Tuesday, August 27, 2024

ஆதார் கார்டு எடுத்து 10 ஆண்டு ஆகிடுச்சா...? உடனே இதை செய்ங்க..!

ஆதார் கார்டு எடுத்து 10 ஆண்டு ஆகிடுச்சா...? உடனே இதை செய்ங்க..!

ஆதார் விவரங்களை கட்டணமின்றி புதுப்பிக்க செப்.14 வரை அவகாசம்

நாடு முழுவதும் கட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!

- இலவச ஆதார் புதுப்பிப்பு - செப்.14 வரை அவகாசம்!

▪️ நாடு முழுவதும் கட்டணமின்றி ஆதார் அட்டையை புதுப்பிக்க செப்டம்பர் 14ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!

▪️ வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, வங்கி புத்தகம் உள்ளிட்ட ஏதேனும் ஒரு ஆவணத்தோடு ஆதார் சேவை மையத்தை அணுகலாம் எனவும் செப்.14ம் தேதிக்குப் பிறகு கட்டணம் செலுத்தினால் மட்டுமே புதுப்பிக்க முடியும் எனவும் அறிவிப்பு.

▪️ஆதார் பதிவு செய்யப்பட்ட தேதியிலிருந்து ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒரு முறை சமீபத்திய தகவல்களுடன் புதுப்பிக்க வேண்டும்.






இது போன்ற தகவல் பெற
https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

Sunday, August 25, 2024

2898ல் பூமி இருக்காதா?.. கல்கி 2898AD சொல்ல வருவது இதுதானா? - கற்பனைக்கே எட்டாத மாய உலகத்தில் மனிதன்.

2898ல் பூமி இருக்காதா?.. கல்கி 2898AD சொல்ல வருவது இதுதானா? - கற்பனைக்கே எட்டாத மாய உலகத்தில் மனிதன்.

2898ல் பூமி இருக்காதா?.. கல்கி 2898AD சொல்ல வருவது இதுதானா? - கற்பனைக்கே எட்டாத மாய உலகத்தில் மனிதன் - பிரபஞ்சத்தையே காலடியில் வைக்கும் மனித இனம்?



இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

                                                       மேலும் படிக்க 

Friday, August 16, 2024

140 கோடி இந்தியர்களின் பெருங்கனவு விண்ணுக்கு மனிதனை அனுப்ப இலக்கு-இஸ்ரோ தலைவர் சோம்நாத்.

140 கோடி இந்தியர்களின் பெருங்கனவு விண்ணுக்கு மனிதனை அனுப்ப இலக்கு-இஸ்ரோ தலைவர் சோம்நாத்.





இஓஎஸ்-08 செயற்கைக்கோள் வெற்றிகரமாக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தம்: இஸ்ரோ தலைவர் சோம்நாத்.


ஸ்ரீஹரிகோட்டா: எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) விண்ணில் செலுத்தப்பட்ட புவி கண்காணிப்புக்கான அதிநவீன இஓஎஸ்-08 உட்பட 2 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக அதற்கான புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.

ராக்கெட் ஏவப்பட்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சோம்நாத் கூறியதாவது: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) புவி கண்காணிப்பு செயல்பாடுகளுக்காக வடிவமைத்த அதிநவீன இஓஎஸ்-08 எனும் செயற்கைக்கோள் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் மூலம் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இப்போது அந்த செயற்கைக்கோள் அதற்கான புவி சுற்றுவட்டப் பாதையில் சரியாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை எல்லாம் திட்டமிட்டபடியே நடந்துள்ளன. தொடர்ந்து செயற்கைக்கோளின் செயல்பாடு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இஓஎஸ்-08 செயற்கைக்கோள் சிறப்பாக செயல்படும். இதற்கான உழைப்பைச் செலுத்திய எஸ்எஸ்எல்வி டி-3 குழுவினருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகளில் இது மூன்றாவது உந்து வாகனம், இன்றைய வெற்றி மூலம் எஸ்எஸ்எல்வி வளர்ச்சி நிறைவுபெற்றது என்று அறிவிக்கலாம்.” என்றார்.








இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

                                                       மேலும் படிக்க 

Sunday, August 11, 2024

வரும் சுதந்திர தினத்தில் இஸ்ரோவின் விண்வெளி நோக்கிய பயணம்.

