Monday, September 11, 2023

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் ஆதார் திருத்த முகாம்.

புத்தனாம்பட்டி, நேரு நினைவு கல்லூரியில் ஆதார் திருத்த முகாம். 


ஆதார் என்பது இந்தியாவில் குறைந்தது 182 நாட்கள் வசித்த ஒருவருக்கு வழங்கப்பட்டு வரும் 12 இலக்க எண் கொண்ட  அடையாள அட்டை ஆகும்இந்த ஆதார் அடையாள அட்டை வைத்து தான் அரசின் பல்வேறு உதவித்தொகை விண்ணப்பிக்க முடியும்புதிதாக ஆதார் அட்டை பெறும் போது அதில் சில தகல்வல்கள் (கைப்பேசிஎண்முகவரிபுகைப்படம்விழித்திரைமாற்றம் தேவைப்படுகிறது10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆதார் தகவல்களை புதுப்பிப்பது   கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக திருவரங்கம் அஞ்சல்  துறைவழியாக ஆதார் திருத்த முகாம் நேரு நினைவு கல்லூரியில் இன்று (11.09.23) முதல் ஒரு வாரம் நடைபெறுகிறது. புலிவலம் தபால் உதவியாளர் R.K. கார்த்திக் மற்றும் புத்தனாம்பட்டி தபால்காரர் K.மௌனிதா ஆகியோர் இணைய வழியாக ஆதாரில் திருத்தங்களை மேற்கொண்டனர். இந்த முகாம் மூலம் இன்று சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தங்கள் ஆதாரில் திருத்தங்கள் செய்தனர்முன்னதாக இந்த முகமை கல்லூரி முதல்வர் முனைவர் .வெங்கடேசன் தொடங்கி வைத்தார்கல்லூரி தலைவர் பொன்.பாலசுப்ரமணியன்கல்லூரி செயலர் பொன்.ரவிச்சந்திரன்துணை முதல்வர் முனைவர் தமிழ்மணிஒருங்கிணைப்பாளர் முனைவர்மீனாட்சி சுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்இயற்பியல் உதவி பேராசிரியர் பொரமேஷ் முகாம் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.




இது போன்ற தகவல் பெற

https://t.me/joinchat/Ex0_TNk_10WnjXOc
இந்த Telegram  குழுவில் இணையவும்.
https://chat.whatsapp.com/JLgK0szSQzoGrB39M90W94
இந்த WhatsApp  குழுவில் இணையவும்.

நன்றி.
தகவல்: இரமேஷ்இயற்பியல் உதவி பேராசிரியர்நேரு நினைவு கல்லூரிபுத்தனாம்பட்டிதிருச்சி.

No comments:

Post a Comment

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025- Partial solar eclipse March 29, 2025.

பகுதி சூரிய கிரகணம் மார்ச் 29, 2025 Partial solar eclipse March 29, 2025. சூரிய கிரகணம் என்பது சூரியன் மற்றும் பூமி இடையில் சந்திரன் ஒரே ந...