுப்பூசி பரிசோதனையானது டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய மருத்துவமனைகளில் நடைபெற்று வந்தது.

மிக விரிவான பரிசோதனைகளாக கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக இந்த பரிசோதனை நடைபெற்று வந்தது. மற்ற தடுப்பூசிகளைவிட கோவாக்சின் தடுப்பூசி சிறுவர்களிடையே குறைந்த அளவே பக்கவிளைவுகளை ஏற்படுத்தியதும் நல்ல பலனை அளித்ததும் முதற்கட்ட பரிசோதனையில் தெரியவந்தது.

இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை இந்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனத்திற்கு ஒப்புதலுக்காக அனுப்பியிருந்தனர். பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு தற்போது 12 முதல் 18 வயதினருக்கும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசியை செலுத்த மத்திய மருந்துகள் தர கட்டுப்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்திருக்கிறது.




இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

இஸ்ரோ சான்றிதழ் பெற்ற 227 நேரு நினைவுக் கல்லுரி மாணவர்கள்.

இஸ்ரோ சான்றிதழ் பெற்ற 227 நேரு நினைவுக் கல்லுரி மாணவர்கள். புத்தனாம்பட்டி, நேரு நினைவுக் கல்லுரியில்  பயிலும்  127  மாணவர்கள்,  இஸ்ரோ ஆல் நட...