வரும் சுதந்திர தினத்தில் இஸ்ரோவின் விண்வெளி நோக்கிய பயணம். 

விண்வெளி துறையில் இந்தியா சமீப காலமாக பெரும் சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக சந்திராயன் 3 மற்றும் ஆதித்யா எல்1 உள்ளிட்ட ஸ்பேஸ் மிஷன்கள் சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றிருக்கிறது. இந்நிலையில் சுதந்திர தினத்தன்று இஸ்ரோ இஒஎஸ்-8 செயற்கைக்கோளை எஸ்எஸ்எல்வி-டி3 சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் மூலம் செலுத்துகிறது


செயற்கைகோள்கள் மூலம் கிடைக்கப்பெறும் தரவுகள் நாட்டின் பல்வேறு துறைகளுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக தொலைக்காட்சி ஒளிபரப்பு, ஏடிஎம், தொலைபேசி தொடர்பு, தொலைநிலை கல்வி, தொலைநிலை மருத்துவம், காலநிலை, வறட்சி மதிப்பீடு, நிலத்தடி நீர் பகுதிகளை கண்டறிதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரிவுகளில் உதவுகிறது. மேலும், இஸ்ரோ மேற்கண்ட துறைகளை மேம்படுத்தும் வகையில் தேவைகளுக்கேற்ப பல்வேறு செயற்கைக் கோள்களை இஸ்ரோ தொடர்ந்து அனுப்பி வருகிறது.



புவி அறிவியல், நீர் மேலாண்மை, காலநிலை முன்னறிவிப்பு, ஊரக வளர்ச்சி, மீன்வளம் மற்றும் வேளாண் துறை உள்ளிட்ட பல்வேறு முக்கியமான துறைகளில் செயற்கைக்கோள் பயன்பாடு அதிகமாக உள்ளது.

மறுபுறம் எதிர்கால விண்வெளி திட்டங்களுக்கு இந்தியா தொடர்ந்து முதலீடு செய்து அதிக அளவில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வுகளில் பெரிதும் பாராட்டப்பட்ட மிஷன்தான் சந்திராயன் 3. விண்வெளி துறையில் இந்தியாவுக்கு என தனிப் பெயரை உருவாக்கி கொடுத்தது சந்திரயான் 3 திட்டம்தான். இதுவரை நிலவின் தென் துருவத்தை எந்த நாட்டின் விண்கலமும் தொட்டது கிடையாது. ஆனால், முதல் முறையாக இந்தியா இந்த மகத்தான வரலாற்று சாதனையை படைத்தது. இந்த சாதனை ஒட்டுமொத்த மனித சமூகத்திற்குமான சாதனை என இஸ்ரோ கூறியுள்ளது.


கடந்த ஆண்டு ஜூலை மாதம் 14ம் தேதியன்று நிலவுக்கு சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. சந்திரயான் -3 விண்கலன் பூமியை 6 முறை சுற்றி 41 நாட்கள் பயணத்திற்கு பின்னர் நிலவின் தென் துருவத்தில் இறங்கி வரலாற்று சாதனையை படைத்தது. இதுவரை உலகின் எந்த ஒரு நாடும் நிலவின் தென் துருவத்தில் விண்கலனை தரையிறக்கியது கிடையாது. அப்படி இருக்கையில் சந்திரயான் வெற்றிகரமாக தரையிறங்கி ஆய்வை தொடங்கியது. அதுவரை இந்தியாவை வளர்ந்து வரும் நாடாக பார்த்த உலகம், இந்த வெற்றிக்கு பின்னர் அதன் பார்வையை மாற்றிக்கொண்டது.


ஆய்வில் நிலவில் ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், கால்சியம், அயர்ன், குரோமியம், டைட்டேனியம், மாங்கனீஸ், சிலிக்கான் உள்ளிட்ட தனிமங்கள் இருப்பதை சந்திரயான் 3 பிரக்யான் ரோவரில் இருந்த எல்ஐபிஎஸ் கருவி கண்டுபிடித்து சொன்னது. இந்தியாவுக்கு முன்னர் நிலவுக்கு ரஷ்யாவும், அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளும் விண்கலன்களை அனுப்பி ஆய்வு செய்திருந்தாலும் இஸ்ரோவின் பிரிக்யான் ரோவர்தான் முதல் முதலில் நிலவில் சல்பர் இருப்பதை கண்டுபிடித்தது. இது இஸ்ரோ படைத்த இரண்டாவது சாதனை.


