Sunday, October 31, 2021

யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன் ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்-புனித் ராஜ்குமார்.

யாருக்கும் தீங்கின்றி வாழ்பவன் மனிதன் ஊருக்கே வாழ்ந்து உயர்ந்தவன் புனிதன்-புனித் ராஜ்குமார்.

மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமாரின் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளது, அவரின் குடும்பத்திலிருந்து தானம் செய்யப்படும் மூன்றாவது கண் இவருடையது. இந்த கண் தானத்திற்கு பின்னால் ஒரு நெகிழ்ச்சியான கதையும் உள்ளது.


1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட டாக்டர். ராஜ்குமார் கண் தான வங்கி இதுவரை 14,901 கண்களை தானமாக பெற்றுள்ளது.  இந்த வங்கியில் கண்களை தானமாக தந்த மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் அவரது குடும்பத்தில் கண் தானம் செய்யக்கூடிய மூன்றாவது நபராவார். ஏற்கனவே அவரின் தந்தையான கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார் மற்றும் தாய் பர்வதம்மாள் ஆகியோர் இறப்புக்கு பின்னர் அவர்களின் கண்கள் இதே வங்கிக்கு தானமாக வழங்கப்பட்டது.


இது குறித்து பேசிய புனித் ராஜ்குமாரின் கண்களை தானமாக பெற்ற டாக்டர் ராஜ்குமார் கண் தான வங்கியின் நிறுவனர் புஜாங் ஷெட்டி, “ புனித் ராஜ்குமாரின் கண்களை தானமாக பெற நேற்று மதியம் மறைந்த சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரின் இரண்டாவது மகன் ராகவேந்திரா ராஜ்குமார் என்னை அழைத்தார். ஏற்கனவே 2006 ஆம் ஆண்டில் ராஜ்குமாரின் கண்களையும், 2017 ஆம் ஆண்டு பர்வதம்மாளின் கண்களையும் தானமாக பெற்றோம். இப்போது அவர்கள் இளையமகன் புனித் ராஜ்குமாரின் கண்களையும் தானமாக பெற்றுள்ளோம்.

தனது குடும்பத்தில் உள்ள அனைவரின் கண்களையும் தானமாக கொடுப்போம் என்ற ராஜ்குமாரின் உறுதிமொழியை காக்க அவர்களின் குடும்பம் இதுவரை மூன்று கண்களை தானமாக அளித்துள்ளது பெருமிதத்துக்குரியது. நேற்று மதியம் 2.45 மணியளவில் அவரின் கண்களை பெற்றோம். விரைவில் அவரின் கண்களை உரியவர்களுக்கு பொருத்துவோம்” என தெரிவித்தார்.




இது போன்ற தகவல் பெற

நன்றி.
இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

மாணவர்கள் கல்விக் களஞ்சியம் இணையதளத்திற்கு தங்களது கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், p.ramesh704@gmail.com  மெயில், அல்லது 9489666102 வாட்ஸாப்ப்  அனுப்பிட வேண்டுகிறோம். 

மிகவும் பயனுள்ள வீடியோ அனைவருக்கும் பகிர்க.

No comments:

Post a Comment

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது?

லட்சக்கணக்கில் சம்பளம்.. இஸ்ரோ வேலை! டிகிரி போதும்.. எப்படி விண்ணப்பிப்பது? இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் (ISRO) Indian Space Re...