Monday, July 15, 2024

தபால் துறையில் 44,228 பணியிடங்கள்-தேர்வு கிடையாது.

தபால் துறையில் 44,228 பணியிடங்கள்-தேர்வு கிடையாது.


இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் தபால் அலுவலகங்களில் கிராம் டக் சேவக்ஸ் என்ற தபால் அலுவலர் (BPM) மற்றும் உதவி தபால் அலுவலர் (ABPM/DakSevak) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தேர்வு கிடையாது. 10 ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும்.

தபால் சேவை

மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை – 44,228

தமிழ்நாட்டில் காலியிடங்களின் எண்ணிக்கை – 3,789

கல்வித் தகுதி

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி

18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்  

தபால் அலுவலர் (BPM) – ரூ.12,000 – 29,380

உதவி தபால் அலுவலர் (ABPM/DakSevak) – ரூ.10,000 – 24,470

தேர்வு செய்யப்படும் முறை

இந்த பணியிடங்களுக்கு 10 வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு கிடையாது.


விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.08.2024

விண்ணப்பக் கட்டணம்

பொது பிரிவுக்கு ரூ. 100; SC/ST, மாற்றுத்திறனாளிகள், பெண்கள் மற்றும் திருநங்கைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

மேலும் விவரங்கள் அறிய https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.


இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

                                                       மேலும் படிக்க 

🛑🤔 இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் அரசு வேலை எது?

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.

நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Saturday, July 13, 2024

மரம் நடும் வாரம் முன்னிட்டு திருப்பட்டூர் கோவில் குளம் சுற்றி மரம் நட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.

மரம் நடும் வாரம் முன்னிட்டு திருப்பட்டூர் கோவில் குளம் சுற்றி மரம் நட்ட நேரு நினைவு கல்லூரி மாணவர்கள்.


வன மஹோத்ஸவ் என்ற மரம் நடும் வார விழா, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் வாரத்தில், மரங்களை வளர்ப்பதன் மற்றும் அவற்றைப் பாதுகாப்பதன் அவசியத்தை பொது மக்களிடையே புகுத்துவதற்காக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நேரு நினைவு கல்லூரி மாணவர்கள், திருப்பட்டூர் கோவில் அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவங்கள் உடன் இணைந்து திருப்பட்டூர் குளத்தை சுற்றி பல வகையான பழ மரங்கள் நடப்பட்டன. இந்த பழ மரங்கள் வளர்ந்து பயன் தரும் போது கிராமத்தை சுற்றி வலம் வரும் குரங்கு கூட்டங்களுக்கு உணவு கிடைக்கும். இதன் மூலம் பொது மக்களுக்கு குரங்குகள் மூலம் வரும் இடையூறு தவிக்கப்படும் என்று விளக்கி திருப்பட்டூர் கோவில் அறநிலையத்துறை அதிகாரி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி திருச்சி பண்பலை 102.1 வானொலி மூலம் நேரடியாக ஒலிபரப்ப பட்டது.






கல்லூரித்  தலைவர் திரு பொன். பாலசுப்பிரமணியன், கல்லூரி செயலர் பொன்.இரவிச்சந்திரன், முதல்வர் முனைவர் வெங்கடேசன்,  அனுமதி மற்றும் வழிகாட்டுதல் உடன் இந்த நிகழ்ச்சியை இயற்பியல் துறை உதவி பேராசிரியர் பொ. ரமேஷ் ஒருங்கிணைத்தார்.

Trichy FM 102.1MHz Live

Getlokalapp News

 இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

                                                       மேலும் படிக்க 

🛑🤔 இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் அரசு வேலை எது?

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.

நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

Thursday, July 4, 2024

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் புதுமுக மாணவர்களுக்கு தொடக்க விழா.

புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் புதுமுக மாணவர்களுக்கு தொடக்க விழா.



3- 7 -2024 புதன்கிழமை புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் புதுமுக மாணவர்களுக்கு புதுமையாக கல்வி பயிலும் சூழலை எடுத்துரைக்கும் நிகழ்வு நடைபெற்றது. விழாவின் தொடக்கமாக கல்லூரி ஒருங்கிணைப்பாளர் முனைவர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் வரவேற்புரை நல்கினார்.வரவேற்புரையைத் தொடர்ந்து புதுமுக மாணவர்களுக்கு மூத்த சகோதர சகோதரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்கள்.





நிகழ்வில் கல்லூரி தலைவர் பொன். பாலசுப்பிரமணியன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார். தொடக்கவுரையில் நேரு நினைவுக் கல்லூரி கடந்து வந்த வரலாற்று நிகழ்வுகளையும் மாணவர்கள் நற்பண்புகளோடு திகழ்வதற்கு நல்ல அறிவுரைகளும் வழங்கினார்.



அவரைத் தொடர்ந்து கல்லூரிச்  செயலர் பொன். இரவிச்சந்திரன் அவர்கள் மாணவர்களுக்கான சுதந்திரத்தைப் பயன்படுத்தி வாழ்வில் நல்ல முன்னேற்றங்களைக் காண வேண்டும் என்று கூறி சிறப்புரை வழங்கினார். 