இதனை தொடர்ந்து சுதந்திர தினத்தன்று, இஒஎஸ்-8 செயற்கைக்கோளை எஸ்எஸ்எல்வி-டி3 சிறிய செயற்கைக்கோள் ஏவுதல் வாகனம் மூலம் இஸ்ரோ விண்ணில் செலுத்த இருக்கிறது.


இதுகுறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறுகையில், ஓஎஸ்-8 செயற்கைக்கோளின் முதன்மை நோக்கம், மைக்ரோ சாட்டிலைட்டை வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல், மைக்ரோசாட்டிலைட் பஸ்ஸுடன் இணக்கமான பேலோட் கருவிகளை உருவாக்குதல் மற்றும் எதிர்காலத்தில் செயல்படும் செயற்கைக்கோள்களுக்கு தேவையான புதிய தொழில்நுட்பங்களை இணைத்தல் ஆகியவை அடங்கும்.



இஓஎஸ்-8 செயற்கைக்கோள் எலக்ட்ரோ ஆப்டிகல் இன்ஃப்ராரெட் பேலோடு (இஒஐஆர்), குளோபல் நேவிகேஷன் சாட்டிலைட் சிஸ்டம்-ரிஃப்ளெக்டோமெட்ரி பேலோட் (ஜிஎன்எஸ்எஸ்-ஆர்) மற்றும் எஸ்ஐசி யுவி டோசிமீட்டர் ஆகிய மூன்று பேலோடுகளைக் கொண்டுள்ளது. இஒஐஆர் கருவி, செயற்கைக்கோள் அடிப்படையிலான கண்காணிப்பு, பேரிடர் கண்காணிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, இரவும் பகலும், மிட்-வேவ் ஐஆர் (எம்ஐஆர்) மற்றும் லாங்-வேவ் ஐஆர் (எல்விஐஆர்) பேண்டுகளில் படங்களை எடுக்க வடிவமைக்கப்பட்டுள்ளது.



எரிமலை செயல்பாடு கண்காணிப்பு மற்றும் தொழில்துறை மற்றும் மின் நிலைய பேரிடர் கண்காணிப்பு ஆகியவை இந்த கருவியின் செயல்பாடாகும்” என்று கூறியுள்ளனர்.

ஸ்ரீ ஹரிகோட்டா சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஏவப்படும் எஸ் எஸ் எல் வி 3 காணவிரும்புவோர் பூர்த்தி செய்ய இணைப்பு

Link: https://lvg.shar.gov.in/VSCREGISTRATION/index.jsp

நன்றி: முனைவர் முத்துசாமி, திருநெல்வேலி ஆஸ்ரோ கிளப் செயலர்.


இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

                                                       மேலும் படிக்க 

Thursday, August 8, 2024

தங்க மங்கை வினேஷ் போகத்!?

தங்க மங்கை வினேஷ் போகத்!?

100 கிராம்

சமையலறையில் இருந்து பெண் சமீப காலமாகத்தான் வெளியில் வந்திருக்கிறாள். அவள் வளர்ச்சி விண்ணை முட்டினாலும் அவள் உடல் சார்ந்த சோதனைகள் அவளை மண்ணைக் கவ்வவே செய்கிறது. எத்தனை முன்னேற்றம் வந்தாலும் எத்தனை தொழில்நுட்பம் வளர்ந்தாலும் என்ன கலாச்சார மாற்றம் நிகழ்ந்தாலும் பெண் என்பவள் படுக்கைக்கு உரியவள் என்ற போக்கு என்றும் உள்ளதுஎனவே அது இன்றும் உள்ளது .

அதைஎதிர்த்து அவள் கண்ணீர் விட்டால்....சிரித்து விட்டுப் போவார்கள்! கோபம் கொண்டால்...ஏளனமாய் பார்ப்பார்கள்! சீறிப் பாய்ந்தால் நெருப்பைக் கொண்டு அணைப்பார்கள்! போராடினால் சாமானியப்பெண்ணாக இருந்தால் உடனே வேரோடு பிடுங்கி வீசிவிடுவார்கள்! 



