Monday, November 23, 2020

✍️கவிதை ✍️ 🙏விவசாயி 🙏- இரஞ்சிதா தியாகராஜன்.

 ✍️கவிதை ✍️

      🙏விவசாயி 🙏- இரஞ்சிதா தியாகராஜன்.

வானம் பார்த்து ,

வளி மேல் விழி வைத்து, 

மழை மேல் மனதை வைத்து ,

உழைப்பார் நம் விவசாயி....

விவசாயிகளுக்கு ஓய்வூதியம்! மாதம் ரூ.3,000 கிடைக்கும் | Dinamalar

வெய்யோன் சுடரால் நாளெல்லாம் வெந்து, 

வெகுளித்தனம் மனதைக் கொண்டு,

சேறு, சகதிகளை உடலாய்க் கொண்டு

    உழைக்கிறாய்.... 

🌱விவசாயம் GIFs 🖤SRI_RAM_96🖤 - ShareChat - India's own Indian Social  Network

உலகமெங்கும் உலைக்கு வழி வகுக்கிறாய்.... 


முட்களை மெடலாக பாதத்தில் குத்திக் கொண்டு, 

மூன்று வேளை உணவுக்காக உழைப்பை முழு மூச்சாய்க் கொண்டு                    உழைக்கிறாய்.... 

அணையில் 'தண்ணிய காணோம்'... காயும் பயிர்கள்... கவலையில் விவசாயிகள்..!

முத்து முத்தாய் வியர்வை,

கொத்து கொத்தாய் நெல்மணிகள்.... 

பயன் என்ன?????


உட்கார்ந்திருந்தோர் உணவின் மதிப்பு அறியாமல் சிந்துகிறான்.... 


உழைத்த விவசாயி பசியால் கண்ணீர் சிந்துகிறான்.... 


இறுதியில்.... 

உழைத்த எங்கள் கருப்பு  

நிலா.... 

வீதியில் செல்கிறது பட்டினியில் உலா... 

🌱விவசாயம் GIFs 💕 abi♥️💕 - ShareChat - India's own Indian Social Network

இளைஞர்களே!!! 

இந்தியாவின் தூண்களே !!!

அனைவரின் கொடிய எதிரி பசியை தோற்கடிப்போம்....

விவசாயிகளை காப்போம்..... 

பிறகு விஞ்ஞானம் ஏற்போம்!!!...


✍️கவிதை ✍️: இரஞ்சிதா தியாகராஜன், இயற்பியல், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.




No comments:

Post a Comment

உன்னிடத்தில் ஓர் புதையல்- Motivation 30 Days.

 உன்னிடத்தில் ஓர் புதையல்- Motivation 30 Days. தன்னம்பிக்கை: ஒவ்வொரு மனிதருக்குள்ளும் ஏதோ ஒரு தனித்திறமை அல்லது "புதையல்" ஒளிந்தி...