கல்லூரி முதல்வர் முனைவர் A. வெங்கடேசன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.


துணை முதல்வர் முனைவர் K.T. தமிழ்மணி அவர்கள் கல்லூரி வளாகத்தின் கலாச்சாரத்தையும் வழிகாட்டி நெறிமுறைகளையும் எடுத்துரைத்தார். 



கல்லூரி தர கட்டுப்பாட்டு ஒருங்கிணைப்பாளர் முனைவர் சரவணன் தேசியத் தர மதிப்பீட்டுக் குழுமத்தின் சிறப்பினை எடுத்துரைத்தார்.




சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை ஜெயலட்சுமி அவர்கள் பங்கேற்று சிரமங்களைக் கடந்தால்தான் சிகரங்களை தொட முடியும் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். தன் வாழ்வில் சந்தித்த பல சவால்களை எவ்வாறு எதிர்கொண்டு நாசா செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டார் என்பதை எடுத்துரைத்தார். தான் வாழும் ஆதனக்கோட்டை கிராமத்தில் கிராமாலயா தொண்டு நிறுவனம் மூலம் 126 கழிப்பறைகளை கட்டி கொடுத்து மகாராஷ்டிரா மாநில பள்ளி பாடப் புத்தகத்தில் கனவு மெய்ப்படும் என்ற தலைப்பில் இடம் பெற்றதையும் விளக்கி கூறினார். ஒவ்வொருவரும் வாழ்வில் தன்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை இருந்தால் எவ்வளவு உயர்ந்த நிலையாக இருந்தாலும் அடைய முடியும் என மாணவர்களுக்கு ஊக்கம் அளித்தார்.





சிறப்பு விருந்தினராக திருச்சிராப்பள்ளி சைபர் கிரைம் காவல்துணை ஆய்வாளர் ஜெயக்குமார் அவர்கள் இணைய பாதுகாப்பு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். இணைய வழியில் பண மோசடி குறித்து எடுத்துரைத்தார். மேலும் இணையதள சூதாட்டங்கள் விளையாட்டுகள் வழியாக ஏற்படக்கூடிய பிரச்சனைகள் பற்றிய ஆலோசனைகளை வழங்கினார். இணையதள வழியாக வேலை வாய்ப்பு இருப்பதாக் கூறி ஏமாற்றுபவர்களிடம் பணத்தினை இழந்து விடக்கூடாது என்றும், UPI செயலி பயன்படுத்தி பண மோசடியில் இருந்து தற்காத்துக் கொள்ள வழிமுறைகளைக் கூறினார். சமூக வலைதளங்களில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொள்ளக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்தார். சைபர் கிரைம் குறித்த படிப்பினை மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.





நிகழ்வில் தமிழ்நாடு வானியல் மற்றும் அறிவியல் குழுமம் செயற்குழு உறுப்பினர் எழிலன் அவர்கள் இன்றைய உழைப்பு நாளைய சாதனை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அதில் மற்றவர்களுக்கு தெரிந்த விஷயமும், மற்றவர்களுக்கு தெரியாத விஷயமும் தெரிந்து வைத்திருந்தால் எளிதாக வேலை கிடைக்கும். ஒவ்வொருவரும்  தன் பட்டப்படிப்புடன் சேர்த்து ஒரு திறனையும் வளர்த்துக் கொள்ள வேண்டும். நம்மிடம் திறன் இருந்தால் அந்த திறனை பயன்படுத்தி பல்வேறு துறைகளில் எளிதில்வேலைக்கு செல்லலாம். நீங்கள் படிக்கும் இந்த பட்டப் படிப்பு தான் உங்கள் வாழ்க்கையை மாற்றும் மந்திரக்கோல் ஆகும் என்று சிறப்புரை ஆற்றினார். மேலும் கேள், படி, எழுது, சொல்லுதல் என்னும் நான்கு மந்திர முன்னேற்ற படிகளை சொல்லிக் கொடுத்தார். நினைத்த இலக்கை அடைவதற்கு ஏன்? எதற்கு? எப்படி? என்ற சிந்தனையுடன் அனைத்து துறைகளிலும் பயில வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். 


நிறைவாக வணிகவியல் துறை இயக்குனர் முனைவர் மதிவாணன் அவர்கள் நன்றியுரை கூறினார். நிகழ்வில் முதலாம் ஆண்டு புதுமுக மாணவர்கள் சுமார் 700 பேர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.








இது போன்ற தகவல் பெற

நன்றி.

இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

                                                       மேலும் படிக்க 

🛑🤔 இந்தியாவில் அதிக சம்பளம் பெறும் அரசு வேலை எது?

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.


🛑🤔 📚 +2 க்கு பிறகு என்ன படிப்பு படிக்கலாம்.

நீங்கள் நினைத்தவை எல்லாம் நடக்கிற வாழ்க்கை ரகசியம்- காணொளி.

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

விண்ணில் பாய்ந்தது GSLV-F17-EOS-05 செயற்கைகோள் வெற்றி.

விண்ணில் பாய்ந்தது GSLV-F17- EOS-05  செயற்கைகோள் வெற்றி.  ஸ்ரீஹரி கோட்டாவில் இருந்து GSLV-F17 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. 18 நி...