சாதனை நிகழ்த்தக்கூடிய பெண்ணாக இருந்தால் சோதனை கொடுத்து மூலையில் அமர வைப்பார்கள்! அப்படி இப்போது அமர்ந்திருக்கும் பெண்தான் வினேஷ். ஆம்! வினேஷ் போகத். ஹரியானாவில் பிறந்தவர் மல்யுத்த குடும்பத்தைச் சார்ந்த மனவலிமை கொண்ட வீராங்கனை! 2014 கிளாசிகோ தங்கம், 2018 கோஸ்ட் கோஸ்ட் 2022பர்மிங்கம் தங்கம், 2014 இஞ்சியோனில் வெண்கலம், 2018 ஜெகர்தா தங்கம், 2013 நியூ டெல்லியில் வெண்கலம், 2015 தோகாவில் வெள்ளி, 2016 பாங்காங் வெண்கலம், 2013 ஜெகன்ஸ் பெர்லின் வெள்ளி. நடப்பு ஒலிம்பிக்கில் கலந்து கொண்டார் உலக சாம்பியன் மற்றும் நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான யூயி சுசாகியோடு விளையாடி கால் இறுதிக்கு முன்னேறி அடுத்து ஒரு மணி நேரத்தில் உக்ரைன் வீராங்கனை அக்ஷானா லிவாட்ச் யை வீழ்த்தி அரை இறுதியில் கியூபா வீராங்கனை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் நிச்சயம் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த வேளையில் ஏமாற்ற நெடி....இறுதிச்சுற்றில் எடை அதிகமாம்! தகுதி நீக்கமாம்! "என்னடா இது பித்தலாட்டமா இருக்கு"

என்ற காமெடி போல் உள்ளது! வினேஷ் தங்கம் வாங்குவார் அதை கொண்டாடலாம் என காத்திருந்த நாம் அவர் தாக்கப்பட்ட போது பேசாமல் இருந்தோம்! 


நேற்று வரை அவர் பதக்கம் பெறுவார் என இருந்தோம் இன்று எந்த பதக்கமும் இன்றி தரவரிசையில் இறுதியாக தள்ளப்பட்டு வெறுங்கையோடு வெளியேற்றப்பட்டார். இதற்கு காரணம் ஒலிம்பிக் விதிமுறை அல்ல...வினேஷ் போகத்தின் கூடிய எடை அல்ல...இப்படி அவர் வெளியேற்றப்பட வேண்டும் என்பது அவர் விதி அல்ல...அன்று அவர் தாக்கப்பட்ட போதே நாம் கொதித்தெழுந்திருக்க வேண்டும் அன்று அவர் கழுத்தில் பூட்ஸ் கால்கள் பட்ட போது அதன் வேரை நாம் பிடுங்கி இருக்க வேண்டும்! பாலியல் புகார் எழுந்தபோது நாம் விழித்திருக்க வேண்டும்! ஏனெனில் இது மக்களாட்சி நாடு...குடியரசு நாடு! சர்வாதிகாரமும்...தனிநபர் ஆட்சியும் கொண்ட நாடு அல்ல ஆனால் நமக்குத்தான் எதற்குமே நேரம் போதாதே! நம் வாழ்க்கையில் முன்னேற்றவே நமக்கு நேரம் போதாது பிறகு ஏன் பிறரைப் பற்றி கவலைப்படுவானேன்! நேற்று அவருக்காக போராட  தவறினோம்! இன்றும் தவறுகிறோம்! நாளையும் தவறுவோம்....


இது தொடர்கதை! எவ்வளவு ஆழமான காயமாக இருந்தாலும் நம் வீட்டில்  நடக்கும் வரை அது ஒரு செய்தி...தகவல் மட்டுமே! ஏனெனில்,நமக்கு வந்தால் தான் அது ரத்தம் பிறருக்கு அது தக்காளி சட்னி தானே!ஐ

கட்டுரை: ந.ஹூமேரா பர்வீன்








இது போன்ற தகவல் பெற

https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94

இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.

தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

                                                       மேலும் படிக்க 

ஆதார் கார்டு எடுத்து 10 ஆண்டு ஆகிடுச்சா...? உடனே இதை செய்ங்க..!

ஆதார் கார்டு எடுத்து 10 ஆண்டு ஆகிடுச்சா...? உடனே இதை செய்ங்க..! ஆதார் விவரங்களை கட்டணமின்றி புதுப்பிக்க செப்.14 வரை அவகாசம் நாடு முழுவதும் க...